எண்ணுப் பெயர்களுக்குரிய எண்ணடைகள்

எண்ணுப் பெயர்களுக்குரிய எண்ணடைகள்

எண்ணடைகள்
எண்ணுப் பெயர்
எண்ணடைகள்
எ.கா
ஒன்று ஒரு, ஓர் ஒருவர், ஒரு மரம், ஒர் உயிர்
இரண்டு இரு,ஈர் இருவர், இருவகை, ஈரெழுத்து
மூன்று மூ, மு மூவர், முத்தமிழ்
நான்கு நால், நாலு நால்வர், நாலுநாள்
ஐந்து ஐவர், ஐம்பெருங்காப்பியம்
ஆறு அறு அறுவர், அறுபடை
ஏழு எழு,ஏழ் எழுவர், ஏழிசை
எட்டு எண் எண்மர், எண்டிசை
பத்து பதின், பன் பதின்மர், பன்னிருவர்
  
பாடத்தலைப்புகள்(toc)

ஓர், ஒரு

    ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன.
    • உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
    • உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
    ஓர் ஒரு


    • ஓர் ஊர்
    • ஓர் எரி
    • ஒரு நகரம்
    • ஒரு கடல்
    விதிவிலக்கு

    செய்யுளில் ஓசை, தளை இவற்றின் காரணமாக வருமொழி முதலில் உயிர்மெய்யாக இருந்தாலும் நிலைமொழியாக 'ஓர்' போடுவதுண்டு.
    • எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்

    கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

     1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

    ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

    2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.

    ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்

    இரு,ஈர்

    இரண்டு என்பதைக் குறிக்க இரு,ஈர் ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன.
    • உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஈர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
    • உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் இரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
    ஈர் இரு
    • ஈரெழுத்து
    • இருவர்
    • இரு வகை

    அஃது , அது

    • உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
    • உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

    கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

    1. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

    அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

    2. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை. 

    அது நகரத்திற்குச் செல்லும் சாலை. 

    3. அது ஒரு இனிய பாடல்.

    அஃது ஒரு இனிய பாடல்.

    .
    அஃது
    அது 

    அஃது இங்கே உள்ளது

    அது நன்றாக உள்ளது

    தான் - தாம்

    • தான் என்பது ஒருமைச் சொல்.
    • தாம் என்பது பன்மைச் சொல்.

    இவ்விரண்டு சொற்களும் பெயர்ச்சொல்லாகவும், இடைச்சொல்லாகவும் சொற்றொடரில் பொருள் தந்து வரும். 

    • இவை தனித்து வராது. தனித்து வந்தால் பொருள் இல்லை. 
    • சொற்களோடு இணைந்து வந்தால்தான், இவற்றிற்குப் பொருள் உண்டு.

    பெயர்ச்சொல் (தான்)

    • தான் நினைத்ததைச் செங்குட்டுவன் செய்து முடித்தான்.

    இடைச்சொல் (தான்)

    • செங்குட்டுவன்தான் வட நாட்டின் மீது படையெடுத்தான்.

    பெயர்ச்சொல் (தாம்)

    • தாம் வெற்றி பெறுவது உறுதி என்று மாணவர்கள் அறிவித்தனர்.

    இடைச்சொல் (தாம்)

    • ஆசிரியர்கள்தாம் குழந்தைகளை நன்முறையில் வளர்க்க வேண்டும்.

    அன்று - அல்ல

    ஒருமைச் சொல் வரும்பொழுது 'அன்று' என்ற சொல்லும் 

    பன்மைச் சொல் வரும்பொழுது 'அல்ல' என்ற சொல்லும் வரும்.


    அஃறிணை
    ஒருமை பன்மை

    இது காடு அன்று

    இது காடுகள் அல்ல
    இது மயில் அன்று இது மயில்கள் அல்ல
    உயர்திணை
    இவன் சான்றோன் அல்லன் இவர்கள் மாணவர் அல்லர்

    பிழைத்திருத்தம்

    பிழை திருத்தம்
    அவைகள் அவை
    அதுகள் அது
    எனது மகள் என் மகள்
    சில அறிஞர் அறிஞர் சிலர்
    பல அறிஞர் அறிஞர் பலர்
    அவன் அல்ல அவன் அல்லன்
    அவள் அல்ல அவள் அல்லள்
    அவர்கள் அல்ல அவர்கள் அல்லர்


    முதலான, முதலிய, ஆகிய வேறுபாடு

    ஒரு தொகுப்பில் முதன்மையான ஒன்றை விளக்கும் போது 'முதலான' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
    • திருகுறள் முதலான அற நூல்களை கற்க வேண்டும்.
    ஒரு தொகுப்பில் சிலவற்றை விளக்கும் போது 'முதலிய' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
    • நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்களை கற்க வேண்டும்.
    ஒரு தொகுப்பில் எல்லாவற்றையும் விளக்கும் போது 'ஆகிய' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
    • இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்

    சரியான விடையைத் தேர்வு செய்க

    • இயல், இசை, நாடகம் முதலான முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
    • இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
    • இயல், இசை, நாடகம் முதலிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
    • இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழை வளர்த்தல் வேண்டும் 

    எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.

    செய்யுள் அடிஎண்ணுப்பெயர்தமிழ் எண்
    நாற்றிசையும் செல்லாத நாடில்லைநாற்றிசை- நான்கு திசை
    எறும்புந்தன் கையால் எண்சாண்எண் - எட்டு
    ஐந்துசால்பு ஊன்றிய தூண்ஐந்து
    நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.நாலும் - நான்கு

    இரண்டும்
    ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணிஆயிரம் ௧௦௦௦
    ௧௨௩௬௭௯௦


    தொடர்புடையவை

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad