TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : சந்திப்பிழை என்ற பகுதி வருகிறது.
வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும் (open)புணர்ச்சி (open)பகுபத உறுப்புகள் விளக்கம்(open)
சந்திப்பிழை பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினாக்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
TNPSC- Previous Year Questions
விடைகள்: BOLD செய்யப்பட்டுள்ளது.
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
- விடை தெரியவில்லை
2. கீழ்க்காணும் வல்லினம் மிகும் இடம் குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
- அந்த, இந்த, எந்த என்னும் 'சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
- ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும்
- உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்.
- சால, தல என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
சந்திப் பிழை என்றால் என்ன?
சந்திப்பிழை என்பது ஒரு சொல்லின் விகுதியோடு மற்றொரு சொல் சேரும் போது ஏற்படும் மாற்றங்களில் ஏற்படும் பிழை ஆகும்.
- வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும், மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் குறிப்பிடுவர்.
எடுத்துக்காட்டு
- கதையை படித்தேன்
- எழுதி கொண்டேன்
மேலே உள்ள தொடர்களைப் படித்துப் பாருங்கள். இவற்றை இயல்பாகப் படிக்க இயலாதவாறு சொற்களுக்கு இடையே ஓர் ஓசை இடைவெளி இருப்பதை உணர முடிகிறதல்லவா? அவற்றைக் கீழே உள்ளவாறு படித்துப் பாருங்கள்.
- கதையை + படித்தேன் = கதையைப் படித்தேன்
- எழுதி + கொண்டேன் = எழுதிக் கொண்டேன்
இப்போது இயல்பாகப் படிக்க முடிகிறது அல்லவா?
சந்திப் பிழைத்திருத்தம்
வல்லினம் மிக வேண்டிய இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும், மிகக் கூடாத இடத்தில் மிகாமல் எழுதுவதும் சரியானது. இதனைச் சந்திப் பிழைத்திருத்தம் எனக் குறிப்பிடுவர்.- அந்தப்பக்கம் (வல்லினம் மிகும் இடங்கள்)
- மிதந்து சென்றது (வல்லினம் மிகா இடங்கள்
- வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும்
சந்திப்பிழை நீக்கி எழுதுக
1. வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
விடை - வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
2. அறிவு ஒளிபெற அங்கே சோதி தரிசன புதுமையை புகுத்தினார்.
விடை - அறிவு ஒளிபெற அங்கே சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தினார்.
ஒற்றுப்பிழை நீக்கி எழுதுக
அ. கடமையை செய்; பலனை கேள்.
கடமையைச் செய்; பலனைக் கேள்.
ஆ. மர பொருள்கள் வாடகைக்கு கிடைக்கும்.
மரப் பொருள்கள் வாடகைக்குக் கிடைக்கும்.
இ. திரைபடம் காண வருக.
திரைப்படம் காண வருக.
தொடரில் பொருத்தமான ஒற்று எழுத்துகளை இடுக. [ க், ச், த், ப்]
அ. புகை உடல்நலத்திற்குக் கேடு.
ஆ. மரம் வளர்ப்போம்; மழையைப் பெறுவோம்.
இ. நெகிழிப்பையைப் புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்
ஈ. இறைவனைத் தொழுவோம்; இன்பமுடன் வாழ்வோம்.
உ. இயற்கை உரமே வேளாண்மைக்குச் சிறந்த உரம்.
Please share your valuable comments