12-ஆம் வகுப்பு தமிழ், இயல் 1 - இளந்தமிழே - சிற்பி பாலசுப்பிரமணியம் | விரிவான இலக்கணம் மற்றும் பகுபத உறுப்பிலக்கணம்

ManiMegala 0

12-ஆம் வகுப்பு (12th Standard Tamil) பயிலும் மாணவர்கள் மற்றும் TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்காக, இயல் 1-ல் உள்ள 'இளந்தமிழே' கவிதைப்பேழையின் முழுமையான இலக்கணக் குறிப்புகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். இக்கட்டுரையில், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் குறிப்புகள், தேர்வுக்கு மிக முக்கியமான புணர்ச்சி விதிகள் (Punarchi Vidhigal) மற்றும் பகுபத உறுப்பிலக்கணம் (Pagupatha Uruppilakkanam) ஆகியவை எளிய அட்டவணை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பாடப்புத்தக வினா-விடைகளை (Book Back Q&A) எளிதில் புரிந்துகொள்ளவும், தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறவும் இந்த வழிகாட்டி பெரிதும் உதவும்.

தமிழ்மொழி நம் அடையாளம்; பண்பாட்டின் நீட்சி தமிழ், தோன்றிய காலந்தொட்டு மக்களால் பேசப்பட்டு, எழுதப்பட்டு உயிர்ப்போடும் இளமையோடும் இருக்கிறது. இன்றும் தமிழ்மொழியின் புகழ் எத்திசையும் பரவியுள்ளது. அத்தகைய தமிழின் பெருமையை மரபுக்கவிஞர்கள் பலர் பாடியுள்ளனர். தமிழ், பல புதிய கருத்துகளால் தன்னைத் துறைதோறும் புதுப்பித்துக்கொண்டு வருவதால் தமிழை 'இளந்தமிழ்' என்று பெருமைப்படுத்துகிறார் கவிஞர் சிற்பி.

பாடத்தலைப்புகள்(toc) 

சிற்பி பாலசுப்பிரமணியம் - முக்கிய தகவல்கள் Sirpi Balasubramaniam Tamil Notes TNPSC

பெயர்: சிற்பி பாலசுப்பிரமணியம்
பெற்றோர்: பொன்னுசாமி, கண்டியம்மாள்
பிறப்பிடம்: ஆத்துப் பொள்ளாச்சி, கோவை மாவட்டம்
பிறப்பு: 29-1-1936
பணி:  பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்;
பன்முகம் : கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்
விருதுகள்: சாகித்திய அகாதெமி விருது (Sahitya Akademi Award Books இருமுறை- லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய 'அக்னிசாட்சி' (மலையாளம்) மொழிபெயர்ப்புக்காகவும், ஒரு கிராமத்து நதி (2002) என்னும் கவிதை நூலிற்காகவும்)
கவிதை நூல்கள்: ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், மௌன மயக்கங்கள், பூஜ்யங்களின் சங்கிலி
உரைநடை நூல்கள்: இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும்
12th Tamil Unit 1 - Ilanthamilae | Detailed Grammar & Pagupatha Uruppilakkanam (2026 Update) PDF

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு: 

1936 ஆம் ஆண்டு சூலை 29 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை என்னும் ஊரில் பிறந்தார்.

கல்வி: 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 'தொல்காப்பியமும் நவீன மொழியியலும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

பணி:

பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் பேராசிரியராகவும், பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

சிறப்பு

  • தமிழக அரசின் 'பாவேந்தர் பரிசு' பெற்றவர். 
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 'ஆங்கில இலக்கிய நூற்பரிசு' பெற்றவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வி.ஜி.பி. விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
👆வி.ஜி.பி. விருது (VGP Awards) என்பது தமிழ் மொழி, கலை, இலக்கியம் மற்றும் சமூகத் தொண்டு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிப்பதற்காக வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் (VGP Ulaga Thamizh Sangam) மூலம் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும்.

கவிதை சமூகத்தின் போர்வாள் என்ற நோக்குடையவர். எல்லார்க்கும் எல்லாம் என்ற பொதுவுடைமைச் சிந்தனை உடைய புதுக்கவிஞர். 

நூல்கள்

புதிய உருவம், புதிய நடை, போலித்தனம் இல்லாத படைப்பு ஆகியன இவரது கவிதைக் கோட்பாடுகள். 

கவிதை நூல்கள்

  • சிரித்த முத்துகள்
  • நிலவுப்பூ
  • ஒளிப்பறவை
  • சர்ப்பயாகம்
  • சூரிய நிழல்
  • ஆதிரை
  • மௌன மயக்கங்கள்
  • பூஜ்யங்களின் சங்கிலி 
  • புன்னகை பூக்கும் பூனைகள்
  • இறகு
  • ஒரு கிராமத்து நதி - சாகித்திய அகாதெமி விருது (Sahitya Akademi Award Books) (2002)

உரைநடை நூல்கள்:

  • இலக்கியச் சிந்தனைகள்
  • மலையாளக் கவிதை
  • அலையும் சுவடும்
போன்ற சிறந்த படைப்புகளைத் தந்த வானம்பாடிக் கவிஞர் மணிவிழாக் கண்ட பெருமைக்குரியவர். 
🙏மணிவிழா (Mani Vizha) என்பது ஒரு நபர் தனது 60-வது பிறந்தநாளைக் (60th Birthday) கொண்டாடும் தமிழ் மரபு வழி விழாவாகும். இதனைப் பொதுத்தமிழில் அறுபதாம் கல்யாணம் என்றும் அழைப்பார்கள்.
  • படிமம் மற்றும் கதைக் கவிஞர்
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கீழ் உள்ள இளந்தமிழே பாடலின் தொடக்கத்திலேயே ஒரு அற்புதமான காட்சிப் படிமத்தை (Visual Imagery) கொண்டு வந்துள்ளார்:

"செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!"
📌கவிஞர்கள் தாங்கள் சொல்ல விரும்பும் ஒரு பொருளை அல்லது உணர்வை, வாசகர்கள் தங்கள் புலன்கள் (கண், காது, மூக்கு, சுவை, தொடுதல்) வழியாக நேரடியாக உணருமாறு வார்த்தைகளால் சித்திரம் வரைவதே 'படிமம்' எனப்படும்.
  • இவருடைய கவிதை நூல்கள் அனைத்தையும் தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் 'சிற்பியின் கவிதை வானம்' எனும் சிறந்த தொகுப்பு நூலாக வெளியிட்டிருக்கிறது.

இலக்கியப் பங்களிப்பு

வானம்பாடி இயக்கம்: 

சொற்சித்திரம் வடித்துச் சொக்க வைக்கும் இவர் பாட்டாளிகளின் கூட்டாளி; வானம்பாடிக் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த ஒரு வானம்பாடி
1970-களில் தமிழ் கவிதை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வானம்பாடி கவிதை இயக்கத்தின் முன்னணி கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். புதுக்கவிதையைச் சமூகப் பார்வையோடு மக்களிடம் கொண்டு சென்றதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

இதழாசிரியர்:

 'வானம்பாடி' இதழை நடத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

விருதுகளும் சிறப்புகளும்

சிற்பி அவர்கள் 'சாகித்திய அகாதெமி' விருதினை இரண்டு முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது:

2001: லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய 'அக்னிசாட்சி' (மலையாளம்) என்ற புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக மொழிபெயர்ப்பு விருது.

2002: 'ஒரு கிராமத்து நதி' என்ற கவிதை நூலிற்காக கவிதைக்கான விருது.

இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இளந்தமிழே! - சிற்பி பாலசுப்பிரமணியம்

செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்! தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத் தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம் விம்மு கின்ற தோள்மீதில் முத்துமுத்தாய் வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால் ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே! மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள் முத்தமிழே! நீயுள்ளாய்; முன்னம் ஓர்நாள் பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்! பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்! மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்க மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா! கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக் குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா! - சிற்பி பாலசுப்பிரமணியம்

நூல்வெளி

இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 

12-ஆம் வகுப்பு தமிழ்: இளந்தமிழே புணர்ச்சி விதிகள் மற்றும் பகுபத உறுப்பிலக்கணம்

இலக்கணக்குறிப்பு - 12th Tamil Ilanthamilae Ilakkana Kurippu

சொல் (Word) இலக்கணக் குறிப்பு (Grammar Note)
செம்பரிதி பண்புத்தொகை
செந்நிறம் பண்புத்தொகை
செந்தமிழ் பண்புத்தொகை
சிவந்து வினையெச்சம்
வியர்வைவெள்ளம் உருவகம்
முத்துமுத்தாய் அடுக்குத்தொடர்

உறுப்பிலக்கணம்

சொல் (Word) பிரித்தல் (Splitting) உறுப்பிலக்கணம் (Grammar Breakdown)
சாய்ப்பான் சாய் + ப் + ப் + ஆன் சாய்பகுதி ,
ப்சந்தி ,
ப் - எதிர்கால இடைநிலை,
ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.
விம்முகின்ற விம்மு + கின்று + அ விம்மு - பகுதி,
கின்று - நிகழ்கால இடைநிலை,
- பெயரெச்ச விகுதி.
வியந்து விய + த் (ந்) + த் + உ விய - பகுதி,
த் - சந்தி (ந் ஆனது விகாரம்),
த் - இறந்தகால இடைநிலை,
- வினையெச்ச விகுதி.
இருந்தாய் இரு + த் (ந்) + த் + ஆய் இரு - பகுதி,
த் - சந்தி (ந் ஆனது விகாரம்),
த் - இறந்தகால இடைநிலை,
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

சொல் (Word) பிரித்தல் (Splitting) புணர்ச்சி விதிகள் (Grammar Rules)
செம்பரிதி செம்மை + பரிதி விதி: 'ஈறுபோதல்' (செம் + பரிதி = செம்பரிதி)
வானமெல்லாம் வானம் + எல்லாம் விதி: 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' (வானம் + எல்லாம் = வானமெல்லாம்)
உன்னையல்லால் உன்னை + அல்லால் 1. விதி: 'இ ஈ ஐ வழி யவ்வும்'  (உன்னை + ய் + அல்லால்)
2. விதி:  'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' (உன்னையல்லால்)
செந்தமிழே செம்மை + தமிழே 1. விதி: 'ஈறுபோதல்' (செம் + தமிழே)
2. விதி: 'முன்னின்ற மெய் திரிதல்' (செந்தமிழே)

கற்பவை கற்றபின்

தமிழ்மொழிப் பாடத்தில் மொழி வாழ்த்துப் பாடல் இடம்பெறுவதன் நோக்கம் குறித்து வகுப்பில் கலந்துரையாடுக.

1. தாய்மொழிப் பற்றை வளர்த்தல்

ஒரு மாணவனுக்குத் தனது தாய்மொழியின் மீதான மரியாதையையும், அன்பையும் தொடக்கத்திலேயே விதைப்பது மொழி வாழ்த்துப் பாடல்தான். மொழியை வெறும் பாடமாகப் பார்க்காமல், அது நமது அடையாளம் என்பதை உணரச் செய்கிறது.

2. தமிழின் தொன்மை மற்றும் பெருமையை உணர்த்துதல்

தமிழ் மொழி "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி". அதன் பழமை, இனிமை மற்றும் இலக்கணச் செழுமையை மாணவர்கள் அறிந்து கொள்ள இப்பாடல்கள் உதவுகின்றன. உதாரணமாக, மனோன்மணீயம் சுந்தரனாரின் "நீராரும் கடலுடுத்த..." பாடல் தமிழின் அழியாத் தன்மையைப் பறைசாற்றுகிறது.

3. பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்துதல்

மொழி என்பது வெறும் பேச்சுக்கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் பண்பாடு மற்றும் நாகரிகத்தின் கண்ணாடி. மொழி வாழ்த்தைப் பாடும்போது, தமிழ்ப் பண்பாட்டின் விழுமியங்களை மாணவர்கள் மனப்பூர்வமாக உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

4. நன்றியுணர்வு

நமது அறிவு வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் அடிப்படையாக விளங்கும் தமிழ் மொழிக்கு நன்றி செலுத்தும் விதமாகவே இது பாடப் புத்தகங்களில் முதல் பகுதியாக வைக்கப்படுகிறது.

5. ஒருமைப்பாடு மற்றும் ஊக்கம்

வகுப்பறையில் அனைவரும் இணைந்து மொழி வாழ்த்துப் பாடும்போது, மாணவர்களிடையே ஒருமித்த உணர்வும், தமிழ் கற்க வேண்டும் என்ற ஊக்கமும் பிறக்கிறது.

Sources & References

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு TNPSC Group 4 VAO, 2 2A, TET Tamil Study Material: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

🎯 இளந்தமிழே & கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் - மாதிரித் தேர்வு

1. 'நிலவுப்பூ' என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?

2. 'செம்பரிதி' - இச்சொல்லிற்குரிய சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக:

3. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

4. 'வானமெல்லாம்' என்னும் சொல்லைப் பிரிக்கும்போது இடம் பெறும் புணர்ச்சி விதி எது?

5. 'விம்முகின்ற' - இச்சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கணப் பிரிப்பு எது?

6. 'ஒரு கிராமத்து நதி' என்னும் கவிதை நூலிற்காக சிற்பி பாலசுப்பிரமணியம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு எது?

7. "வியர்வை வெள்ளம்" - இச்சொல்லில் பயின்று வரும் அணி எது?

8. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்?

9. 'செந்தமிழே' - இச்சொல்லைப் பிரிக்கும்போது 'முன்னின்ற மெய் திரிதல்' விதிப்படி 'ம்' என்ற எழுத்து எவ்வெழுத்தாகத் திரியும்?

10. பின்வருவனவற்றுள் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதாத நூல் எது?

🎯 உங்கள் மதிப்பெண்: 0 / 10

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.