TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 அலகு I : இலக்கணம் - சொல் : வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம், தொழிற்பெயர் வகை அறிதல் என்ற பகுதி வருகிறது.
வேர்ச்சொல் அறிதல் - வேர்ச்சொல்லில் இருந்து வினையாலணையும் பெயர் அறிதல் பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ், 9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
TNPSC previous year question
1. சரியான வினையாலணையும் பெயர் இணையைக் கூறுக
i) படு - பாடுதல்
ii) ஏறி - ஏறியவர்
iii) கூறு - கூறியவர்
iv) செல் - சொன்னாள்
A) i மட்டும்
B) ii & iii
C) iv & iii
D) அனைத்தும் சரி
E) விடை தெரியவில்லை
இலக்கண குறிப்புகள் சில
வினைமுற்று பற்றி முழுமையாக அறிய
வேர்ச்சொல் அறிதல்
- வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது.
- பெரும்பாலும் கட்டளை வாக்கியங்களாகவே அமையும்.
வினையாலனையும் பெயர்:
வினைமுற்று ஒன்று பெயர்ச்சொல்லின் தன்மையைப் பெற்று, வேற்றுமை உருபை ஏற்கத் தக்கதாக இருப்பின் அது வினையாலணையும் பெயர் எனப்படும்.
(எ.கா) ஓடியதை, வீழ்ந்தவனை.
வினையாலணையும் பெயர் பற்றி முழுமையாக அறிய
வினையாலணையும் பெயர் என்றால் என்ன?
ஒரு வினைமுற்று, வினையைக் குறிக்காமல் வினைசெய்தவரைக் குறிப்பது வினையாலணையும் பெயர் எனப்படும். இது வினைக்குரிய காலம் காட்டும்; பெயர்க்குரிய வேற்றுமை உருபுகளையும் பெற்று வரும்.
தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடு
வினையாலணையும் பெயர் எடுத்துக்காட்டு
முருகன் பரிசு பெற்றான் | இத்தொடரிலுள்ள பெற்றான் என்பது, முருகன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக வந்துள்ளது. |
பரிசு பெற்றானைப் பாராட்டினர் | இத்தொடரில் உள்ள 'பெற்றானை' என்பது முருகனைக் குறிக்கும் பெயராக வந்துள்ளது |
இவ்விரு தொடரிலும், பெற்றான் என்னும் வினைச்சொல் வந்துள்ளது.
பெற்றானை | இறந்தகாலம் |
பெறுகின்றானை | நிகழ்காலம் |
பெறுவானை | எதிர்காலம் |
பெற்றான் + ஐ என, இரண்டாம் வேற்றுமை உருபான ஐ ஏற்று வந்துள்ளமை காண்க.
ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்.
அது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.
வேர்ச்சொல்லில் இருந்து வினையாலணையும் பெயர் அறிதல்
வேர்ச்சொல் | வினையாலணையும் பெயர் |
---|---|
பாடு | பாடியவர் |
செய் | செய்தவர் |
சொல் | சொன்னவர் |
காண் | கண்டவர் |
கொள் | கொண்டவர் |
தின் | தின்றவள் |
நில் | நின்றவர் |
தா | தந்தவர் |
தவிர் | தவிர்தவர் |
பதறு | பதறியவர் |
வா | வந்தவர் |
நடு | நட்டவர் |
கெடு | கெடுத்தவர் |
நிலை | நிலைத்தவர் |
படி | படித்தவர் |
சேர் | சேர்ந்தவர் |
அளி | அளித்தவர் |
உறங்கு | உறங்கியவர் |
துயில் | துயின்றவர் |
வாழ் | வாழ்ந்தவர் |
வனை | வனைந்தவர் |
துவங்கு | துவங்கியவர் |
உண் | உண்டவர் |
பிழை | பிழைத்தவர் |
விரும்பு | விரும்பியவர் |
உலாவு | உலாவியவர், |
வெல் | வென்றவர் |
வை | வைத்தவர் |
பேண் | பேணியவர் |
செல் | சென்றவர் |
பயில் | பயின்றவர் |
பார் | பார்த்தவர் |
நட | நடந்தவர் |
அகழ் | அகழ்ந்தவர் |
பருகு | பருகியவர் |
Please share your valuable comments