TNPSC Group 2, 4 (VAO) மற்றும் TET தேர்வுகளில் பொதுத்தமிழ் (General Tamil) பகுதியில் மிக எளிதாக மதிப்பெண்களை அள்ளக்கூடிய தலைப்பு "சொல்லகராதி : பிழை திருத்துக : (எ.கா.) ஒரு - ஓர் " (Error Correction) ஆகும். தமிழ்மொழியின் இலக்கண விதிகளை அறிந்து, பிழையின்றி எழுதும் திறனை வளர்த்துக்கொள்வது அரசுத் தேர்வுகளுக்கு மட்டுமன்றி, நமது அன்றாடத் தகவல் தொடர்பிற்கும் மிக அவசியமானது. இக்கட்டுரையில், தேர்வு நோக்கில் பிழை திருத்துதல் (Error Correction) முறைகள், எண்ணுப் பெயர்களுக்குரிய எண்ணடைகள், ஓர்-ஒரு, இரு-ஈர், அஃது-அது, தான் - தாம் மற்றும் முதலான, முதலிய, ஆகிய, போன்ற - வேறுபாடு போன்ற அனைத்து இலக்கணக் குறிப்புகளையும் மிக எளிமையான விளக்கங்கள், அட்டவணைகள் மற்றும் முந்தைய ஆண்டு வினா-விடைத் தொகுப்புகளுடன் (PYQ & Study Material PDF) விரிவாகக் காண்போம்.
TNPSC old syllabus - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 6. பிழை திருத்தம் என்ற பகுதி வருகிறது.
TNPSC முந்தைய ஆண்டு வினா-விடைகள் (Previous Year Questions)
போட்டித் தேர்வுகளில் கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்கள் மற்றும் அவற்றிற்கான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. பிழை திருத்துக (CCSE-II 2025): "மனிதன் மொழியின் வளர்ச்சி கண்டு, அது எவ்வளவு அருமையான கருவி என்பதை உணர்ந்தான்."
விடையைக் காட்டு (Show Answer)
2. பிழை திருத்துக (CCSE-IV 2025): "கூற்று: ஒரு அணில் மரத்தில் ஏறியது. காரணம்: உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு 'ஓர்' பயன்படுத்த வேண்டும்."
விடையைக் காட்டு (Show Answer)
இலக்கண விதிகள் சில
பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம், திணை, பால், எண், இடம் பற்றி அறிதல் வேண்டும்.
- தமிழ் இலக்கணமும் மொழித்திறனும் - Tamil Language Grammar Learning
- மரபுச்சொற்கள்
- வழு - வழாநிலை -வழுவமைதி
- வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்
- புணர்ச்சி
- வழக்கு
- எண்ணுப் பெயர்களுக்குரிய எண்ணடைகள்
- தமிழ்ச்சொல் அறிவோம்
- போலிகள்
பிழை திருத்துக
மொழியை மிகச் சிறந்த கருவி என்பர். அதைத் திறம்படக் கையாண்டால் கலையாக மிளிரும். பிழை மலிய எழுதினால் வெறும் களையாகவே கொள்ளப்படும்.
தமிழில் பிழை இல்லாமல் எழுத முடியுமா? என்று ஐயம் கொள்ளத் தேவையில்லை. மொழியின் இயல்பை உணர்ந்தும் இலக்கண விதிகளை அறிந்தும் கவனத்துடன் எழுதினால் பிழைகளைத்தவிர்க்க முடியும். சிறிதளவு முயற்சியும் பயிற்சியும் தவறில்லாமல் எழுதத் துணைபுரியும்.
🎯 பிழை திருத்தம் செய்ய நாம் அறிய வேண்டியவை (Important Concepts to Solve Pizhai Thirutham):
போட்டித் தேர்வுகளில் அடிக்கடி குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு - ஓர், அது - அஃது, இரு - ஈர், தான் - தாம் மற்றும் அன்று - அல்ல போன்ற சொற்கள் எந்தெந்த சூழல்களில், எந்த விதிகளின் அடிப்படையில் புணர்கின்றன என்பதைத் தெளிவாகக் கற்றுக்கொண்டால், பொதுத்தமிழ் இலக்கணப் பகுதியில் முழு மதிப்பெண்களை மிக எளிதாக அள்ளிவிடலாம்!
எண்ணுப் பெயர்களுக்குரிய எண்ணடைகள் (Tamil Numbers Grammar)
எண்ணடை என்றால் என்ன?
விதி (Rule):
- வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக (Vowel) இருந்தால், ஒரு வடிவம் வரும்.
- வருமொழியின் முதல் எழுத்து உயிர்மெய்யெழுத்தாக (Consonant) இருந்தால், வேறொரு வடிவம் வரும்.
'ஒன்று' மற்றும் 'இரண்டு' புணர்ச்சி விதிகள்
| எண்ணுப் பெயர் |
எண்ணடைகள் |
எ.கா | |
|---|---|---|---|
| ஒன்று | ஒரு, ஓர் | ஒருவர், ஒரு மரம், ஓர் உயிர் | |
| இரண்டு | இரு,ஈர் | இருவர், இருவகை, ஈரெழுத்து | |
| மூன்று | மூ, மு | மூவர், முத்தமிழ் | |
| நான்கு | நால், நாலு | நால்வர், நாலுநாள் | |
| ஐந்து | ஐ | ஐவர், ஐம்பெருங்காப்பியம் | |
| ஆறு | அறு | அறுவர், அறுபடை | |
| ஏழு | எழு,ஏழ் | எழுவர், ஏழிசை | |
| எட்டு | எண் | எண்மர், எண்டிசை | |
| பத்து | பதின், பன் | பதின்மர், பன்னிருவர் |
ஓர், ஒரு - வேறுபாடு
விதி (Rule):
- உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
-
உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும்
சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
| ஓர் | ஒரு |
|---|---|
|
|
💡 முக்கிய விதிவிலக்கு (Exception Rule)
செய்யுளில் ஓசை, தளை ஆகியவற்றின் காரணமாக வருமொழி முதலில் உயிர்மெய் எழுத்து வந்தாலும், நிலைமொழியின் இறுதியில் 'ஓர்' பயன்படுத்துவதுண்டு. இது செய்யுளுக்கே உரிய விதிவிலக்காகும்.
"எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்"
(இங்கு 'குலம்' என்பது உயிர்மெய் எழுத்து என்றாலும் செய்யுள் ஓசைக்காக 'ஓர்' வந்துள்ளது)
- எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்
📌 Pizhai Thirutham Exercise: பிழைகளைத் திருத்தி எழுதுக
1. வினா: ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
2. வினா: ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.
இரு, ஈர் - வேறுபாடு
விதி (Rule):
- உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஈர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
- உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் இரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
| ஈர் | இரு |
|---|---|
|
|
அஃது, அது - வேறுபாடு
விதி (Rule):
- உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
- உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
|
அஃது |
அது |
|---|---|
அஃது இங்கே உள்ளது |
அது நன்றாக உள்ளது |
📌 Pizhai Thirutham Exercise: பிழைகளைத் திருத்தி எழுதுக (அது - அஃது)
1. வினா: அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
2. வினா: அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.
3. வினா: அது ஒரு இனிய பாடல்.
தான் - தாம் - வேறுபாடு
விதி (Rule):
- தான் என்பது ஒருமைச் சொல்.
- தாம் என்பது பன்மைச் சொல்.
இவ்விரண்டு சொற்களும் பெயர்ச்சொல்லாகவும், இடைச்சொல்லாகவும் சொற்றொடரில் பொருள் தந்து வரும்.
- இவை தனித்து வராது. தனித்து வந்தால் பொருள் இல்லை.
- சொற்களோடு இணைந்து வந்தால்தான், இவற்றிற்குப் பொருள் உண்டு.
அன்று, அல்ல - வேறுபாடு
விதி (Rule):
- ஒருமைச் சொல் வரும்பொழுது 'அன்று' என்ற சொல்லும்,
- பன்மைச் சொல் வரும்பொழுது 'அல்ல' என்ற சொல்லும் வரும்.
| அஃறிணை | |
|---|---|
| ஒருமை | பன்மை |
இது காடு அன்று | இது காடுகள் அல்ல |
| இது மயில் அன்று | இது மயில்கள் அல்ல |
| உயர்திணை | |
| இவன் சான்றோன் அல்லன் | இவர்கள் மாணவர் அல்லர் |
பிழைத்திருத்தம்
| பிழை | திருத்தம் |
|---|---|
| அவைகள் | அவை |
| அதுகள் | அது |
| எனது மகள் | என் மகள் |
| சில அறிஞர் | அறிஞர் சிலர் |
| பல அறிஞர் | அறிஞர் பலர் |
| அவன் அல்ல | அவன் அல்லன் |
| அவள் அல்ல | அவள் அல்லள் |
| அவர்கள் அல்ல | அவர்கள் அல்லர் |
முதலான, முதலிய, ஆகிய - வேறுபாடு
விதி (Rule):
- திருகுறள் முதலான அற நூல்களை கற்க வேண்டும்.
- நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்களை கற்க வேண்டும்.
- இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
📌 சரியான விடையைத் தேர்வு செய்க (Choose the Correct Answer)
வினா: பின்வரும் தொடர்களில் 'முத்தமிழ்' குறித்த சரியான தொடரைக் கண்டறிக.
எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.
தமிழ் எண்கள் ஒன்று முதல் பத்து வரை - Tamil Numbers| செய்யுள் அடி | எண்ணுப்பெயர் | தமிழ் எண் |
|---|---|---|
| நாற்றிசையும் செல்லாத நாடில்லை | நாற்றிசை- நான்கு திசை | ச |
| எறும்புந்தன் கையால் எண்சாண் | எண் - எட்டு | ௮ |
| ஐந்துசால்பு ஊன்றிய தூண் | ஐந்து | ௫ |
| நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. | நாலும் - நான்கு | ௪ |
| இரண்டும் | ௨ | |
| ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி | ஆயிரம் | ௧௦௦௦ |
வெளி இணைப்புகள் (Reference Links / External Links)
உள் இணைப்புகள் (Internal Links)
பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)
தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு (TNPSC Group 4 VAO, 2, 2A, TET): இந்தப் பாடப்பகுதியின் முழுமையான இலக்கணக் குறிப்புகள் மற்றும் மாதிரி வினாவிடைகளை PDF வடிவில் இலவசமாகப் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET பொதுத்தமிழ் மாதிரி வினாவிடைகள் (Model Questions)
போட்டித் தேர்வுகளில் கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட மற்றும் வரவிருக்கும் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாதிரி வினாக்கள் விளக்கங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. பிழை திருத்துக: பின்வரும் தொடர்களில் 'ஒரு - ஓர்' இலக்கண விதிப்படி பிழையான தொடரைக் கண்டறிக.
விடையைக் காட்டு (Show Answer)
2. பிழை திருத்துக: "அது ஒரு அழகான கவிதை." - இத்தொடரின் சரியான வடிவத்தைத் தேர்வு செய்க.
விடையைக் காட்டு (Show Answer)
3. பிரித்தெழுதுக: "ஈரெழுத்து" என்னும் எண்ணடைச் சொல் பிரிந்து கிடைக்கும் சரியான எண்ணுப்பெயர் யாது?
விடையைக் காட்டு (Show Answer)
4. பிழை திருத்துக: "கூற்று: மாணவர்கள் தான் தேர்வில் வெற்றி பெற்றனர். காரணம்: 'தாம்' என்பது பன்மைப் பெயர்ச்சொல்லாகும்."
விடையைக் காட்டு (Show Answer)
5. பிழை திருத்துக: "இது காடுகள் அன்று." - இத்தொடரில் உள்ள பிழையை நீக்கிச் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
விடையைக் காட்டு (Show Answer)
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: "இயல், இசை, நாடகம் _______ முத்தமிழை வளர்த்தல் வேண்டும்."
விடையைக் காட்டு (Show Answer)
7. பிழை திருத்துக: புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
விடையைக் காட்டு (Show Answer)
8. இலக்கண விதி அறிதல்: "அஃது" என்னும் சுட்டுப்பெயர் பின்வரும் எந்தச் சொல்லுக்கு முன்னால் வர வேண்டும்?
விடையைக் காட்டு (Show Answer)
9. உயர்திணை பிழை திருத்துக: "அவன் கவிஞன் _____" - இத்தொடரைச் சரியான வினைமுற்றைக் கொண்டு நிரப்புக.
விடையைக் காட்டு (Show Answer)
10. இலக்கணக் குறிப்பு: "நாற்றிசையும் செல்லாத நாடில்லை" - இத்தொடரில் பயின்றுவந்துள்ள எண்ணுப்பெயரின் சரியான எண்ணடை வடிவம் யாது?
விடையைக் காட்டு (Show Answer)
📝 பொதுத்தமிழ் மினி குவிஸ் (சுய சோதனை)
1. பிழை திருத்துக: "யானை கூட்டம் காட்டை நோக்கிச் சென்றது."
2. பிழை திருத்துக: "அவள் நேற்று பள்ளிக்கு வந்தான்."
3. பிழை திருத்துக: "தோட்டத்தில் மயில்கள் ஆடியது."
4. பிழை திருத்துக: "குயில் கத்தியது; காகம் கூவியது." சரியான ஒலி மரபு எது?
5. கோடிட்ட இடத்தை நிரப்புக: "நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ________ எட்டுத்தொகை நூல்களைக் கற்க வேண்டும்."


Hi Please, Do not Spam in Comments