வினையெச்சம் - வேர்ச்சொல்லில் இருந்து வினையெச்சம் அறிதல் TNPSC சொல் இலக்கணம்

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் Part - 1 அலகு I : இலக்கணம் - சொல் : வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்றுவினையெச்சம்வினையாலணையும் பெயர்பெயரெச்சம்தொழிற்பெயர் வகை அறிதல்என்ற பகுதி வருகிறது.

வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினையெச்சம் அறிதல் பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ்,  9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC previous year question 

1. சரியான வினையெச்ச இணையைக் கூறுக

i) படு - பாடி 

ii) ஏறி - ஏறிய 

iii) கூறு - கூறிய

iv) செல் - சென்று

A) i மட்டும்

B) i & iv

C) iv & iii

D) அனைத்தும் சரி

E) விடை தெரியவில்லை 

இலக்கண குறிப்புகள் சில

வினைமுற்று பற்றி முழுமையாக அறிய

வினையெச்சம்

வினையாலணையும் பெயர்

பெயரெச்சம்

தொழில் பெயர் 

வேர்ச்சொல் அறிதல் 

  • வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.
  • பெரும்பாலும் கட்டளை வாக்கியங்களாகவே அமையும்.

வினையெச்சம்

  • கருத்து முற்றுப் பெறாமல் எஞ்சியிருப்பது வினையெச்சம் எனப்படும்.
  • வினைமுற்றுகளைத் தழுவி நின்று பொருள் முடிவை உணர்த்துகின்றன.

முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும். வினையெச்சம் முக்காலத்தையும் உணர்த்தும்.

வினையெச்சம் பற்றி முழுமையாக அறிய

தெரிநிலை வினையெச்ச விகுதிகள்

  • இ - ஓடி
  • உ - வீழ்ந்து

வினையெச்சம் எடுத்துக்காட்டு

  • ஓடி வந்தான்
  • மெல்லப் போகிறான்

இவ்வெடுத்துக்காட்டுகளில் ஓடி, மெல்ல என்பன எச்சங்கள். அவை, வந்தான், போகிறான் என்னும் வினைகளைக் கொண்டு முடிந்தமையால் வினையெச்சங்கள் எனப்பட்டன.அஃதாவது, ஓர் எச்சவினை, வினையைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.

வினையெச்சம் விளக்கம்

  • இவ்வினையெச்சம் காலவகையால் மூவகைப்படும்.
இறந்தகாலப் வினையெச்சம்
ஓடி வந்தான்
நிகழ்காலப் வினையெச்சம்
ஓடி வருகிறான்
எதிர்காலப் வினையெச்சம்
ஓடி வருவான்
  • பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் எனக் காலத்துக்கேற்ப மாறும்; பெயர்கள் மாறா.
  • வினையெச்சத்தில் எச்சங்கள் மாறா. மேலே காட்டியதுபோல அவை முக்கால வினைமுற்றுகளையும் பெற்றுவரும்.

வினையெச்சம் எத்தனை வகைப்படும்?

பெயரெச்சத்தைப் போலவே வினையெச்சமும் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.

வினையெச்சம் வகைகள்

  1. தெரிநிலை வினையெச்சம்
  2. குறிப்பு வினையெச்சம்


வேர்ச்சொல்லில் இருந்து வினையெச்சம் அறிதல்

வேர்ச்சொல்வினையெச்சம்
பாடுபாடி
செய்செய்து 
சொல்சொல்லி
காண்கண்டு 
கொள்கொண்டு 
தின்தின்று 
நில் நின்று
தா தந்து 
தவிர்தவிர்த்து 
பதறுபதறி
வா வந்து 
நடுநட்டு 
கெடுகெட்டு 
நிலைநிலைத்து 
படி படித்து 
சேர்சேர்ந்து 
அளிஅளித்து 
உறங்குஉறங்கி
துயில்துயின்று 
வாழ்வாழ்ந்து 
வனைவனைந்து 
துவங்குதுவங்கி
உண் உண்டு 
பிழை பிழைத்து 
விரும்புவிரும்பி
உலாவுஉலாவி
வெல் வென்று
வை வைத்து 
பேண் பேணி
செல்  சென்று
பயில் பயின்று
பார் பார்த்து 
நட நடந்து 
அகழ்அகழ்ந்து 
பருகு பருகி


எச்சம் என்றால் என்ன?

பால் உணர்த்தும் விகுதி பெறாமலும், முற்றுப் பெறாமலும் இருக்குமானால் எச்சம் என்பர்.

எச்சம் விளக்கம்

  • சிரித்து - எச்சம் - பால் விகுதிபெறாமல் உள்ளது. கருத்து முடிவதற்கு மற்றொரு சொல் தேவைப்படுகிறது.
  • சிரித்தான் - வினைமுற்று - பால் விகுதி பெற்றுக் கருத்து முடிந்துள்ளது

சிரித்தான் என்ற வினைமுற்று சில இடங்களில் ‘ஆன்' என்னும் விகுதி குறைந்து சிரித்த எனவும், சிரித்து எனவும் வரும். இச்சொற்கள் பொருளில் முற்றுப்பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள்; ஆதலால், எச்சம் எனப்படும்; அல்லது வினைமுற்றின் (ஆன்) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம் எனப்படும்.

எச்சம் பொருள்

  • முற்றுப்பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள்
  • வினைமுற்றின் (ஆன்,ஆள்,..) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம்

எச்சம் எடுத்துக்காட்டு

  • பெயரெச்சம் - சிரித்த கயல்விழி.

சிரித்த என்னும் முற்றுப்பெறாத எச்சவினைகள் கயல்விழி எனப் பெயரைக்கொண்டு முடிந்ததால் அவை பெயரெச்சங்கள் எனப்படும். அஃதாவது, ஓர் எச்சவினை ( வந்த, நடந்த ) பெயரைக்கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும்.

எச்சம், வினைமுற்று வேறுபாடு

வினைமுற்றுஎச்சம்
சிரித்தான்சிரித்து
ஆண்பால் விகுதி பெற்றுக் கருத்து முடிந்துள்ளதுபால் விகுதிபெறாமல் உள்ளது.
கருத்து முடிந்துள்ளதுகருத்து முடிவதற்கு மற்றொரு சொல் தேவைப்படுகிறது.


எச்சம் எத்தனை வகைப்படும்?

எச்சச் சொற்களின் கருத்தை முடிப்பதற்குத் தேவைப்படும் மற்றொரு சொல் பெயராகவும் இருக்கலாம்; வினையாகவும் இருக்கலாம்.

எச்சம் வகைகள்

  1. பெயரெச்சம்
  2. வினையெச்சம்
என இரு வகைப்படும்.


பெயரெச்சம் , வினையெச்சம் வேறுபாடு

பெயரெச்சம்
வினையெச்சம்
சிரித்த பெண்சிரித்து மகிழ்ந்தான்
சிரித்த - எச்சம்சிரித்து - எச்சம்
பெண் - பெயர்மகிழ்ந்தான் - வினை


வினையெச்சம் என்றால் என்ன?

முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும். வினையெச்சம் முக்காலத்தையும் உணர்த்தும்.

வினையெச்சம் எடுத்துக்காட்டு

  • ஓடி வந்தான்
  • மெல்லப் போகிறான்

இவ்வெடுத்துக்காட்டுகளில் ஓடி, மெல்ல என்பன எச்சங்கள். அவை, வந்தான், போகிறான் என்னும் வினைகளைக் கொண்டு முடிந்தமையால் வினையெச்சங்கள் எனப்பட்டன.அஃதாவது, ஓர் எச்சவினை, வினையைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.

வினையெச்சம் விளக்கம்

  • இவ்வினையெச்சம் காலவகையால் மூவகைப்படும்.
இறந்தகாலப் வினையெச்சம்
ஓடி வந்தான்
நிகழ்காலப் வினையெச்சம்
ஓடி வருகிறான்
எதிர்காலப் வினையெச்சம்
ஓடி வருவான்
  • பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் எனக் காலத்துக்கேற்ப மாறும்; பெயர்கள் மாறா.
  • வினையெச்சத்தில் எச்சங்கள் மாறா. மேலே காட்டியதுபோல அவை முக்கால வினைமுற்றுகளையும் பெற்றுவரும்.

வினையெச்சம் எத்தனை வகைப்படும்?

பெயரெச்சத்தைப் போலவே வினையெச்சமும் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.

வினையெச்சம் வகைகள்

  1. தெரிநிலை வினையெச்சம்
  2. குறிப்பு வினையெச்சம்

என இரு வகைப்படும்.


தெரிநிலை வினையெச்சம்

காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை, தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

தெரிநிலை வினையெச்சம் வாய்பாடு

தெரிநிலை வினையெச்ச வாய்பாடுகளாகச் செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு என்பனவற்றைக் கூறுவர்.

  • இவற்றுள் முதல் ஐந்தும் செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென ஆகியன இறந்த காலத்திற்குரியவை என்றும்,
  • நிகழ்காலத்திற்குரியது செய என்றும்,
  • எதிர்காலத்திற்குரியவை ஏனைய செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு ஆகிய ஆறும் என்றும் கூறுவர்.

இன்று செய்து, செய, செயின் என்னும் வினையெச்ச வடிவங்களே வழக்கில் காணப்படுகின்றன. மொழி காலந்தோறும் வளர்ந்து வருவது. அதனால் மொழியில் புதிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. வினையெச்ச விகுதிகள் புதியனவாகப் பல பயன்படுத்தப்படுகின்றன.

பாரி எழுந்து வந்தான்செய்து
நான் படிக்கப் போகிறேன்செய்
நீ வரின் மகிழ்வேன்செயின்


தெரிநிலை வினையெச்சம் எடுத்துக்காட்டு

  • படித்துத் தேறினான்
  • படிக்கச் செல்கின்றான்

இத்தொடர்களில் படித்து, படிக்க என்னும் சொற்கள் எச்ச வினையாய் நின்று காலத்தைக் காட்டித் தேறினான், செல்கின்றான் ஆகிய வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன. இவ்வாறு காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை, தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

குறிப்பு வினையெச்சம்

வினைச்சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று, வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளன. ஆகையால், இவை குறிப்பு வினையெச்சம் எனப்படும். குறிப்பு வினையெச்ச விகுதியாக 'அ' இடம் பெறுகிறது.

குறிப்பு வினையெச்சம் எடுத்துக்காட்டு

  • மெல்லப் பேசினான்
  • மெல்ல வந்தான்
  • கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்.

இவ்விரு தொடர்களிலும் உள்ள மெல்ல, இன்றி என்னும் எச்ச வினைச்சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை(மென்மை,இன்மை) உணர்த்தி நின்று, வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளன. ஆகையால், இவை குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

எதிர்மறை வினையெச்சம் 

வினையெச்சம் எதிர்மறை பொருளை தந்தால் அது எதிர்மறை வினையெச்சம் எனப்படும். 

  • வணங்காது நின்றான் 

ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் 

எதிர்மறை வினையெச்சம் ஈற்றெழுத்து குறைந்து வந்தால் அது ஈறுகெட்ட வினையெச்சம் எனப்படும். 

  • வணங்கா நின்றான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad