தன்னேர் இலாத தமிழ் - தண்டியலங்காரம் | 12th Standard Tamil Unit 1 & TNPSC Notes

ManiMegala 0

**TNPSC Group 2, 4 முக்கியம்** 

தண்டியலங்காரம் = 12th Standard தமிழ்

ஆசிரியர்: தண்டி | காலம்: 12ம் நூற்றாண்டு

வானம் அளந்தது அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் போற்றுவர். நிகரற்ற ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும் அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றுகிறது தண்டி (Thandi) புலவரின் தன்னேர் இலாத தமிழ்(Thanneer Ilatha Tamil) பாடல் ஒன்று.

பாடத்தலைப்புகள்(toc) 

தண்டியலங்காரம்(Thandiyalankaram) நூல் குறிப்பு 12ம் வகுப்பு பொதுத்தமிழ் இயல் ஒன்று 12th Tamil Unit 1 Notes

இலக்கண வகை : அணி இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் தண்டியலங்காரமும் ஒன்று.
பிரிவுகள்: இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
சிறப்புகள் இலக்கண நூலார், உரையாசிரியர்கள் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.
தழுவல்: காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது (Kavyadarsam Tamil translation Thandiyalankaram).
ஆசிரியர் author: தண்டி
காலம் period : பொ.ஆ ( கி.பி.) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்
Thandiyalankaram Thanneer Ilatha Tamil Poem Thanneer Ilatha Tamil Poem Meaning Diagram Illustration

அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்கள் Ani Ilakkanam books in Tamil அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள்
  • தண்டியலங்காரம்
  • மாறனலங்காரம்
  • குவலயானந்தம்
  • தொல்காப்பியம்
  • வீரசோழியம்
  • இலக்கண விளக்கம்
  • தொன்னூல் விளக்கம்
  • முத்துவீரியம்

நூல்வெளி

பாடப்பகுதி, பொருளணியியலில் இடம்பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். 

  • 'தமிழில்' அணியிலக்கணம் கூறும் நூல்களுள் தண்டியலங்காரம் முதல் நூலாகும்.
  • தண்டி என்பவரால் வடமொழியிலுள்ள "காவ்யதர்சம்" என்னும் நூலைக்கழுவி, இந்நூல் எழுதப்பெற்றது.
  • இந்நூல் பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்னும் இயல்களையும், 125 நூற்பாக்களையும் கொண்டுள்ளது.
  • பொதுவணியியலில் செய்யுள் வகை, அதன் இலக்கணம் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
  • பொருளணியியவில், தன்மையணி முதல் பாவிகவணி வரை 35 அணிகளின் இலக்கணமும் கூறப்பட்டுள்ளன:
  • சொல்லணியியலில் மடக்கின் வகைகள், அவற்றின் இலக்கணம், சித்திரகவிகளின் இலக்கணம், வழு, வழுவமைதி ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
  • பெருங்காப்பியத்தின் இலக்கணமும் இந்நூலுன் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்நூலுக்குப் பின்னர், சந்திராலோகம், குவலாயனந்தம், மாறனலங்காரம் போன்ற அணியிலக்கண நூல்கள் தோன்றியுள்ளன.

தன்னேர் இலாத தமிழ் (தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்) - தண்டி - Thanneer Ilatha Tamil Poem Meaning

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது தன்னேர் இலாத தமிழ்* - தண்டி

பா வகை : இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா

பாடலின் பொருள்:

  • ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, மக்களால் போற்றப்பட்டு, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒன்று.

  • ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்-ஆங்கவற்றுள்

பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கி ஒப்புவமை இல்லாது இருப்பது இன்னொன்று. 

  • மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

இருளைப் போக்கும் இவ்விரண்டில் ஒன்று ஒளிர்கின்ற கதிரவன்; 

  • தன்னேர் இலாத தமிழ்*

இன்னொன்று தனக்கு நிகரில்லாத தமிழ்.

அணி : பொருள் வேற்றுமை அணி(Porul Vetrumai Ani with explanation)

விளக்கம் : இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.

தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால், இது, 'பொருள் வேற்றுமை அணி' ஆயிற்று. 

இது, வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

அணியிலக்கணம் பற்றி அறிய

அணியிலக்கணம் விளக்கம் 

இலக்கணக்குறிப்பு - 12th Tamil Grammar notes

No. சொல் இலக்கணக்குறிப்பு
1 உயர்ந்தோர் வினையாலணையும் பெயர்
2 வெங்கதிர் பண்புத்தொகை
3 இலாத இல்லாத என்பதன் இடைக்குறை

உறுப்பிலக்கணம் - Thandiyalankaram Ilakkanam Notes

உறுப்பிலக்கணம் விளக்கம் (Pagupatha Uruppilakkanam) 
No. சொல் உறுப்பிலக்கணம்
1 வந்து = வா(வ) + த் (ந்) + த் + உ
2 உயர்ந்தோர் = உயர் + த் (ந்) + த் + ஓர்
  • உயர் - பகுதி
  • த் - சந்தி ; த் (ந்) ஆனது விகாரம்
  • த் - இறந்தகால இடைநிலை
  • ஓர்- பலர்பால் வினைமுற்று விகுதி.
  • (ஆர் என்பதன் ஈற்றயலெழுத்தான 'ஆ' 'ஓ' ஆகத் திரியும்-நன். 353)
3 விளங்கி = விளங்கு + இ
  • விளங்கு- பகுதி
  • இ - வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

புணர்ச்சி விளக்கம்
No. சொல் புணர்ச்சி விதி
1 ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
2 தனியாழி = தனி + ஆழி
3 வெங்கதிர் = வெம்மை + கதிர்

கற்பவை கற்றபின் Thandiyalankaram book back questions and answers

'தன்னேர் இலாத தமிழ்' என்னும் தலைப்பில் சொற்பொழிவில் பங்கேற்பதற்கான ஐந்து நிமிட உரை ஒன்றை உருவாக்குக.

வானம் அளந்தது அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் பலர் போற்றுவர். 

நிகரற்ற ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும், அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றுகிறது தண்டி புலவரின் 'தன்னேர் இலாத தமிழ்' பாடல் ஒன்று.

'தன்னேர் இலாத தமிழ்' என்பதன் பொருள் 'தனக்கு நிகரில்லாத தமிழ்'.

உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, மக்களால் போற்றப்பட்டு, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது கதிரவன்.

பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கி அகற்றுவது தமிழ்

தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமை பல. அவற்றுள் மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கி அகற்றுவது தமிழ். எனவே 'தன்னேரிலாதது தமிழ்' அதாவது தனக்கு நிகரில்லாத தமிழ்.

Sources & References

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு TNPSC Group 4 VAO, 2 2A Tamil Study Material: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

TNPSC கேள்விகள் - தண்டியலங்காரம்

1. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்களில் பொருந்தாதது எது?

A) தண்டியலங்காரம்
B) மாறனலங்காரம்
C) குவலயானந்தம்
D) தொல்காப்பியம்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: D) தொல்காப்பியம்

2. வெம்மை + கதிர் இவற்றை சேர்த்து எழுதக் கிடைப்பது எது?

A) வெங்கதிர்
B) வெம்கதிர்
C) வெண்கதிர்
D) வெம்மைகதிர்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) வெங்கதிர்

3. 'ஆங்கவற்றுள்' - இதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

A) ஆங்கு + வற்றுள்
B) ஆங்க + வற்றுள்
C) ஆங்க + அவற்றுள்
D) ஆங்கு + அவற்றுள்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: D) ஆங்கு + அவற்றுள்

4. 'உயர்ந்தோர்' - என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?

A) வினையாலணையும் பெயர்
B) வினைமுற்று
C) பெயரெச்சம்
D) வினையெச்சம்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) வினையாலணையும் பெயர்

5. 'வெங்கதிர்' - என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?

A) பெயரெச்சம்
B) பண்புத்தொகை
C) உவமைத்தொகை
D) உருவகம்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) பண்புத்தொகை

6. 'இல்லாத' என்பதன் இடைக்குறை எது?

A) இல்லா
B) இல்த
C) இலாத
D) இல்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) இலாத

7. 'தன்னேர் இலாத தமிழ்' என்று தமிழை சிறப்பித்துக் கூறும் நூல் எது?

A) தண்டியலங்காரம்
B) மாறனலங்காரம்
C) குவலயானந்தம்
D) தொல்காப்பியம்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) தண்டியலங்காரம்

8. தண்டி புலவரின் காலம் என்ன?

A) கி.பி. 9ஆம் நூற்றாண்டு
B) கி.பி. 10ஆம் நூற்றாண்டு
C) கி.பி. 12ஆம் நூற்றாண்டு
D) கி.பி. 11ஆம் நூற்றாண்டு
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) கி.பி. 12ஆம் நூற்றாண்டு

9. தண்டியலங்காரம் எவ்வகை நூலைத் தழுவி எழுதப்பட்டது?

A) வடமொழி 'காவ்யாதர்சம்'
B) அகத்தியம்
C) வீரசோழியம்
D) நன்னூல்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) வடமொழி 'காவ்யாதர்சம்'

10. இப்பாடலில் பயின்று வரும் அணியைக் குறிப்பிடுக:

A) உவமையணி
B) உருவகவணி
C) பொருள் வேற்றுமை அணி
D) தற்குறிப்பேற்ற அணி
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) பொருள் வேற்றுமை அணி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.