தமிழ்மொழி முதல், முதலில் வராத, இறுதி, இறுதியாகா, இடை எழுத்துகள்

தமிழ் இலக்கணத்தின் முதற்பிரிவான எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் நன்னூல் விளக்குகிறது.நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான முதல், இறுதி(ஈறு), இடை(இடைநிலை) பற்றி விளக்கப்பட்டு்ள்ளது.

தமிழ் மொழி முதல், இறுதி(ஈறு), இடை(இடைநிலை) எழுத்துகள் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

தமிழ் மொழி முதல், இறுதி, இடை எழுத்துகள் யாவை?

  • சொல் உயிரெழுத்தில் தொடங்கும்; உயிரெழுத்தில் முடியும்.
  • மெய்யெழுத்தில் தொடங்காது;ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
  • உயிர்மெய்யில் தொடங்கும்; ஆனால் உயிர்மெய்யில் முடியாது.

நம் தமிழ் மொழியின் சொற்கள் நாம் எளிதாக ஒலிக்கும் வகையில் உருவானவை. வேற்று மொழிச்சொற்களைப் பேசுகையில் நமக்குத் தடுமாற்றம் ஏற்படுகிறது. நம் மொழியின் சொற்களின் இயல்பையும் மரபையும் அறிந்து கொள்வது தேவையானது. சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் எந்தெந்த எழுத்துகள் வரும் என்பதை அறிந்து கொள்வதால் மொழியை நன்கு பேசமுடியும்.

பொருள் தரும் வண்ணம் எழுத்துகள் அமைந்து சொற்கள் பிறந்த போதிலும், அச்சொற்களையே இலக்கண நூலார் ஏற்றுக் கொள்ளுவதில்லை.

கீழே உள்ள சொற்களைக் கவனியுங்கள்.

  • நன்றி
  • ணன்றி
  • னன்றி

இவற்றுள் நன்றி என்பதே சரியான சொல் அல்லவா?

பிழையின்றி எழுத எந்தெந்த எழுத்துகளை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்துகொள்வதும் மிக இன்றியமையாதது.

தமிழ் எழுத்துகளின் வகை, தொகை பற்றி அறிந்து கொண்டோம். அவற்றுள் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் வருவதில்லை. சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் எழுத்துகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

தமிழ் மொழி முதல் எழுத்துகள் - The first letters of the Tamil language

சொற்களை அமைக்கும் பொழுது, அச்சொற்களில் முதல் எழுத்துகள் இன்னின்ன எழுத்துகளாகத் தான் இருக்க வேண்டும் என்னும் விதி தமிழ் இலக்கணத்தில் உண்டு. அவ்வெழுத்துகளுக்கு, முதல் நிலை எழுத்துகள் அல்லது மொழி முதல் எழுத்துகள் எனப்பெயர்.

மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு.

சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர்.

மொழிக்கு முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை? அவை யாவை:

  • பன்னிரண்டு உயிர் எழுத்துகள் - அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ - உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
  • க, ச,த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும்,
க - வரிசை எழுத்துகள் 
கடல், காக்கை, கிழக்கு,
கீற்று, குருவி, கூந்தல்,
கெண்டை, கேணி, கைகள்,
கொக்கு, கோலம், கௌதாரி.(alert-passed)
  • வ, ய, ஞ ,ங ஆகிய உயிர்மெய் வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே,
  • ங - வரிசையில் '' என்னும் ஓர் எழுத்து மட்டுமே, எ.கா- ஙனம். இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.
  • -வரிசையில் ஞ, ஞா, ஞெ,ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும்,
  • - வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும்,
  • வ - வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே,வை, வெள ஆகிய எட்டு எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்.

தமிழ் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்

மொழிக்கு முதலில் வராத மெய்யெழுத்துகள் எத்தனை? அவை யாவை:

  • மொழிக்கு முதலில் மெய்யெழுத்துகள் பதினெட்டும் வராது.
  • மெய்யெழுத்துகள் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்ஆகிய பதினெட்டும்,
  • டண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
  • ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
  • , ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.
சான்று
டமாரம், ரம்பம், லண்டன். ஃப்ரான்ஸ், டென்மார்க் போன்றவை பிறமொழிச் சொற்கள். இவற்றைத் தமிழில் ஒலி பெயர்த்து எழுதுகிறோம்.(alert-warning)

 

மொழி முதல், முதலில் வராத, இறுதி, இறுதியாகா, இடை எழுத்துகள்




தமிழ் மொழி இறுதி எழுத்துகள் அல்லது ஈறு - Final letters of the Tamil language

மொழி முதல் எழுத்துகள் போன்று மொழியின் இறுதியிலும் இன்ன எழுத்துகள் தாம் அமைய வேண்டும் என இருக்கின்றது. அந்த எழுத்துகளுக்கு இறுதி நிலை எழுத்துகள் அல்லது மொழி இறுதி எழுத்து பெயர்.

சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.

மொழிக்கு இறுதி எழுத்துகள் எத்தனை? அவை யாவை:

  • உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே,
  • அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள்(தழீஇ)
  • பதினொரு மெய்யெழுத்துகள்- ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ் ,ழ், ள் (உரிஞ்,வெரிந்,அவ்)

தமிழ் மொழி இறுதியாகா எழுத்துகள்

  • சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும். 
அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.(alert-passed)
  • ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
  • க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
கார்த்திக், ஹாங்காங், சுஜித், மார்க்கெட், திலீப், மார்ச் போன்ற பிறமொழிப் பெயர்ச்சொற்களில் இவ்வெழுத்துகள் இறுதி எழுத்துகளாக இடம்பெறுவதுண்டு.(alert-warning)
  • உயிர்மெய் எழுத்துகளுள் '' எழுத்து வரிசை,
  • கர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும்,
  • கர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள்,
  • நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்.

தமிழ் மொழி இடை நிலை எழுத்துகள் - Tamil Language Intermediate Characters

சொற்களின் இடையிலேயும் இன்ன எழுத்துகளோடு இன்ன எழுத்துகள்தாம் வரவேண்டும் என விதி உள்ளது.

மொழிக்கு இடையில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை:

மொத்தம் எண்ணிக்கை சான்று

  • மெய்கள் பதினெட்டில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும்; அதாவது இந்த எழுத்துக்கு அடுத்த எழுத்தும் அதே எழுத்தாகவே இருக்கும். வேறு எழுத்து வராது.
  • மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
  • உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
  • ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - மொழி முதல், இறுதி எழுத்துகள் மதிப்பீடு 

1. மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை? 

மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள்

  • க, ச,த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும்,
  • வ, ய, ஞ ,ங ஆகிய உயிர்மெய் வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே,
  • ங - வரிசையில் 'ங' என்னும் ஓர் எழுத்து மட்டுமே, 
  • ஞ -வரிசையில் ஞ, ஞா, ஞெ,ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும்,
  • ய - வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும்,
  • வ - வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே,வை, வெள ஆகிய எட்டு எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்.

2. மொழிக்கு இறுதியில் வாரா மெய்யெழுத்துகள் யாவை?

மொழிக்கு இறுதியில் வாரா மெய்யெழுத்துகள்

க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.


3. சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்துகள் எவை?

சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்துகள்

  • மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
  • உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
  • ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

தொடர்புடையவை - எழுத்திலக்கணம்

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.htmlஙநவ
    ÷÷

    பதிலளிநீக்கு
  2. வா + அல் : வரல்
    இந்தப் புணர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது? நன்றி

    பதிலளிநீக்கு

Please share your valuable comments

Top Post Ad