TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 அலகு I : இலக்கணம் - சொல் : வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம், தொழிற்பெயர் வகை அறிதல் என்ற பகுதி வருகிறது.
வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று அறிதல் பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
- TNPSC previous year question
- இலக்கண குறிப்புகள் சில
- வேர்ச்சொல் அறிதல்
- வினைமுற்றுகள் :
- வினைமுற்று என்றால் என்ன?
- வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று அறிதல்
இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ், 9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
TNPSC previous year question
1. சரியான வினைமுற்று இணையைக் கூறுக
i) படு - பாடுதல்
ii) ஏறி - ஏறினாள்
iii) கூறு - கூறுதல்
iv) செல் - சொன்னாள்
A) i மட்டும்
B) ii & iv
C) iv & iii
D) அனைத்தும் சரி
E) விடை தெரியவில்லை
இலக்கண குறிப்புகள் சில
வினைமுற்று பற்றி முழுமையாக அறிய
வேர்ச்சொல் அறிதல்
- வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.
- பெரும்பாலும் கட்டளை வாக்கியங்களாகவே அமையும்.
வினைமுற்றுகள் :
ஒரு பொருள் செய்த தொழிலைக் குறித்து வந்த முற்றுப்பெற்ற சொல் வினைமுற்று எனப்படும்.
- இது திணை, பால், எண், இடம், காலம் காட்டும்.
- வேற்றுமை ஏற்காது.
எ.கா. பாடினார், வீழ்ந்தான்.
வினைமுற்று பற்றி முழுமையாக அறிய
வினைமுற்று என்றால் என்ன?
செயல் முடிந்ததைக் குறிக்கும் சொல்லே வினைமுற்று ஆகும். இது மூன்று காலங்களில் ஒன்றை உணர்த்தும்.
வினைமுற்று சொற்கள், வினைமுற்று தொடர்கள்
- வந்தான், வருகின்றான், வருவான்
- அருளரசு வந்தான்
- வளவன் நடந்தான்
இத்தொடர்களில் வந்தான், நடந்தான் என்னும் வினைச்சொற்களின் பொருள் முற்றுப்பெற்று வந்துள்ளன. இவ்வாறு, தன்பொருளில் முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை வினைமுற்றுகள் என்பர்.
வினைமுற்று எடுத்துக்காட்டு
'வந்தான், நடந்தான்' என்னும் வினைமுற்றுகள்
- 'ஆன்' என்னும் விகுதி பெற்றுள்ளதால், உயர்திணையையும், ஆண்பாலையும், ஒருமை என்ற எண்ணையும், படர்க்கை இடத்தையும், உணர்த்துகின்றன.
- 'த்' என்ற இடைநிலை வந்துள்ளதால் ( நட + த் (ந் ) + த் +ஆன்); (வா (வ) + த் (ந்) + த் + ஆன்) இஃது இறந்த காலத்தையும் உணர்த்துகிறது.
வினைமுற்று எத்தனை வகைப்படும்?
வினைமுற்று வகைகள்
என இரு வகைப்படும்.
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன?
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று.
- தெரிநிலை வினைமுற்றில் பகுதி செயலையும், விகுதி செய்பவனையும், இடைநிலை காலத்தையும் காட்டும்.
அவையாவன:
- வினையைச் செய்பவன்
- வினை செய்வதற்கு உரிய கருவி
- வினை செய்வதற்குரிய இடம்
- வினைக்குரிய செயல்
- வினை நிகழும் காலம்
- வினையால் செய்யப்படும் பொருள்
"செய்பவள் கருவி நிலஞ்செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவதுவினையே" - (ந.நூற்பா.320)
இந்நூற்பாவில் 'ஆறும்' என்னும் சொல்லில் உள்ள 'உம்' என்பது 'முற்றும்மை' ஆகும். இதனைச் 'சிறப்பும்மை' என்றும் கூறுவர்.
தெரிநிலை வினைமுற்று எடுத்துக்காட்டு
- வரைந்தான்
'வரைந்தான்' என்னும் சொல்லை நோக்கிய மாத்திரத்தில் வரைதல் என்ற நிகழ்வு இறந்த காலத்தில் (காலம்) நடைபெற்றுள்ளது என அறிய முடிகிறது.
வரைந்தான் என்னும் வினை முற்று
வரைதல் | செயல் | |
வரைந்தான் | காலம் | இறந்தகாலம் |
அவன் வரைந்தான் | செய்பவன் | அவன் |
அவன் தூரிகையால் வரைந்தான் | கருவி | தூரிகை |
அவன் தூரிகையால் சுவரில் வரைந்தான் | இடம் | சுவர் |
அவள் தூரிகையால் சுவரில் படம் வரைந்தான் | செயப்படுபொருள் | படம் |
என எழுத இடமளிக்கிறது.
மேற்கூறிய ஆறும் சிறப்புக்குரியன என்பது அவர்கள் தரும் விளக்கம். இம்முறையில் பொருள் கொள்வதால் சிறப்பற்ற சிலவும் இவ்வினையால் அறியப்படும் என்பது தெரிகிறது. அவை 'இன்னதற்கு', 'இது பயன்' என்னும் வாய்பாட்டில் அமையும்.
அதாவது மேற்கூறிய எடுத்துக்காட்டில்,
- யாரோ ஒருவர் கேட்டதற்காக வரைந்தான்;
- பணம் பெற வேண்டும் என்னும் பயன் நோக்கி வரைந்தான்
முதலியனவற்றையும் பெற வாய்ப்புண்டு.
குறிப்பு வினை முற்று என்றால் என்ன?
குறிப்பு வினைமுற்று பொருள்முதல் ஆறனையும் அடிப்படையாகக்கொண்டு, முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலான ஆறனுள் கருத்தா ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.
- தெரிநிலை வினை காட்டும் மேற்கூறிய ஆறினுள் வினை செய்பவனை மட்டும் உணர்த்தும்.
- குறிப்பு வினை முற்று பெயர்ச்சொல் அடியாகத் தோன்றும்.
- முக்காலத்தையும் குறிப்பாகக் காட்டும்.இவற்றில் காலம் காட்டும் இடைநிலைகள் இல்லை.
பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே. - நன்னூல், 321
பெயர்ச்சொல் அடியாகத் தோன்றும் என்பதால் பெயர்ச் சொற்களின் வகைகளான 1. பொருள் 2. இடம் 3. காலம் 4. சினை 5. குணம் 6. தொழில் என்னும் ஆறு பெயர்களின் அடியாகவும் குறிப்பு வினை முற்றுப் பிறக்கும் எனப் பொருள்படும்.
குறிப்பு வினைமுற்று எடுத்துக்காட்டு
குழையன், பொன்னன் | பொன் - பொருள் | குழையை உடையனவாக இருக்கிறான் |
நாடன், ஊரன், தென்னாட்டார் | நாடு - இடம் | நாட்டில் வாழ்பவன் |
தையினள், சித்திரையள், ஆதிரையான் | சித்திரை - காலம் | தையில் பிறந்தவளாக இருக்கிறாள் |
கண்ணன், மூக்கன் | கண் - சினை | கண்களை உடையவன் |
கரியன், நல்லன் | கருமை- பண்பு | நல்ல இயல்புகளை உடையவன் |
நடிகன், நடையன், எழுத்தன் | நடிப்பு- தொழில் | நடித்தலைச் செய்பவன் |
மேற்கூறிய குறிப்பு வினைமுற்றுகள் அறுவகைப் பெயர்ச்சொற்களின் அடியாகத் தோன்றின. இவற்றில் காலம் காட்டும் இடைநிலைகள் இல்லை. 'இருக்கிறான், இருக்கிறாள்' என்னும் இவற்றையே ஏனைய இருகாலங்களிலும் இருந்தான், இருந்தாள், இருப்பான், இருப்பாள் எனவும் கூறலாம். இப்படிக் கூறுவதால் குறிப்பு வினையானது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்தும் என அறியலாம்.
வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று அறிதல்
வேர்ச்சொல் | வினைமுற்று |
---|---|
பாடு | பாடினார் |
செய் | செய்தார் |
சொல் | சொன்னார் |
காண் | கண்டார் |
கொள் | கொண்டாள் |
தின் | தின்றாள் |
நில் | நின்றார் |
தா | தந்தான் |
தவிர் | தவிர்த்தான் |
பதறு | பதறினான் |
வா | வந்தான் |
நடு | நட்டான் |
கெடு | கெடுவான் |
நிலை | நிலைத்தது |
படி | படித்தான் |
சேர் | சேர்ந்தாள் |
அளி | அளிப்பான் |
உறங்கு | உறங்கினான் |
துயில் | துயின்றான் |
வாழ் | வாழ்வார் |
வனை | வனைந்தான் |
துவங்கு | துவங்கினான் |
உண் | உண்டார் |
பிழை | பிழைத்தேன் |
விரும்பு | விரும்பினான் |
உலாவு | உலாவினான் |
வெல் | வென்றான் |
வை | வைத்தான் |
பேண் | பேணார் |
செல் | சென்றான் |
பயில் | பயின்றான் |
பார் | பார்த்தார் |
நட | நடந்தான் |
அகழ் | அகழ்ந்தார் |
பருகு | பருகுவான் |
Please share your valuable comments