வானம் அளந்தது அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் போற்றுவர். நிகரற்ற ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும் அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றுகிறது தண்டி புலவரின் தன்னேர் இலாத தமிழ் பாடல் ஒன்று.
பாடத்தலைப்புகள்(toc)
தண்டியலங்காரம் நூல் குறிப்பு 12ம் வகுப்பு பொதுத்தமிழ் இயல் ஒன்று
இலக்கண வகை : அணி இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் தண்டியலங்காரமும் ஒன்று.
பிரிவுகள் : இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
சிறப்புகள்: இலக்கண நூலார், உரையாசிரியர்கள் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.
தழுவல்: காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.
ஆசிரியர் : தண்டி
காலம் : பொ.ஆ ( கி.பி.) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள்
- தண்டியலங்காரம்,
- மாறனலங்காரம்,
- குவலயானந்தம்.
அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள்
- தொல்காப்பியம்,
- வீரசோழியம்,
- இலக்கண விளக்கம்,
- தொன்னூல் விளக்கம்,
- முத்துவீரியம்.
நூல்வெளி
பாடப்பகுதி, பொருளணியியலில் இடம்பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும்.
தன்னேர் இலாத தமிழ் (தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்) - தண்டி
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்-ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்*-தண்டி
பா வகை : இரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா
பாடலின் பொருள்:
உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, மக்களால் போற்றப்பட்டு, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒன்று.
பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கி ஒப்புவமை இல்லாது இருப்பது இன்னொன்று.
இருளைப் போக்கும் இவ்விரண்டில் ஒன்று ஒளிர்கின்ற கதிரவன்;
இன்னொன்று தனக்கு நிகரில்லாத தமிழ்.
அணி : பொருள் வேற்றுமை அணி
விளக்கம் : இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால், இது, 'பொருள் வேற்றுமை அணி' ஆயிற்று.
இது, வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.
இலக்கணக்குறிப்பு
உயர்ந்தோர் - வினையாலணையும் பெயர்
வெங்கதிர் - பண்புத்தொகை
இலாத - இல்லாத என்பதன் இடைக்குறை
உறுப்பிலக்கணம்
வந்து = வா(வ) + த் (ந்) + த் + உ
- வா - பகுதி ; வ எனக் குறுகியது விகாரம்
- த் - சந்தி ; த் (ந்) ஆனது விகாரம்
- த் - இறந்தகால இடைநிலை
- உ - வினையெச்ச விகுதி.
உயர்ந்தோர் = உயர் + த் (ந்) + த் + ஓர்
- உயர் - பகுதி
- த் - சந்தி ; த் (ந்) ஆனது விகாரம்
- த் - இறந்தகால இடைநிலை
- ஓர்- பலர்பால் வினைமுற்று விகுதி.
- (ஆர் என்பதன் ஈற்றயலெழுத்தான 'ஆ' 'ஓ' ஆகத் திரியும்-நன். 353)
விளங்கி = விளங்கு + இ
- விளங்கு - பகுதி.
- இ - வினையெச்ச விகுதி.
புணர்ச்சி விதி
ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
- விதி:'உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்' -ஆங்க் + அவற்றுள்
- விதி: 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே'-ஆங்கவற்றுள்.
தனியாழி = தனி + ஆழி
- விதி: 'இ ஈ ஐ வழி யவ்வும்' - தனி + ய் + ஆழி
- விதி: 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' - தனியாழி.
வெங்கதிர் = வெம்மை + கதிர்
- விதி: 'ஈறுபோதல்' -வெம் + கதிர்
- விதி: 'முன்னின்ற மெய் திரிதல்' -வெங்கதிர்.
கற்பவை கற்றபின்
'தன்னேர் இலாத தமிழ்' என்னும் தலைப்பில் சொற்பொழிவில் பங்கேற்பதற்கான ஐந்து நிமிட உரை ஒன்றை உருவாக்குக.
வானம் அளந்தது அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் பலர் போற்றுவர்.
நிகரற்ற ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும், அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றுகிறது தண்டி புலவரின் 'தன்னேர் இலாத தமிழ்' பாடல் ஒன்று.
'தன்னேர் இலாத தமிழ்' என்பதன் பொருள் 'தனக்கு நிகரில்லாத தமிழ்'.
உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, மக்களால் போற்றப்பட்டு, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது கதிரவன்.
பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கி அகற்றுவது தமிழ்.
தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமை பல. அவற்றுள் மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கி அகற்றுவது தமிழ். எனவே 'தன்னேரிலாதது தமிழ்' அதாவது தனக்கு நிகரில்லாத தமிழ்.
TNPSC கேள்விகள் - தண்டியலங்காரம் - தன்னேர் இலாத தமிழ்
1. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்களில் பொருந்தாதது
B) மாறனலங்காரம்
C) குவலயானந்தம்
D) தொல்காப்பியம்
E) தெரியவில்லை
2. வெம்மை + கதிர் இவற்றை சேர்த்து எழுதக் கிடைப்பது
B) வெம்கதிர்
C) வெண்கதிர்
D) வெம்மைகதிர்
3. ஆங்கவற்றுள் இவற்றை பிரித்து எழுத கிடைப்பது
B) ஆங்க + வற்றுள்
C) ஆங்க + அவற்றுள்
D) ஆங்கு + அவற்றுள்
E) தெரியவில்லை
4. உயர்ந்தோர் - இலக்கணக்குறிப்பு
B) வினைமுற்று
C) விகுதி
D) வினையெச்சம்
E) தெரியவில்லை
5. வெங்கதிர் - இலக்கணக்குறிப்பு
B) பண்புத்தொகை
C) உவமைத்தொகை
D) உருவகம்
E) தெரியவில்லை
6. இல்லாத என்பதன் இடைக்குறை
B) இல்த
C) இலாத
D) இல்லை
E) தெரியவில்லை
7. 'தன்னேர் இலாத தமிழ்' என்று தமிழை சிறப்பித்து கூறும் நூல்
B) மாறனலங்காரம்
C) குவலயானந்தம்
D) தொல்காப்பியம்
E) தெரியவில்லை
8. தண்டி புலவரின் காலம்
B) பொ.ஆ ( கி.பி.) 10ஆம் நூற்றாண்டு
C) பொ.ஆ ( கி.பி.) 12ஆம் நூற்றாண்டு
D) பொ.ஆ ( கி.பி.) 11ஆம் நூற்றாண்டு
E) தெரியவில்லை
9. தண்டியலங்காரம் குறித்த தவறான கூற்று
B) அணி இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் ஒன்று.
C) இந்நூலை எழுதியவர் தண்டி
D) காவியதர்சம் என்னும் தெலுங்கு இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது
E) தெரியவில்லை
10. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.
B) மாறனலங்காரம்
C) குவலயானந்தம்
D) தொல்காப்பியம்
E) தெரியவில்லை

.png)
Please share your valuable comments