42 தமிழ் ஒரேழுத்து ஒரு மொழி - Monosyllabic words and their meanings in Tamil Language

தமிழ்மொழி பழங்காலம் தொட்டு இயங்கி வருதல் அதன் பெருஞ்சிறப்பு. தொன்மையான மொழிகள் பல ஏட்டளவில் மட்டுமே இருக்கக் காண்கிறோம். வேறு சில மொழிகளில் ஒரு நூற்றாண்டு, இரு நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்களைப் படிக்க முடியாத நிலைமையில் இருப்பதையும் காண்கிறோம். ஆனால் தமிழறிந்த, தமிழ்ப் பற்றுள்ள, தமிழர் யாரும் கற்க முடியாது எனச் சொல்லும் ஒரு நூல்கூடத் தமிழில் இல்லை. இப்பேறு எதனால்? தமிழ்மொழி செந்தமிழாகவும் செழுந்தமிழாகவும் உயிரோட்டத் தமிழாகவும் இருந்து வருவதாலேயே ஆகும். 

தமிழில் உள்ள 256 எழுத்துக்களில் ஒரேழுத்து ஒரு மொழி எண்ணிக்கை 42 ஆகும். 

42 எழுத்துக்களுக்கு தனிப்பெயர்கள் உண்டு.

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC previous year questions

1. 'கோ' - இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக (gr-2 2017)

(A) அரசன் 

(B) ஆதவன்

(C) அன்னம் 

(D) அன்பு

2. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி (ccse2-2018)

(A) கோ

(B) கா 

(C) பூ 

(D) ஆ 

நன்னூல்படி, ஒரேழுத்து ஒரு மொழி 42 எழுத்துக்கள்- தமிழ்

  • தமிழில் சொல் என்பதற்கு நெல் என்பது ஒரு பொருள். 

சொன்றி, சோறு என்பவை அவ்வழியில் வந்தவை. நெல்லில் பதர் உண்டு. ஆனால் சொல்லில் பதர் இருத்தலாகாது. 

  • "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது தொல்காப்பியர் மொழி. 

மொழியை (சொல்லை) ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூன்று வகையாக்குவர். 

  • மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். 

ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன?

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.

ஒரேழுத்து பற்றிய தொல்காப்பியர் கருத்து

ஓர் எழுத்து மொழி எவை எனின் நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி என்பார் தொல்காப்பியர்

குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதைக் குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே என்பார்.

ஒரேழுத்து பற்றிய பவணந்தி முனிவர் கருத்து

நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி என்றால் உயிர்நெட்டெழுத்துகள் ஏழுமா? 

உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் 126 உண்டே! அவை மொழியாகும் தன்மை இல்லாதனவா என ஐயம் தோன்றும். இந்த ஐயம் தோன்றாமல் இருக்கவே உயிர் நெடில் எழுத்து என்றோ உயிர்மெய் நெட்டெழுத்து என்றோ கூறாமல் நெட்டெழுத்து என்று மட்டும் கூறினார். தொல்காப்பியருக்கு நெடிதுநாள் பின்னே தோன்றிய நன்னூலார் நொ, து என்னும் உயிர்மெய் எழுத்துகளும் பொருளுடைய ஓர் எழுத்து மொழி என்பார். 

நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.(alert-success)

ஒரேழுத்து ஒரு மொழி யாவை?

தமிழில் சொல்லின் முதலில் வரும் எழுத்து, இடையில் வரும் எழுத்துஇறுதியில் வரும் எழுத்து, ஒன்றையொன்று அடுத்து வரும் எழுத்து என வரம்பு உண்டு. அதன்படி எல்லா எழுத்துகளும் எல்லா நிலைகளிலும் வாரா. சில எழுத்துகள் அரிச்சுவடியில் இருப்பினும் அவை மொழிநிலையில் இடம்பெறா. இவற்றைப் போலவே நெட்டெழுத்துகளில் சொல் என்னும் நிலையைப் பெறாதவையும் உண்டு. 

"உயிர், மவில் ஆறும் த, ப, நவில் ஐந்தும்

க, வ, சவில் நாலும் யவ்வில் ஒன்றும்

ஆகும் நெடில் நொ, து ஆம்குறில் இரண்டோடு

ஓரெழுத்து இயல்பதம் ஆறுஏழ் சிறப்பின"

 - நன்னூல் 129(code-box)

 

  • உயிர் வருக்கம், ம - வருக்கம் ஒவ்வொன்றிலும் ஆறும்,
  • த, ப, ந வருக்கங்கள் ஒவ்வொன்றிலும் ஐந்தும்,
  • க, வ, ச வருக்கங்கள் ஒவ்வொன்றிலும் நான்கும்,
  • ய - கர வருக்கத்தில் ஒன்றும்

ஆக நெட்டெழுத்துகளால் ஆகிய சொற்கள் நாற்பது.

  • நொ, து என்னும் குறிலெழுத்துகளால் ஆகிய சொற்கள் இரண்டு.

ஆக மொத்தம் ஓரெழுத்துகளால் ஆகிய சொற்கள் நாற்பத்திரண்டு ஆகும்.

 


TNPSC - General Tamil Study Material

ஒரேழுத்து ஒரு மொழி எழுத்துக்கள்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ உயிர் வருக்கத்தில் ஆறு
மா, மீ, மூ, மை,மோ, மே
மகர வருக்கத்தில் ஆறு
தா, தீ, தூ, தே, தை
தகர வருக்கத்தில் ஐந்து
பா, பூ, பே, பை, போ
பகர வருக்கத்தில் ஐந்து
நா, நீ, நே , நை, நோ நகர வருக்கத்தில் ஐந்து
கா,கூ, கை, கோ ககர வருக்கத்தில் நான்கு
வா, வீ, வை, வௌ வகர வருக்கத்தில் நான்கு
சா, சீ, சே, சோ சகர வருக்கத்தில் நான்கு
யா யகர வருக்கத்தில் ஒன்று
நொ, து தனிக் குறில் பதம் இரண்டு

ஆக ஓரெழுத்து மொழிகள் தமிழில் நாற்பத்திரண்டு. இச்சொற்களின் பொருள்களை கீழே கண்டறிக.

ஓரெழுத்து சொற்களும் அவற்றின் பொருளும் - Monosyllabic words and their meanings in Tamil Language

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் 

உயிர் இனம் (6) - ஆ, ஈ, ஊ, ஏ,ஐ, ஓ

  1. ஆ - பசு
  2. ஈ - பறக்கும் பூச்சி, கொடு
  3. ஊ - இறைச்சி
  4. ஏ - அம்பு
  5. ஐ - அழகு, தலைவன், வியப்பு
  6. ஓ - வியப்பு,வினா, மதகுநீர் தாங்கும் பலகை

'ம்' இனம் (6) - மா,மீ,மு,மே,மை,மோ

  1. மா - பெரிய, சிறந்த உயர்ந்த மாமரம்,அழகு,மேன்மை,விலங்கு
  2. மீ - மேலே, உயர்ச்சி, வான்
  3. மு - மூப்பு, முதுமை
  4. மே -மேன்மை,அன்பு
  5. மை - கண்மை (கருமை), அஞ்சனம்
  6. மோ - முகர்தல், முகத்தல்

'த்' இனம் (5) - தா,தீ,தூ, தே, தை

  1. தா- கொடு,கேட்பது
  2. தீ- நெருப்பு, தீமை
  3. தூ - வெண்மை, தூய்மை
  4. தே - கடவுள்
  5. தை - தமிழ்மாதம், தைத்தல்

'த்' இனம் (1) - து - குறிலெழுத்துகளால் ஆகிய சொல்

  1. து - கெடு,பிரிவு, உண்

'ப்' இனம் (5) - பா, பூ, பே, பை, போ

  1. பா - பாட்டு, பாடல்
  2. பூ - மலர்,புவி
  3. பே - நுரை, மேகம்
  4. பை - இளமை,கைப்பை
  5. போ - செல்

'ந்' இனம் (5) - நா, நீ,நே, நை, நோ

  1. நா - நாக்கு, நாவு
  2. நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல்
  3. நே - அன்பு
  4. நை - வருந்து, இழிவு
  5. நோ - வறுமை

'ந்' இனம் (1) - நொ- குறிலெழுத்துகளால் ஆகிய சொல்

  1. நொ - துன்பம், நோய்

'க்' இனம் (4) - கா, கூ, கை, கோ

  1. கா - காத்தல், சோலை
  2. கூ - பூமி
  3. கை - உறுப்பு,கரம், ஒழுக்கம்
  4. கோ - வேந்தன், அரசன்

'ச்' இனம் (4) - சா, சீ, சே, சோ

  1. சா - மரணம்,பேய், இறந்துபோ
  2. சீ - இகழ்ச்சி
  3. சே - எருது, உயர்வு
  4. சோ - மதில், அரண்

'வ்' இனம் (4) - வா, வீ, வை, வௌ

  1. வா - வருக, அழைத்தல்
  2. வீ - மலர்
  3. வை - வைத்தல், புல்
  4. வௌ - வவ்வுதல், கெளவுதல், கவர்

'ய்' இனம் (1) - யா

  1. யா- ஒரு வகை மரம், யாவை, அகலம்

நாம் பயன்படுத்தும் ஓரெழுத்துச் சொற்கள் 

  • பூ - என்பது ஓரெழுத்து ஒரு மொழி. 
  • கா - என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி. 

இவை இரண்டையும் இணைத்துப் பூங்கா எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர். 

  • யா - என்பது வினா. 

யாது, யாவர், யாவன், யாவள், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து' 'யா' தானே! 

ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இன்னவாறான ஓரெழுத்து ஒரு மொழிகளும் உள்ளன. பூங்கா இணைந்தது போல ஆ, மா என்பவை இணைந்து ஆமா என்னும் கலைச்சொல் வடிவம் கொண்டமை பண்டைக் காலத்திலேயே உண்டு. காட்டுப் பசுவுக்கு 'ஆமா' என்று பெயர். 

  • மா - என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று.

நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். உலகப் பெரும் பரப்பையும் இயக்கத்தையும் சுட்ட மாஞாலம் என்கிறோம். இவ்வாறெல்லாம் இயல்பாக மா என்னும் ஓரெழுத்து ஒருமொழி மக்கள் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் திகழ்கின்றது. மாநிறம் என மாந்தளிர் நிறத்தை ஒப்புமை காட்டி உரைப்பது பெருவழக்கு. 

  • மா - என்பது விலங்கையும் குறிக்கும். 

அரிமா,பரிமா,நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது. 

  • - என்னும் பொதுப் பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. 

மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு. 

போ, வா, நீ, சூ, சே, சை, சோ என்பவை எல்லாம் இக்காலத்தில் அனைவரும் வழங்கும் சொற்களே. 

  • ஆன் என்பது ஆகியது;
  • மான் என்பது மா ஆகியது; 
  • கோன் என்பது கோ ஆகியது; 
  • தேன் என்பது தே ஆகியது; 
  • பேய் என்பது பே ஆகியது. 

இவையெல்லாம் காலவெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை. 

  • ஏய் என்பது என வழக்கில் ஊன்றிவிட்டது.

எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏய் என்பது என்னோடு கூடு பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது. அம்பை ஏவு என்பர். ஏவுதல் என்பது 'அம்புவிடுதல்'. ஏவும் அம்பு 'ஏ' என்றாகியது. 

  • அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான். 
  • அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்; 
  • அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது. 

ஏவு என்னும் சொல் 'ஏ' என்று ஆனது மட்டுமன்றி 'எய்' எனவும் ஆயிற்று. 

  1. ஏவுகின்ற அம்பைப் போல் கூர்முள்ளை உடைய முள்ளம்பன்றியின் பழம்பெயர் எய்ப்பன்றி
  2. அம்பை எய்பவர் எயினர்.அவர்தம் மகளிர் எயினியர். சங்கப்புலவர்களுள் எயினனாரும் உளர். எயினியாரும் உளர். 

நினைவுகூர்க

42 தமிழ் ஒரேழுத்து ஒரு மொழி - Download (download)

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு" - திருக்குறள்1 

எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.

நன்னூலார் போட்ட பட்டியலில் உள்ளவை பற்றிக் கருதாமல் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்த்தால் சில விளக்கங்கள் கிட்டும். நன்னூலார் கூறிய சில ஓரெழுத்து ஒரு மொழிகள் இன்று வழக்கில் இல்லாதவை என்றும், வழக்கிலுள்ள சில ஓரெழுத்து ஒரு மொழிகள் நன்னூலார் கூறிய பட்டியலில் இல்லாதவை என்றும் தெளிவு ஏற்படும். 

தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றைக் கையில் கனியாகக் காட்டும். இத்தகைய தமிழ்மொழியின் சொற்களை, மொழிப்பற்றை மீட்டெடுத்தலே வழிகாட்டிகளுக்கு முதல் கடமையாய் நிற்கிறது. மொழிப்பற்றுள்ள ஒருவனே மொழியை வளர்ப்பான்; அதன் இனத்தை, பண்பாட்டைக் காப்பான்.

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி பொதுத்தமிழ் Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 9. ஓரெழுத்து ஒருமொழியின் உரிய பொருளைக் கண்டறிதல் என்ற தொகுப்பிற்காக பழைய மற்றும் புதிய 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழிகளை எடுத்து எழுதுக.

(ஏ, தீ, கோ, பூ, ஐ, சோ)

1. அரண் - சோ

2. அரசன் - கோ 

3. அம்பு - ஏ 

4. தலைவன் - ஐ 

5. நெருப்பு - தீ 

6. மலர் - பூ 

அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை உரிய கட்டத்தில் நிரப்புக.

(பாடல், சோலை, வருக, பசு, கொடு, நாக்கு)

1. கா - சோலை

2. தா - கொடு

3. நா - நாக்கு

4. பா - பாடல்

5. வா - வருக

6. ஆ - பசு

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உணர்த்தும் ஒரெழுத்து ஒருமொழிகளை அறிந்து தொடரை நிரப்புக.

(வா, கை, ஈ, சீ, போ,ஆ)

1. நான் கொடுக்கும் ஓர் எழுத்து கை .

2. நான் அழைக்கும் ஓர் எழுத்து வா.

3. நான் வாயைத்திறக்க வைக்கும் ஓர் எழுத்து .

4. நான் இகழும் ஓர் எழுத்து சீ. 

5. நான் பறக்கும் ஓர் எழுத்து ஈ.

6. நான் வழி அனுப்பும் ஓர் எழுத்து போ.

தொடர்புடையவை

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

ஓரெழுத்து ஒருமொழி

ஓரெழுத்து சொற்கள்

ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக

ஓரெழுத்து ஒருமொழி shortcut

ஓரெழுத்து சொற்கள் 42

ஓரெழுத்து ஒருமொழி 42

ஓரெழுத்து ஒருமொழிகள்

ஓரெழுத்து ஒருமொழி 42 சொற்கள்

ஓரெழுத்து சொற்கள் 50

TNPSC previous year questions

1. 'கோ' - இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக (gr-2 2017)

(A) அரசன் 

(B) ஆதவன்

(C) அன்னம் 

(D) அன்பு

2. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி (ccse2-2018)

(A) கோ

(B) கா 

(C) பூ 

(D) ஆ 

3. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

கா - சோலை

தா - கொடு

நா - நாக்கு

பா - பாடல்

4. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

அரண் - சோ

அரசன் - கோ 

அம்பு - ஏ 

தலைவன் - ஐ 

5. ஊ - என்ற சொல் குறிப்பது

இறைச்சி

உணவு

ஊன்

உண் 

6. சே - என்ற சொல் குறிப்பது

மரணம்

எருது

சேய்மை

இகழ்ச்சி

7. சோ -  என்ற சொல் குறிப்பது

சோகம்

எருது 

இகழ்ச்சி

மதில்

8. கா - என்ற ஓரெழுத்து குறிப்பது

சோலை

கால் 

அரசன்

கனவு

9. நா - என்ற ஓரெழுத்து குறிப்பது

நாவு

அன்பு

இழிவு

வறுமை

10. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

நே - அன்பு

நை - இழிவு

நோ - வறுமை

நொ - நோய்

11. பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது 

தூ - தூய்மை

தே - கடவுள்

து - உண்

ஊ - இறைச்சி

12. பே - என்ற ஓரெழுத்து குறிப்பது

மேகம்

பேய்

பெண்

கடவுள்

13. சோலையைப் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி

சோ 

கா

சே

கே

14. அம்பைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி

ஓ 

ஐ 

15. மூப்பு - ஓரெழுத்து ஒரு மொழி

மூ 

மோ

மீ 

மு

16. மலரைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி

வீ

வி

வே

பு

17. நோய் என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி

நெ 

நை

நே 

நொ

18. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது யாருடைய கூற்று

அகத்தியர் 

தொல்காப்பியர்

பவணந்தி முனிவர்

திருவள்ளுவர் 

19. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்

அகத்தியர் 

தொல்காப்பியர்

சாத்தனார் 

 பவணந்தி முனிவர் 

20. மேகத்தைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி

பே

பெ

பு

மே 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad