நமது தாய்மொழியாகிய தமிழைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் தமிழைப் பலவாறாகப் போற்றுகிறார். கண்ணே! மணியே! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு. அதுபோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக் காண்போம்.
'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பில்கீழ் உள்ள இன்பத்தமிழ் பாடல் விளக்கம்.
பாடத்தலைப்புகள்(toc)
பாரதிதாசன் பற்றிய குறிப்பு TNPSC
பெயர் - பாரதிதாசன்
இயற்பெயர் - சுப்புரத்தினம்
பெற்றோர் - கனகசபை - இலக்குமி
ஊர் - புதுச்சேரி
கல்வி - தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
இயற்றியவை - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித் திட்டு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் முதலியன.
காலம் - 29.04.1891 முதல் 21. 04. 1964வரை
இதழ் - குயில்
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
சிறப்புப்பெயர்கள்
- பாவேந்தர்
- இயற்கைக் கவிஞர்
- புரட்சிக் கவிஞர் - அண்ணா அவர்களால் போற்றப்பட்டவர்.
- பகுத்தறிவுக் கவிஞர்
சிறப்புகள்
தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
படைப்புகள்
பிசிராந்தையார் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
நூல்கள்
- இருண்ட வீடு
- தமிழயக்கம்
- மணிமேகலை வெண்பா
- இசையமுது
- கண்ணகி புரட்சிக் காப்பியம்
- தமிழச்சியின் கத்தி
- குறிஞ்சித் திட்டு
- சேர தாண்டவம்
- எதிர்பாராத முத்தம்
- பெண்கல்வி
- எங்கள் தமிழ்
- சஞ்சீவி பர்வதத்தின் காதல்
- முதியோர் காதல்
- பிசிராந்தையார்
- படித்த பெண்கள்
- கிளையினுள் பாம்பு
- பாரதிதாசன் கவிதைகள்
கவிதை நூல்கள்
தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்.
பாரதிதாசன் கவிதைகள் சில
- பாண்டியன் பரிசு,
- குடும்ப விளக்கு,
- அழகின் சிரிப்பு.
இன்பத்தமிழ்- இயல் ஒன்று 6ம் வகுப்பு
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!- பாரதிதாசன்(code-box)
சொல்லும் பொருளும்
- நிருமித்த - உருவாக்கிய
- சமூகம் - மக்கள் குழு
- விளைவு - வளர்ச்சி
- அசதி - சோர்வு
பாடலின் பொருள்
தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது.
தமிழுக்கு நிலவு என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.
தமிழுக்கு மணம் என்று பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும்.
தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.
தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது.
தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.
நூல் வெளி
இப்பாடல், 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise இன்பத் தமிழ் மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும்.
அ) சமூகம்
ஆ) நாடு
இ) வீடு
ஈ) தெரு
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு அசதி ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி
ஆ) கோபம்
இ) வருத்தம்
ஈ) அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நிலையென்று
ஆ) நிலவென்று
இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) தமிழங்கள்
ஆ) தமிழெங்கள்
இ) தமிழுங்கள்
ஈ) தமிழ்எங்கள்
5. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
6.'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
1. விளைவுக்கு - நீர்
2. அறிவுக்கு - தோள்
3. இளமைக்கு - பால்
4. புலவர்க்கு - வேல்
ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.) பேர்- நேர்
பால் - வேல்
அறிவுக்கு - இளமைக்கு
விளைவுக்கு - புலவர்க்கு
வான் - தேன்
குறுவினா
1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள்
அமுது, நிலவு, மணம்
2. பாரதிதாசன் இயற்பெயர் என்ன?
பாரதிதாசன் இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும்
சிறுவினா
1. இன்பத் தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.
இன்பத் தமிழ் - பாடலில் எனக்குப் பிடித்த அடிகள் இரண்டு
- தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!
- தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!
2. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
நீர் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. மக்கள் ஆகிய சமூகம் அதன் வளர்ச்சிக்கு நீர் தேவை.
3. பாரதிதாசன் குறிப்பு வரைக.
பெயர் - பாரதிதாசன்
இயற்பெயர் - சுப்புரத்தினம்
பெற்றோர் - கனகசபை - இலக்குமி
ஊர் - புதுச்சேரி
கல்வி - தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
இயற்றியவை - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித் திட்டு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் முதலியன.
நிரப்புக
பாரதிதாசன் பிறந்தநாள் 29.04.1891


Please share your valuable comments