பால் தமிழ் இலக்கணம்

தமிழில் விகுதியைக் கொண்டு நாம் பால், எண், திணை, இடம், காலம் இவற்றை அறிந்து கொள்ள முடியும்.

TNPSC- Previous Year Questions

1. பிழையற்ற சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.

  • வயலில் மாடுகள் மேஞ்சது
  • வயலில் மாடுகள் மேய்ந்தது
  • வயலில் மாடுகள் மேய்ந்தன
  • வயலில் மாடுகள் மேந்தது

2. கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.

  • யானையின் கண் சிறியது
  • யானையின் கண்கள் சிறியது
  • யானையின் கண்கள் சிறியன
  • யானையின் கண் சிறியன

3. பொருந்தாததை எடுத்து எழுதுக.

  • திணை வழு - அரசன் வந்தது
  • பால் வழு - கபிலன் பேசினாள்
  • எண் வழு - குயில்கள் கூவியது
  • கால வழு - கமலா சிரித்தாய்

பால் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

திணை எண் இடம் காலம்

பாடத்தலைப்புகள்(toc)

பால் என்றால் என்ன?

  • பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால்-பகுப்பு, பிரிவு).
  • பால் இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கின்றனர்.

பால் என்பதன் பொருள்

பால் என்பதற்கு ‘பகுப்பு' எனப் பொருளுண்டு. பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் ஐந்து பால்களாகப் பிரிக்கிறோம். 

ஐம்பால் எடுத்துக்காட்டு

  1. அவன், இவன் - ஆண்பால்
  2. அவள், இவள் - பெண்பால்
  3. வர், இவர் - பலர்பால்
  4. யானை,புறா - ஒன்றன்பால்
  5. பசுக்கள், மலைகள் - பலவின்பால்

ஆண்பால் பெயர்ச்சொல், ஆண்பால் வினைச்சொல் முடிவையே பெறும். 

  • அவன்(பெயர்)  வந்தான்(வினை) . 

அவன் வந்தாள் என்றோ, அவன் வந்தார் என்றோ எழுதுவது பிழையாகும். இதேபோல்தான், பிற பால் சொற்களையும் எழுதுதல் வேண்டும். 

  1. ஆண்பால் - அவன் வந்தான்
  2. பெண்பால் -  அவள் வந்தாள்
  3. பலர்பால் - அவர்கள் வந்தார்கள்
  4. ஒன்றன்பால் - அது வந்தது
  5. பலவின்பால் - அவை வந்தன 

தமிழ் இலக்கணத்தில் பால் எத்தனை வகைப்படும்?

உயர்திணை அஃறிணை
ஆண்பால், பெண்பால், பலர்பால் ஒன்றன்பால், பலவின்பால்

பால் வகைகள் - ஐந்து வகைப்படும்.

  • உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது.
  • அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.

அவை,

  1. ஆண்பால்,
  2. பெண்பால்,
  3. பலர்பால்,
  4. ஒன்றன்பால்,
  5. பலவின்பால் என்பனவாகும்.


TNPSC - General tamil


உயர்திணைக்குரிய பால்கள்

உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?

உயர்திணைக்குரிய பால்கள் மூன்று வகைப்படும்.

  1. ஆண்பால்
  2. பெண்பால்
  3. பலர்பால்

உயர்திணைக்குரிய பால்கள் எடுத்துக்காட்டு

ஆண்பால்

உயர்திணையில் ஓர் ஆணை மட்டும் குறிக்கும் சொல் ஆண்பால். 

  • எடுத்துக்காட்டு - இராமன் 

ஆண்பாலுக்குரிய ஈறுகள்

ஆண்பால் -'' கர ஈறுகள் ஆண்பாலை உணர்த்தும்.
  • எ.கா: அவன், இவன், வந்தான்,வீரன், அண்ணன், மருதன்.

பெண்பால்

உயர்திணையில் ஒரு பெண்ணை மட்டும் குறிக்கும் சொல் பெண்பால்.

  • எடுத்துக்காட்டு  - சீதா

பெண்பாலுக்குரிய ஈறுகள்

பெண்பால் -'ள' கர ஈறுகள் பெண்பாலை உணர்த்தும்
  • எ.கா: அவள், இவள், வந்தாள்,மகள், அரசி,தலைவி.

பலர் பால்

உயர்திணையில் ஆண், பெண் ஆகிய இரு பாலரிலும் பலரைக் குறிப்பது பலர் பால். 

  • எடுத்துக்காட்டு   - மக்கள், பெண்கள் 

பலர்பாலுக்குரிய ஈறுகள்

பலர்பால் -'அர், ஆர்' என்பன பலர்பாலை உணர்த்தும்
  • எ.கா:அவர், இவர், உண்டார்,மக்கள், பெண்கள், ஆடவர்.

அஃறிணைக்குரிய பால்கள்

அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் யாவை?

அஃறிணைக்குரிய பால்கள் இரண்டு வகைப்படும்.

  1. ஒன்றன் பால்
  2. பலவின்பால்

அஃறிணைக்குரிய பால்கள் எடுத்துக்காட்டு

ஒன்றன் பால்

அஃறிணையில் ஒன்றைக் குறிப்பது ஒன்றன் பால். 

  • எடுத்துக்காட்டு    - மரம், வண்டி

ஒன்றன்பாலுக்குரிய ஈறுகள்

ஒன்றன் பால் - 'து, று, டு' என்பன ஒன்றன் பாலை உணர்த்தும்.

  • எ.கா: யானை,புறா, மலை,வந்தது, தாவிற்று, குறுந்தாட்டு (குறுகிய காலை உடையது).

பலவின்பால்

அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால். 

  • எடுத்துக்காட்டு     - பழங்கள், பறவைகள் , மரம்கள், வண்டிகள்

பலவின்பாலுக்குரிய ஈறுகள்

பலவின்பால் - 'அ, , ' என்பன பலவின் பாலை உணர்த்தும்.
    • எ.கா: பசுக்கள், மலைகள்,ஓடின, மேய்ந்தன, உண்ணா, திண்ணா, உண்குவ, தின்குவ.

    படர்க்கை இடத்தில் உயர்திணைக்குரிய பால்கள், அஃறிணைக்குரிய பால்கள் எடுத்துக்காட்டு

    • அவன் - (படர்க்கை, ஆண்பால்)
    • அவள் - (படர்க்கை, பெண்பால்)
    • அது - (படர்க்கை, ஒன்றன்பால்)

    பால் பகாப் பெயர்கள்

    • குழந்தை
    • ஏழை 
    • பேதை
    • சிற்பி
    • அறிவாளி
    • மேதை 
    • நோயாளி
    • அமைச்சர்

      பொருந்தாத பெயர் சொற்கள்

      1. மக்கள் - 'ள்' ஈறு பெற்றாலும் பெண்பாலைக் குறிக்காது.
      2. அலவன்(நண்டு) - 'ன்' ஈறு பெற்றாலும் ஆண்பாலைக் குறிக்காது.
      3. தாயார், தாய்மார் - 'அர், ஆர்' ஈறு பெற்றாலும் பலர்பாலைக் குறிக்காது.

      பிழையும் திருத்தமும்

      பிழைகள் நேராமல் இருக்க நாம் காலம்திணைபால்எண்இடம் பற்றி அறிதல் வேண்டும். 

      கீழே காணப்படுபவை பிழையான சொற்றொடர்கள்.

      • சிங்கம் வந்தான்
      • இராமன் அழுதாள்
      • பறவைகள் பாடியது
      • அவன் வந்தேன்

      ஏனெனில், இச்சொற்றொடர்களில் உள்ள வினைச்சொற்கள் பிழையானவை. எப்படி இருந்தால் முறையாக இருக்கும்?

      • சிங்கம் வந்தது
      • இராமன் அழுதான்
      • பறவைகள் பாடின
      • அவன் வந்தான்

      இலக்கண விதிகள் சில 

       

      நினைவுகூர்க

      தமிழில், வருகின்றேன், வருகின்றாய், வருகின்றான்,வருகின்றது, வருகின்றன என்ற வினைச் சொற்களில் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களையும் ஆண்பால், பெண்பால்,பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய பால்களையும் ஒருமை, பன்மை எண்ணையும் காணமுடியும். இந்தச் சொற்களுக்கு முன்னால் நான், நீ, அவன், அது, அவை என்ற சொற்களை இட வேண்டியது இல்லை.

      நான்வருகின்றேன்
      அவன்வருகின்றான்
      அதுவருகின்றது
      அவைவருகின்றன
      நீவருகின்றாய்

      வினைமுற்றுச் சொல்லில் உள்ள விகுதியைக் கொண்டே இவை எல்லாவற்றையும் காணமுடியும்.

      காலம், இடம், பால், திணை, எண் வேறுபாடு

      வினைசொல் பால் எண் திணை இடம் காலம்
      வருகின்றான் ஆண் ஒருமை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
      வருகின்றாள் பெண் ஒருமை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
      வருகின்றது ஒன்றன்பால் ஒருமை அஃறிணை படர்க்கை நிகழ்காலம்
      வந்தான் ஆண் ஒருமை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
      வந்தாள் பெண் ஒருமை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
      வந்தது ஒன்றன்பால் ஒருமை அஃறிணை படர்க்கை இறந்தகாலம்
      வருகின்றார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை நிகழ்காலம்
      வந்தார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை இறந்தகாலம்
      வருவார்கள் பலர்பால் பன்மை உயர்திணை படர்க்கை எதிர்காலம்
      வந்தேன் ஆண் ஒருமை உயர்திணை தன்மை இறந்தகாலம்
      வருவோம் பலர்பால் பன்மை உயர்திணை தன்மை எதிர்காலம்
      வந்தன பலவின்பால் பன்மை அஃறிணை படர்க்கை இறந்தகாலம்

      கீழ்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி எழுதுக.

      • ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன. 
      • ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. 
      • ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

      பின்வரும் உரைப்பகுதியில் உள்ள பிழைகளைச் கட்டிக்காட்டிப் பிழைதிருத்தி எழுதுக.

      தோட்டத்தில் பூக்கள் பூத்து இருந்தது. பறிப்பதற்குக் கமலா வந்தாள். கூடவே இராணியும் வேணியும் வந்தாள். அப்போது தோட்டத்தில் ஒரு பாம்பு ஓடின. கமலா கத்தினான். 

      தோட்டத்தில் பூக்கள் பூத்து இருந்தன. பறிப்பதற்குக் கமலா வந்தாள். கூடவே இராணியும் வேணியும் வந்தார்கள். அப்போது தோட்டத்தில் ஒரு பாம்பு ஓடியது. கமலா கத்தினாள்

      எதிர்ப் பால் சொல்லைக் கண்டறிந்து பொருத்துக.


      மாணவன் × மாணவி 

      உழவன் × உழத்தி 

      தோழி × தோழன் 

      சிறுவன் × சிறுமி 

      பாட்டன்  × பாட்டி

      அரசன் × அரசி 

      தொடர்புடையவை

      கருத்துரையிடுக

      0 கருத்துகள்
      * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

      Top Post Ad