தமிழ் இலக்கணமும் மொழித்திறனும் - Tamil Language Grammar Learning

நாம் பேசுவதும் எழுதுவதும் மற்றவர்க்கும் புரியவேண்டும்; நமக்கும் புரியவேண்டும். அதற்குத்தான் இலக்கணம் தேவைப்படுகிறது.

தமிழ் இலக்கணம் - ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1.எழுத்து (link) 2.சொல் (link) 3.பொருள் (link) 4. யாப்பு  (link) 5. அணி (link)


பாடத்தலைப்புகள்(toc)

தமிழ் இலக்கணம் எதற்கு?

நாம் பேசும் மொழியை, எழுதும் மொழியை முறையாகப் புரிந்து கொள்வதற்கு இலக்கணம் தேவை. இப்படி எழுது, அப்படி எழுது என்று கட்டளை இடுவதற்காக இல்லை.

தமிழ் இலக்கண நூல்கள்(open)

  • அவன் வந்தாள் - என்று எழுதினால் யாருக்காவது புரியுமா ?
  • வந்தவர் ஆணா, பெண்ணா என்பது எப்படித் தெரியும் ?
  • அவன் வந்தான் என்றால் ஆணையும், அவள் வந்தாள் என்றால் பெண்ணையும் குறிக்கும்.

மொழிக்குள் வியப்பு

ஒரு கடலைப் பார்க்கிறோம். ஒரு மலையைப் பார்க்கிறோம். எப்படி வியக்கிறோம் !

தமிழ் முதலெழுத்துக்கள்(open) 

ஒரு மொழியைப் படிக்கும்போது அப்படி ஒரு வியப்பு ஏற்படும்.

  • தமிழின் முதல் எழுத்து - அ

'அ' என்னும் எழுத்தின் முதுகுக்குப் பின்னால் | என்று ஒரு கோடு இருக்கிறது. உலகத்தில் நூற்றுக்கணக்கான மொழிகளின் முதல் எழுத்தில் இப்படி ஒரு கோடு இருக்கிறது.

அ - எழுத்து மனிதனைக் குறிக்கிறதாம். | என்னும் முதுகுக்கோடு பழங்காலத்தில் வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக்கூட்டைக் குறிக்கிறதாம்; என்னே, வியப்பான செய்தி!


அகரமுதலி

அகரமுதலியைப் பார்த்து எழுத்துகளின் வரிசையை நாம் அறிதல் வேண்டும். 'அ' வில் தொடங்கும் தமிழ் உயிரெழுத்துக்களின் வரிசை உங்களுக்குத் தெரியும் அல்லவா ? 

முறை - எழுத்துகள் வரிசை முறை(open) 

  • உயிர் எழுத்துகள் அவற்றின் சிறப்பு கருதியும் ஒன்றிற்கொன்று இனமாதல் கருதியும் எழுத்துகளை "அகரம் தொடங்கி னகரம் வரை" என வரிசைப்படுத்திக் கூறுதலே வரிசைமுறை என்கிறது நன்னூல்.


உயிரெழுத்து வரிசை

உயிரெழுத்து வரிசை: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஓ ஒ ஒள 

மெய்யெழுத்து வரிசை

க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் - பதினெட்டு மெய்யெழுத்துகளும் அகரமுதலி வரிசையில் இவ்வாறு வந்துள்ளன. 

அப்படியானால், அகரமுதலியில் 

  • அக்காள் என்னும் சொல் முதலில் வருமா ? 
  • அண்ணன் என்னும் சொல் முதலில் வருமா ? 

மெய்யெழுத்து வரிசையைப் பாருங்கள். 

  • அக்காள் என்னும் சொல்தான் முதலில் வரும். 

அம்மா, அப்பா, அண்ணி, அங்காடி, அன்னம் என்னும் சொற்களை அகரமுதலி வரிசையில் எழுதுவதானால், 

  • அங்காடி, அண்ணி, அப்பா, அம்மா, அன்னம் 

என்றுதான் எழுதுதல் வேண்டும்.

க - உயிர்மெய் எழுத்து வரிசை

  • க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள என உயிர்மெய்யெழுத்து வரிசை வரும். 

சிறுவன், சாப்பாடு, செய்தி, சலிப்பு, சோளம் என்னும் சொற்கள் அகரவரிசையில் சலிப்பு, சாப்பாடு, சிறுவன், செய்தி, சோளம் என்னும் வரிசையில் வரும். 

மாத்திரை 

இலக்கணத்தில் மாத்திரை என்பது எழுத்துகளின் ஒலியின் அளவைக் குறிக்கும் சொல். 

  • மாத்திரை என்பது சிறிய ஒலியளவு. 
  • கண் சிமிட்டும் நேரம் அல்லது 
  • விரல் சொடுக்கும் நேரம் மாத்திரையின் கால அளவாகும். 

தமிழ் எழுத்துகளுக்கான மாத்திரை அளவைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • மெய்யெழுத்து - அரை மாத்திரை 
  • உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை 
  • உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
  • உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை 
  • உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை 

இந்த அளவைத் தாண்டும் ஒலியளவை அளபெடை என்கிறோம்.

அளபெடை

உப்பு... உப்பு... என்று யாராவது உப்பு விற்கிறார்களா?

  • உப்பூஉஉஉ... என்று கூவுவார்கள்.
  • உப்போஒஒஒ உப்பு என்பார்கள்.
  • இதேபோல் மாஅஅஅம்பழம் என்று கூவி விற்கிறார்கள்.

இவ்வாறு நீட்டி ஒலிப்பதனை அளபெடை என்பர் இலக்கணத்தார்.

தமிழ் உப்பூஉஉஉ - என்பது உயிர் அளபெடை. ஏனென்றால், உ என்னும் உயிர் எழுத்து நீண்டு ஒலித்தது.

பொய்ய்ய்... என்பது ஒற்றளபெடை. ஏனென்றால், ய் என்னும் மெய் எழுத்து (ஒற்றெழுத்து) நீண்டு ஒலித்தது. 

மொழி அறிவோம்

  • தமிழில் உள்ள முதல் எழுத்துகள் மொத்தம் முப்பது.
  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டு;
  • மெய் எழுத்துகள் பதினெட்டு;

பின்வரும் சொல்லைப் பாருங்கள்.

(எ.கா.) அண்ணா

  • அ -உயிரெழுத்து
  • ண் - மெய்யெழுத்து
  • ணா - உயிர்மெய்

உயிரும் மெய்யும் சேர்ந்து 216 (இருநூற்றுப் பதினாறு) உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன. ஆனால், அவை அனைத்தையும் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துவது இல்லை.

எடுத்துக்காட்டாக,

கி, சி, பி, டி, தி, மி - போன்ற உயிர்மெய் எழுத்துகள் அன்றாடப் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுகின்றன.

ஙி, ஞி, ஙௌ, ஞெள, ணௌ - போன்றவை அவ்வாறு பயன்படுவது இல்லை. அடிப்படையான தமிழ் எழுத்துகள் முப்பது மட்டுமே.


அடிப்படை 

மொழியின் அடிப்படை உறுப்புகள்

  • எழுத்து, 
  • சொல், 
  • சொற்றொடர் 

என மூன்றும் மொழியின் அடிப்படை உறுப்புகள். 


  • அன்பே தெய்வம் 

இத்தொடரில்,


தமிழ் இலக்கணமும் மொழித்திறனும் - Tamil Language Grammar Learning

எழுத்து 

எல்லா எழுத்துகளுக்கும் அடிப்படையானது ஒலி. 

  • அரவன், வால் எடுத்துச் சண்டைக்குப் போனான் 

என எழுதுவதும் தவறு. பேசுவதும் தவறு. 

  • அரவன், வாள் எடுத்துச் சண்டைக்குப் போனான் 

என எழுதுவதும் சரி. பேசுவதும் சரி. 

ஒவ்வோர் எழுத்துக்கும் ஓர் ஒலி உண்டு. எழுத்தை முறைப்படி ஒலிக்க நாம் பயிற்சி எடுத்தல் வேண்டும்.

தமிழ் எழுத்துகளின் பிறப்பு  (open)

  • எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள்.
  • உயிருள்ள உடம்பினுள்ளே எழுகின்ற காற்று மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருந்தி உதடு, நாக்கு, மேல்வாய் (அண்ணம்), பல் ஆகிய இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன.

ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு பணி

ஒவ்வோர் எழுத்தும் ஒரு பணியைச் செய்கிறது. 

சுட்டெழுத்துகள்

"யார் இதனை உடைத்தது?"

"இவன்"

இந்த உரையாடல் நம் வீட்டுக்குள் அடிக்கடி நடக்கிறது. அவன், அவள், அவர், இவன், இவள், இவர், அது, இது, அவை, இவை என்னும் சொற்கள், குறிப்பிட்ட மனிதரையோ பொருளையோ சுட்டிக்காட்ட உதவுகின்றன.

  • இப்படிச் சுட்டிச்சொல்ல உதவும் எழுத்துகள் இரண்டு
  • அவை அ, இ. இவற்றைச் சுட்டெழுத்துகள் என்கிறோம். 
  • பழங்காலத்தில் 'உ' என்பதும் சுட்டெழுத்து தான்.

'உ' எழுத்து, பல பணிகளைச் செய்தது. இப்பொழுது, சுட்டிச்சொல்ல நாம் 'உ' எழுத்தைப் பயன்படுத்துவது இல்லை.

  • உதுக்காண் என்றால், 'சற்றுத் தொலைவில் பார்' என்பது பொருள்.
  • உப்பக்கம் என்றால், 'முதுகுப்பக்கம்' என்பது பொருள்.
  • உம்பர் என்றால், 'மேலே' என்பது பொருள்.

அவன், இவன், அது, இது எனச் சுட்டுவது ஒருமுறை.

  • அப்பையன்
  • இப்பெண்
  • இந்த இவ்வீடு

என்றும் சுட்டுவோம். என்ன வேறுபாடு? அவன், அவள் என்னும் சுட்டுச்சொற்கள் ஆணா, பெண்ணா என்பதனையும் சுட்டிச் சொல்லிவிடுகின்றன.

அ, இ சுட்டெழுத்துகள் தனியே நின்று சுட்டும்போது, ஆண் பெண் அனைவரையும் பொதுவாகச் சுட்டுகின்றன. அது, இது, அந்த, இந்த, அங்கு, இங்கு என்னும் சுட்டுச்சொற்களே இன்று பெருவழக்காகிவிட்டன.

  • அந்தப்பக்கம்
  • இந்தவீடு

வினாவெழுத்து - எ, யா, ஆ , ஓ, ஏ

  • அவன் செய்தான்.
  • அவனா(ஆ) செய்தான்.

இரண்டு தொடர்களுக்கும் என்ன வேறுபாடு?

  • முதல் தொடர், ஒரு செய்தி மட்டுமே.
  • இரண்டாவது தொடர் ஒரு வினாவை எழுப்புகிறது.

செய்தியை வினா ஆக்கிய எழுத்து எது? - "ஆ "

நாம் ஏராளமாய்க் கேள்விகளைக் கேட்க  உதவுகிறது.

  • நீயா?
  • நானா?
  • இன்று பள்ளியா ?
  • விடுமுறையா?

வினா எழுப்புவதற்கு வேறுசில எழுத்துகளும் உள்ளன. அவை: எ, ஏ, யா, ஓ, ஆ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.

  • விடை ன்ன ?
  • ன் வந்தாய்?
  • யார் அங்கே ?
  • நீயோ செய்தாய்?

'ஏ' எழுத்துக்கு இன்னுமொரு பணி

'ஏ' எழுத்து, வினா கேட்க மட்டும் பயன்படுவது இல்லை. அழுத்தம் கொடுத்துச் சொல்லவும் பயன்படுகிறது.

  • அவன் செய்தான்.
  • அவனே செய்தான்.

இரண்டாவது சொற்றொடரில் அழுத்தம் ஏற்படக் காரணமானது, 'ஏ'.

  • சீதையே சிறந்தவள்
  • உணவே மருந்து

இப்பொழுது, 'ஏ'க்கு மாற்றாகத் 'தான்' பயன்படுத்தும் வழக்கமும் இருக்கிறது.

  • அவன்தான் முதலில் வருவான்.
  • சீதைதான் சிறந்தவள்.

ஏ - என்பது சொல்லின் முதலிலும் இறுதியிலும் நின்று வினாப்பொருளைத் தரும். 

எழுத்துகளும் மனிதர்களும்

மனிதர்களைப்போலத்தான் எழுத்துகளும். அவற்றுக்குள் நட்பும் உண்டு; இனமும் உண்டு.

'ங்' என்னும் எழுத்துக்குப் பின்னால் 'க இன எழுத்தே வரும். 'ங்', 'க' இரண்டும் நண்பர்கள்.

  • (எ.கா. ) சிங்கம், தங்கை.

அதேபோல் ஞ்,ச இரண்டும் நண்பர்கள். இவ்விரண்டும் சேர்ந்தே வரும்.

  • (எ.கா.) மஞ்சள், அஞ்சாதே. ;

ண்ட, ந்த, ம்ப, ன்ற - எழுத்துகளும் நண்பர்கள். பெரும்பாலும் இவை சேர்ந்தே வரும்.

  • (எ.கா.) பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.

நட்பு எழுத்துகளை இன எழுத்துக்கள் என இலக்கணம் கூறுகிறது.

எழுத்துகளுக்கு இடையே நட்பு உண்டு அதனைப் புரிந்துகொண்டால் பெரும்பாலான பிழைகளை நீக்கலாம். 

மெல்லின எழுத்தும், அதன் நட்பு எழுத்தான வல்லின எழுத்தும் அடுத்தடுத்து வருவது இயல்பு. 

  • ங்க; ஞ்ச; ண்ட; ந்த; ம்ப; ன்ற 

இந்த இயல்பைப், 

  • புரிந்துகொண்டவர்கள், உண்டான் எனவும், தின்றான் எனவும் முறையாக எழுதுகிறார்கள். 
  • புரியாதவர்கள் உன்டான், திண்றான் என பிழையாகவே எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள்.

எழுத்துகளும் உறவும்

தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துகள் (உடனிலை மெய்ம்மயக்கம்)

எழுத்துகளுக்குள் நட்பு உண்டு என்பதனை அறிந்தோம் அல்லவா?

தமிழில் சில எழுத்துகள் தன் எழுத்தோடு மட்டும் சேர்ந்து வரும்.

உடனிலை மெய்ம்மயக்கம் எடுத்துக்காட்டு

  • பக்கம்,
  • அச்சம்,
  • மொத்தம்,
  • அப்பம்.

க், ச், த், ப் ஆகிய மெய்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும் எழுத்துகள். நீங்களும் இவ்வாறு சில சொற்களைச் சேர்த்துப் பாருங்கள்.

தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் எழுத்துகள் (வேற்றுநிலை மெய்ம்மயக்கம்)

வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எடுத்துக்காட்டு

  • சார்பு,
  • வாழ்க்கை.

ர், ழ் ஆகிய மெய்கள் தன் எழுத்துகளுடன் சேர்ந்து வாரா. பிற எழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும்.

தன் எழுத்து, பிற எழுத்து இரண்டுடனும் சேர்ந்து வரும் எழுத்துகளும் உள்ளன.

  • ற் - குற்றம், மேற்கு;
  • ன் - அன்னம், அன்பு.

இப்படி, வேறு சில சொற்களை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

வேறுபாடு அறிதல்

குறில், நெடில் வேறுபாடு

  • ஓடோடி வந்தான்.

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை(open) 

இத்தொடரில்,

  • ஓ, டோ, தா இவை மூன்றும் நெடில் எழுத்துகள்.
  • டி, வ இவை இரண்டும் குறில் எழுத்துகள்.
  • ந் மற்றும் ன் இரண்டும் மெய் எழுத்துகள்.

நல்ல தமிழில் எழுத குறில், நெடில் வேறுபாடு அறிவது அடிப்படை அறிவாகும்.

குறில் நெடில் உண்டாவது எப்படி ?

  • அ, இ, உ, எ, ஒ - ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

இவை மெய் எழுத்துகளோடு சேரும்போது, உயிர்மெய்க்குறில் எழுத்துகள்(கடல், கிளி, குரங்கு, சென்னை, சொல்) உண்டாகின்றன.

  • ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - ஏழும் நெடில் எழுத்துகள்.

இவை மெய் எழுத்துகளோடு சேரும்போது, உயிர்மெய்நெடில் எழுத்துகள்(காளை,கீற்று,கூடல், கேள்வி, கை, கோவில், கௌதாரி) உண்டாகின்றன.

குறில் நெடில் பிழைகள்

அ. சாப்படு தாயார்

சாப்பாடு தாயார்

ஆ. பள்ளிக்குடம் அருகில் உள்ளது.

பள்ளிக்ககூடம் அருகில் உள்ளது.

இ. ஒன்று வங்கினால் ஒன்று இலவாசம்.

ஒன்று வங்கினால் ஒன்று இலசம்.

பாடலில் உள்ள குறில்நெடில் பிழைகளை நீக்கி எழுதுக.

தமிழ்நாடு தமிழ்நாடு- இது

தரணி புகழ் தங்கத் தமிழ்நாடு

செர சொழ பாண்டியார் - இனிமை

பெங்க ஆண்டிட்ட இன்பத்தமிழ் நாடு 

இமயமுதல் குமரீவரை - ஈடு

இணையற்ற வீரமீக்க நடு.


தமிழ்நாடு தமிழ்நாடு- இது

தரணி புகழ் தங்கத் தமிழ்நாடு

சேர சோழ பாண்டியார் - இனிமை

பொங்க ஆண்டிட்ட இன்பத்தமிழ் நாடு 

இமயமுதல் குமரிவரை - ஈடு

இணையற்ற வீரமிக்க நாடு.

ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு

செய், சேய் என்னும் இரண்டு சொற்களைப் பாருங்கள்.

  • செ இஃது ஒற்றைக்கொம்பு.
  • சே இஃது இரட்டைக்கொம்பு.

ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பால் பொருள் எப்படி மாறுகிறது பாருங்கள்.

  • இதனைச் செய் - செய் (ச் என்பது மெய்யெழுத்து, எ என்பது உயிரெழுத்து, இரண்டும் சேரும்போது செ) - இது குறில்
  • தாய்சேய் நலவிடுதி - சேய் (ச் என்ற மெய்யெழுத்து உடன்  சேரும்போது சே) - இது நெடில்

ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்புகளோடு துணை எழுத்துச் சேரும்போது  பொருள் எப்படி மாறுகிறது பாருங்கள்.

  • கொடி பறக்கும் - (க் + கொ) - குறில்
  • கோடிப்பணம் கிடைக்கும் - (க் + கோ) - நெடில்
ஒற்றைக்கொம்பு குறில் செடி (ச்+எ=செ)
இரட்டைக்கொம்பு நெடில் வேல் (வ்+ஏ=வே)
ஒற்றைக்கொம்பு + துணை எழுத்து குறில் பொருள் (ப்+ஒ =பொ)
இரட்டைக்கொம்பு + துணை எழுத்து நெடில் தோடு (த்+ஒ=தோ)

சொல் 

சொல் என்பதனை மொழி, பதம், கிளவி, வார்த்தை எனவும் சொல்வோம். 

தமிழின் அடிப்படைச் சொற்கள்

தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும்.

அவை,

இவற்றுள் முதன்மையானவை பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்.

  • செல்வி வந்தாள்

என்னும் சொற்றொடரில்

  • செல்வி என்பது பெயர்ச்சொல்.
  • வந்தாள் என்பது வினைச்சொல்.

வினை என்றால் செயல் என்று பொருள்.

பெயர்ச் சொல்லை உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல் என இரண்டாகப் பிரிக்கலாம். 

பெயர், வினைச்சொற்களை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனவும் பிரிக்கிறோம்.


ஒருசொல் பலபொருள்

1. மரமும் தழையும் - என்னும் தொடரில் தழை என்பது, செடிகொடியைக் குறித்தது.

  • இங்குத் 'தழை' என்பது பெயர்ச்சொல்.
  • தழையா வெப்பம் தழைக்கவும் - என்னும் தொடரில் தழை என்பது வினைச்சொல்.
  • தழைத்தல் - என்பதற்குக் கூடுதல் எனவும், குறைதல் எனவும் பொருள் உண்டு.

2. நாடு தழைக்க - என்னும் தொடர் நாடு வளர்க எனப் பொருள்படும்.

3. சேலையைத் தழையத் தழைய உடுத்தினாள் - சேலையைத் தாழப் படியுமாறு உடுத்தினாள் என்பது பொருள். இது வியப்பான செய்திதானே!

4. ஆற்றுணா - ஆறு + உணா - இங்கு ஆறு என்பது வழியைக் குறிக்கிறது.

ஆறு என்னும் சொல்லுக்குத்தான் எத்தனை பொருள்கள்?

  • ஆறு - ஓர் எண் (6)
  • ஆறு - இயற்கையாக இருகரைகளுக்கு இடையில் நீர் ஒடும் பரப்பு
  • ஆறு - வழி
  • ஆறு - தணி

நல்ல தமிழ்ச்சொற்கள்

வாய்க்கால், செய் ஆகியவை வயல் சார்ந்த அருமையான சொற்கள். வண்மை, ஞாலம் முதலிய சொற்களை நாம் பழக்கத்திற்குக் கொண்டு வருவோம். இப்படிப் பேசுவோம்; எழுதுவோம்.

அ) ஞாலம் பெரியது.

ஆ) அவர் வண்மை உள்ளவர்.

  • வண்மை என்பதன் பொருள் கொடைத் தன்மை.
  • வன்மை என்பதன் பொருள் கொடுமை.

பிரித்தலும் சேர்த்தலும்

பிரித்து அறிதல்

பழந்தமிழ் இலக்கியம் நம் செல்வம். பொருள் உணர்வுக்கு ஏற்பப் பிரித்துப் படிக்கத் தெரியாமல் பழந்தமிழ் இலக்கியத்தின் அருமையை நாம் அறிந்துகொள்ள முடியாது.

பிரித்துப் படிக்கும் திறமையை நாம் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

  • தமக்குரியர் = தமக்கு + ரியர்
  • அன்பீனும் = அன்பு + னும்
  • நிழலருமை = நிழல் + ருமை

பிரித்தபோது வெளிப்பட்ட எழுத்துகளைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? உ, ஈ, அ ஆகிய மூன்றும் உயிர் எழுத்துகள் அல்லவா ?

பிரிக்கும்போது நடக்கும் மாற்றம் என்ன?

  • தமிழழகு = தமிழ் + அழகு
  • மலரடி = மலர் + அடி
  • தேனருவி = தேன் + அருவி

மாற்றம்: உயிர் எழுத்துத் தனியே பிரிந்தது.

சேர்த்து எழுதுதல்

சொற்களைச் சேர்த்துப் பேசும் வழக்கமும் எழுதும் வழக்கமும் நம்மிடம் உள்ளன. அவனெங்கே என்றுதான் கேட்கிறோம். அவன் எங்கே என்று பிரித்துப் பேசுவதில்லை.

  • பருப்பு + உணவு = பருப்புணவு
  • கரும்பு + எங்கே = கரும்பெங்கே
  • அவன் + அழுதான் = அவனழுதான்
  • அவள் + எங்கே = அவளெங்கே

சொற்கள் சேரும்போது மறைந்த எழுத்துகள் எவை ? அவையும் உயிர் எழுத்துகள்தாமே! உயிர் எழுத்துகள் மறைவதும் வெளிப்படுவதும் ஏன் ? சிந்தியுங்கள்.

இதற்கு காரணம் புணர்ச்சி.

புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது.

  • ஒரு சொல்லோடு ஒட்டுகளோ, இன்னொரு சொல்லோ இணையலாம்.
  • அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு;
  • மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு.

முதல் சொல்லின் கடைசி எழுத்து மெய். சேரும் சொல்லின் முதல் எழுத்து உயிர். சேரும்போது நடக்கும் மாற்றம் என்ன?

  • மணம் + உண்டு = மணமுண்டு
  • சிலர் + அழுவார் = சிலரழுவார்
  • புகழ் + இழந்தேன் = புகழிழந்தேன்

மாற்றம்: உயிர் எழுத்தானது, மெய் எழுத்தில் இணைந்து உயிர்மெய்யானது.

இரட்டைக்கிளவி

ஒலியை உணர்த்தும் சொற்கள் இரண்டு இரண்டாகவே சேர்ந்து வரும். அவ்வாறு வரும்பொழுது, அஃது ஒலிக்குறிப்பை வெளிப்படுத்தும். இதனைப் பிரித்தால் பொருள் தராது. பாரதிதாசன் பாடலில் மழை பலவிதமான ஒலிகளை எழுப்புகிறது.

  • தணதண
  • கணகண
  • சலசல

இலக்கணத்தில் இதனை இரட்டைக்கிளவி என்பர்.

  • இரட்டை என்றால் இரண்டு; கிளவி என்றால் சொல்.

உரிய இரட்டைக்கிளவிச் சொற்களை நிரப்புக.

அ. பட்டாசு எப்படி வெடித்தது ?

பட்டாசு படபட வெடித்தது.

ஆ. குழந்தை எப்படி ஓடியது?

குழந்தை குடுகுடு ஓடியது.

இ. சுருக்கமாகப் பேசு; வளவள என்று பேசாதே!

ஈ. வைரக்கல் பளபள என்று மின்னியது.

செய்யுள் மொழி

  • எவன் கொலோ ?

திருக்குறளில் இடம்பெறும் இச்சொற்கள் தரும் பொருள். என்ன? ஏனோ? என்ன பயன் கருதியோ? என்பது பொருள்.

செய்யுளில் ஓசைக்காகவும் அழுத்தம் தருவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ள சொல் - கொல். இது பெரும்பாலும் ஐயப்பொருளில் வரும்.

ஒரு பெண்ணைப் பார்த்து,

  • 'மான் கொல் ? மயில் கொல் ?'

என்றால், இவள் மானோ மயிலோ எனக் கூறுவதாகப் பொருள். இது செய்யுள் வழக்கு.

சொற்றொடர் 

சொற்கள் இணைந்து சொற்றொடரை உருவாக்குகின்றன. சொற்றொடரை அமைக்கும்போது பல்வேறு பிழைகள் ஏற்படுகின்றன. ஒருமை பன்மைப் பிழைகளும், காலப்பிழைகளும் அடிக்கடி ஏற்படும் பிழைகளாம்.

  • சொற்றொடரை வாக்கியம் எனவும் சொல்வோம்.

'உம்' எதற்கு ?

இராமன் சீதை இலக்குவன் காடு சென்றனர் என்பதனை, இராமனும் சீதையும் இலக்குவனும் காடு சென்றனர் என்றுதான் எழுதுவோம்.

  • ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள், பறவைகள், விலங்குகள், பொருள்கள் சேர்ந்து வரும்போது 'உம்' சேர்த்து எழுதுகிறோம்.

பயிற்சி (உம் சேர்த்து எழுதுக.)

1. விலங்குப் பூங்காவில் சிங்கம் புலி கரடி இருந்தன.

விலங்குப் பூங்காவில் சிங்கமும்,புலியும், கரடியும் இருந்தன.

 2. சுக்கு மிளகு திப்பிலி நல்ல மருந்துப் பொருள்கள். 

சுக்கும், மிளகும், திப்பிலியும் நல்ல மருந்துப் பொருள்கள்.

3. வீடு பள்ளிக்கூடம் பக்கத்தில் இருக்கின்றன.

வீடும், பள்ளிக்கூடமும் பக்கத்தில் இருக்கின்றன.


'உம்' சேர்த்து எழுதுக.


1. திருக்குறள் சிலப்பதிகாரம் படிக்க வேண்டிய நூல்கள்.
திருக்குறளும் சிலப்பதிகாரமும் படிக்க வேண்டிய நூல்கள்.

2. திருவள்ளுவர் கம்பர் பாரதி தமிழ்த்தாயின் தலைமகன்களாவர்.
திருவள்ளுவரும் கம்பரும் பாரதியும் தமிழ்த்தாயின் தலைமகன்களாவர்.

3. மாமல்லபுரம் காஞ்சிபுரம் காண்பதற்குரிய கலை நகரங்கள் ஆகும்.
மாமல்லபுரமும் காஞ்சிபுரமும் காண்பதற்குரிய கலை நகரங்கள் ஆகும்.

நாட்டுப்புறத் தமிழ்

  • இவற்றைச் சொலவடைகள் என மக்கள் சொல்வார்கள்.

பின்வரும் பழமொழிகளைப் படியுங்கள். 

  • கோழியக் கேட்டா ஆனம் காச்சுவாங்க.. ( ஆனம் - குழம்பு )
  • அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா? (நாழி - தானியங்களை அளக்கும் படி; அகவிலை - தானியவிலை)
  • திறந்த வீட்டுக்குத் திறவுகோல் எதுக்கு ? (திறவுகோல் - சாவி)

ஆனம், அகவிலை, திறவுகோல் முதலிய சொற்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்ச் சிற்றூர்களில் இயல்பாகப் பேசப்பட்டவை. அவை இன்று மறைந்து வருகின்றன.

நீங்கள் படித்த நாட்டுப்புறப் பாடலில் திரும்பத்திரும்ப வரும் ஒரு சொல்லைக் கவனித்தீர்களா?

  • கொழும்பில கூடாரம் மதுரையில கூடாரம்

கூடாரம் இடுவது என்றால் தங்குவது என்று பொருள்.

நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகளைப் படித்தால், தமிழின் மிகப் பெரியதொரு சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம்.

காலம்

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியும். காலத்தைக் குறிக்கும் உரிய வினைச்சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும்.

'பார்' என்னும் வினைச்சொல் காலத்திற்கு ஏற்றபடி பின்வருமாறு மாறுகிறது.

  • பார்த்தேன் (இறந்தகாலம்)
  • பார்க்கிறேன் (நிகழ்காலம்)
  • பார்ப்பேன் (எதிர்காலம்)

காலம் எத்தனை வகைப்படும் விவரி?(open)

பின்வரும் சொற்றொடர்களுக்கு எதிரே அவை எந்தக் காலத்தைக் குறிக்கின்றன என எழுதுக.

  • பாத்திமா நன்றாகத் தேர்வு எழுதினாள் - இறந்தகாலம்
  • பக்கத்தில் இருப்பவனைப் பார்த்துப் பார்த்து எழுதுகிறான் - நிகழ்காலம்
  • ஆசிரியர் வந்ததும் கேள்வி கேட்பார் - எதிர்காலம்

உண்டு,இல்லை

உண்டு,இல்லை என்னும் இரு சொற்களையும் நாம் மிகுதியாகப் பயன்படுத்துகிறோம். உண்டு, இல்லை என முடியும் சொற்களில் காலம் வெளிப்படையாக இல்லை. குறிப்பாகத்தான் நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

  • பாத்திமா தேர்வை நன்றாக எழுதவில்லை. (இறந்தகாலம்)
  • அண்ணன் வந்ததும் உனக்குப் பரிசு உண்டு. (எதிர்காலம்)

காலம் பிழை 

  • நாளைக்கு நான் ஊருக்குப் போய்ச் சேர்ந்தேன் (பிழை)
  • நாளைக்கு நான் ஊருக்குப் போய்ச் சேர்வேன் (திருத்தம்)

திணை

உயர்திணை, அஃறிணை எனத் திணை இருவகைப்படும்.

  • மனிதர் உயர்திணை ஆவர்.
  • மனிதர் அல்லாத உயிருள்ளவையும் உயிரற்றவையும் அஃறிணை ஆகும்.

திணை எத்தனை வகைப்படும் விவரி?(open)

திணை அடிப்படையில், பெயர்ச்சொற்களை உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் எனப் பிரிக்கிறோம்.

  • வீரன், அம்மா, நடிகன், கண்ணகி - உயர்திணைப் பெயர்கள்.
  • பூ, மரம், பூனை, குருவி - அஃறிணைப் பெயர்கள்.

பால்

  • பால் என்பது மற்றொருவகைப் பிரிவு.

பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் ஐந்து பால்களாகப் பிரிக்கிறோம்.

பால் எத்தனை வகைப்படும் விவரி?(open)

அவை,

  • ஆண்பால் - அவன், அண்ணன்
  • பெண்பால் - அவள், அரசி
  • பலர்பால் - அவர்கள், இளைஞர்கள்
  • ஒன்றன்பால் - அது, குதிரை
  • பலவின்பால் - அவை, மாடுகள்

ஆண்பால் பெயர்ச்சொல், ஆண்பால் வினைச்சொல் முடிவையே பெறும்.

  • அவன்(பெயர்) வந்தான்(வினை) .

அவன் வந்தாள் என்றோ, அவன் வந்தார் என்றோ எழுதுவது பிழையாகும். இதேபோல்தான், பிற பால் சொற்களையும் எழுதுதல் வேண்டும்.

  1. ஆண்பால் - அவன் வந்தான்
  2. பெண்பால் - அவள் வந்தாள்
  3. பலர்பால் - அவர்கள் வந்தார்கள்
  4. ஒன்றன்பால் - அது வந்தது
  5. பலவின்பால் - அவை வந்தன

எண்

ஒருமை, பன்மை என எண் இருவகைப்படும்.

  • ஒன்றனைக் குறிப்பது ஒருமை;
  • ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.

தமிழ் இலக்கணத்தில் எண் எத்தனை வகைப்படும் விவரி?(open)

ஒருமை பன்மை
பூ பூக்கள்
முள் முட்கள்
சிங்கம் சிங்கங்கள்
பாம்பு பாம்புகள்

பெயர் ஒருமையில் இருந்தால், வினைமுடிபும் ஒருமையிலேயே இருத்தல் வேண்டும். 

  • திருடன் பிடிபட்டான். 

பெயர் பன்மையில் இருந்தால், வினைமுடிபும் பன்மையிலேயே இருத்தல் வேண்டும். 

  • திருடர் பிடிபட்டனர். 

ஒருமை - பன்மை பிழை 

  • காற்று வீசின (பிழை)
  • காற்று வீசியது (திருத்தம் )
  • மரங்கள் அசைந்தது (பிழை)
  • மரங்கள் அசைந்தன (திருத்தம் )

இடம் 

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்றாகும். 

  • நான், அவன் வீட்டுக்குப் போனேன். நீ ஏன் வரவில்லை ? 

இடம் எத்தனை வகைப்படும் விவரி?(open)

இச்சொற்றொடரில், ஒருமையில்

  • நான் - தன்மை (தன்மை என்பது தன்னைக் குறிப்பது)
  • நீ - முன்னிலை (முன்னிலை என்பது முன்னால் இருப்பவரைக் குறிப்பது)
  • அவன், அவள், அது - படர்க்கை (தன்மை, முன்னிலை அல்லாத மற்றவரைக் குறிப்பது)

பன்மையில் வரும்போது, 

  • நாங்கள் - தன்மை. 
  • நீங்கள் - முன்னிலை, 
  • அவர்கள், அவை - படர்க்கை. 

ஒவ்வோர் இடமும் அதற்கேற்ப வினைமுடிபைப் பெறுதல் வேண்டும்.

பிழையின்றித் தமிழ் எழுதுவோம்

ஒற்றுப்பிழை என்றால் என்ன?

எல்லாரும் பேசும்போது, 'அவனைப் பார்த்தேன்', 'பாலைக் குடித்தேன்' என்று முறையாகப் பேசுகிறார்கள்.

ஆனால் எழுதும்போது, 'அவனை பார்த்தேன்', 'பாலை குடித்தேன்' என்று தவறாக எழுதுகிறார்கள். இதனை ஒற்றுப்பிழை என்கிறோம்.

  • ஒற்று என்பது மெய்யெழுத்து.

ஒற்றுப்பிழைகள்

  • கடமையை செய் (தவறு) - கடமையைச் செய் (சரி)
  • பலனை கேள் (தவறு) - பலனைக் கேள் (சரி)

ஒற்றுப்பிழை நீக்கி எழுதுக

அ. கடமையை செய்; பலனை கேள்.

கடமையைச் செய்; பலனைக் கேள்.

ஆ. மர பொருள்கள் வாடகைக்கு கிடைக்கும்.

மரப் பொருள்கள் வாடகைக்குக் கிடைக்கும்.

இ. திரைபடம் காண வருக.

திரைப்படம் காண வருக.

தொடரில் பொருத்தமான ஒற்று எழுத்துகளை இடுக. [ க், ச், த், ப்]

அ. புகை உடல்நலத்திற்குக் கேடு. 

ஆ. மரம் வளர்ப்போம்; மழையைப் பெறுவோம். 

இ. நெகிழிப்பையைப் புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்

ஈ. இறைவனைத் தொழுவோம்; இன்பமுடன் வாழ்வோம். 

உ. இயற்கை உரமே வேளாண்மைக்குச் சிறந்த உரம்.

உரிய ஒற்றுஎழுத்துகளை எழுதுக.

1. கல்வியைக் கற்போம்.

2. தாயைப் போற்றுவேம்.

3. நல்லதைச் செய்வோம்.

மயங்கொலிப் பிழை என்றால் என்ன?

எல்லாரும் பேசும்போது, 'கிணறில் போட்டேன்', 'சுவரில் வரைந்தேன்', 'வயிறு பசிக்கிறது ' என்று முறையாகப் பேசுகிறார்கள்.

ஆனால் எழுதும்போது, 'கிணரில் போட்டேன்', 'சுவற்றில் வரைந்தேன்', 'வயிர் பசிக்கிறது' என்று தவறாக எழுதுகிறார்கள். இதனை மயங்கொலிப் பிழை என்கிறோம்;

தமிழில் ர, ற; ல, ழ, ள; ண, ந, ன ஆகிய மயங்கொலி எழுத்துகளை எழுதும்போது, பெரும்பாலோர் பிழையாக எழுதுகின்றனர். இவற்றை முறையாக நாம் ஒலிக்கப் பழகாததால், இந்தப் பிழை ஏற்படுகிறது. ல, ழ, ள இம்மூன்றனையும் வேறுபாடு இல்லாமல், ஒரே மாதிரி ஒலிக்கிறோம். அதனால், எழுதும்போது பிழை ஏற்படுகிறது. இதனை மயங்கொலிப் பிழை என்கிறோம்.

மயங்கொலிப் பிழைகள்

  • இரு சக்கர வண்டிகள் பலுது பார்க்கப்படும் - பழுது (சரி)
  • நால்தோறும் பகல் காட்சி உண்டு - நாள்தோறும் (சரி)
  • வறந்தரு விநாயகர் கோயில் - வந்தரு (சரி)

பாடலில் அடிக்கோடிட்ட சொற்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளை நீக்கி எழுதுக.


ஊருக்கு வெலியே ஒற்றைக்கல் மண்டபத்தில் - மக்கள்

உயிரைக் குடிக்கத்தான் ஓராயிரம் பேயுண்டாம் 

ஆற்றங் கரைதனிலே அழகான மண்டபத்தில் - மனித

உயிரைக் கொள்ளத்தான் ஓராயிரம் பூதமுண்டாம்

ஆலமரத்தினிலே ஆந்தை அலறும் பொந்தினிலே- பில்லைகளைப்

பிடிக்கத்தான் குட்டிச்சாத்தான் பல உண்டாம் 

காட்டில் வாழும் யானைக்கும் நாட்டில் வாழும் பூணைக்கும்

ஓராயிரம் பேய்பூதம் இவற்றிற்கெல்லாம் ஏதுண்டு ?

கெட்டாவிக்காரனும் குள்ளநரிக்காரனும் - குப்பைக்

குப்பையாய்க் கொட்டி வைத்த பொய்யெல்லாம்

நம்முடைய வீரத்தை அரும்பினிலே அழிக்கத்தானே - நல்லோரின்

அறிலையெல்லாம் குழிநோன்டி புதைக்கத்தானே!


வெலியே - வெளியே 
கொள்ளத்தான் - கொல்லதான் 
பில்லைகளைப் - பிள்ளைகளைப்
பூணைக்கும் - பூனைக்கும்
குழிநோன்டி - குழிநோண்டி

பிழையும் திருத்தமும்

கீழே காணப்படுபவை பிழையான சொற்றொடர்கள்.

  • சிங்கம் வந்தான்
  • இராமன் அழுதாள்
  • பறவைகள் பாடியது
  • அவன் வந்தேன்

ஏனெனில், இச்சொற்றொடர்களில் உள்ள வினைச்சொற்கள் பிழையானவை. எப்படி இருந்தால் முறையாக இருக்கும்?

  • சிங்கம் வந்தது
  • இராமன் அழுதான்
  • பறவைகள் பாடின
  • அவன் வந்தான்

பிழை நேர்வது எப்போது ? 

ஒற்றுப்பிழை 

  • பாடலை பிரித்து படி. (பிழை). 
  • பாடலைப் பிரித்துப் படி. (திருத்தம்

குறில் நெடில்பிழை 

  • தண்ணிர் குடித்தான். (பிழை
  • தண்ணீர் குடித்தான். (திருத்தம்

துணையெழுத்துப் பிழை (ெ, ே ,ை, ா)

  • அப்பாவிக்குப் பென்னும் பெருளும் கிடைத்தது. (பிழை
  • அப்பாவிக்குப் பொன்னும் பொருளும் கிடைத்தது. (திருத்தம்)

மயங்கொலிப் பிழை 

  • பாதையில் கள்ளும் முல்லும் கிடந்தன. (பிழை
  • பாதையில் கல்லும் முள்ளும் கிடந்தன. ( திருத்தம்

பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம்திணைபால்எண்இடம் பற்றி அறிதல் வேண்டும்.

தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்துக

அ. நூலை படி - ஒற்று பிழை 

நூலைப் படி.

ஆ. நேற்று வருவான் - கால பிழை 

நேற்று வந்தான்.

நினைவுகூர்க

தமிழின் சிறப்பையும் காலந்தோறும் பெற்றுவரும் வளர்ச்சியையும் அறிந்து பயன்படுத்திக் கொள்ளத் இலக்கண அறிவு பெரிதும் துணை செய்யும். எனவே தமிழ் இலக்கணத்தை ஆழ்ந்து கற்க வேண்டியது தமிழ் படிக்கும் மாணவரின் முதற்கடமை என்பதை நினைவுகூர்க

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad