சேர்த்து எழுதுதல் TNPSC எழுத்து இலக்கணம்

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : சேர்த்து எழுதுதல் என்ற பகுதி வருகிறது.

வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும் (open)
புணர்ச்சி  (open)
பகுபத உறுப்புகள் விளக்கம்(open)

சேர்த்து எழுதுதல் பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

மாதிரி வினா 

தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தம்முயிர் 

ஆ) தமதுயிர் 

இ) தம்உயிர் 

ஈ) தம்முஉயிர்

அலகு I : இலக்கணம் 

எழுத்து: சேர்த்து எழுதுதல் 

சொற்களைச் சேர்த்துப் பேசும் வழக்கமும் எழுதும் வழக்கமும் நம்மிடம் உள்ளன. அவனெங்கே என்றுதான் கேட்கிறோம். அவன் எங்கே என்று பிரித்துப் பேசுவதில்லை.

  • பருப்பு + உணவு = பருப்புணவு
  • கரும்பு + எங்கே = கரும்பெங்கே
  • அவன் + அழுதான் = அவனழுதான்
  • அவள் + எங்கே = அவளெங்கே

சொற்கள் சேரும்போது மறைந்த எழுத்துகள் எவை ? அவையும் உயிர் எழுத்துகள்தாமே! உயிர் எழுத்துகள் மறைவதும் வெளிப்படுவதும் ஏன் ? சிந்தியுங்கள்.

இதற்கு காரணம் புணர்ச்சி.

புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது.

  • ஒரு சொல்லோடு ஒட்டுகளோ, இன்னொரு சொல்லோ இணையலாம்.
  • அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு;
  • மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு.

முதல் சொல்லின் கடைசி எழுத்து மெய். சேரும் சொல்லின் முதல் எழுத்து உயிர். சேரும்போது நடக்கும் மாற்றம் என்ன?

  • மணம் + உண்டு = மணமுண்டு
  • சிலர் + அழுவார் = சிலரழுவார்
  • புகழ் + இழந்தேன் = புகழிழந்தேன்

மாற்றம்: உயிர் எழுத்தானது, மெய் எழுத்தில் இணைந்து உயிர்மெய்யானது.

இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ்,  9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

1. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) ஏன் என்று

ஆ) ஏனென்று

இ) என்னென்று

ஈ) ஏனன்று


2. ஒளடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) ஒளடதமாம்

ஆ) ஒளடதம் ஆம்

இ) ஒளடதாம்

ஈ) ஒளடத ஆம்


3. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) கொங்கு அலர்

ஆ) கொங்அலர்

இ) கொங்கலர் 

ஈ) கொங்குலர்


4. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ)அவன் அளிபோல்

ஆ) அவனளிபோல்

இ) அவன்வளிபோல்

ஈ) அவனாளிபோல்


5. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தரையிறங்கும்

ஆ) தரை இறங்கும்

இ) தரையுறங்கும்

ஈ) தரையறங்கும்


6. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) வழிதடம் 

ஆ) வழித்தடம்

இ) வழிதிடம்

ஈ) வழித்திடம்


7. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

அ) முத்துசுடர் 

ஆ) முச்சுடர்

இ) முத்துடர்

ஈ) முத்துச்சுடர்


8. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) நிலாஒளி

ஆ) நிலஒளி 

இ) நிலாவொளி 

ஈ) நிலவுஒளி

9. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) சிலம்பதிகாரம் 

ஆ) சிலப்பதிகாரம் 

இ) சிலம்புதிகாரம்

 ஈ) சிலபதிகாரம்


10. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ ) கணினிதமிழ் 

ஆ) கணினித்தமிழ் 

இ) கணிணிதமிழ் 

ஈ) கனினிதமிழ்


11. உள்ளுவது+எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) உள்ளுவதுஎல்லாம்

ஆ) உள்ளுவதெல்லாம்

இ) உள்ளுவத்தெல்லாம்

ஈ) உள்ளுவதுதெல்லாம்


12. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல். 

அ) பாட்டிருக்கும் 

ஆ) பாட்டுருக்கும் 

இ) பாடிருக்கும் 

ஈ) பாடியிருக்கும்


13. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) எட்டுத்திசை

ஆ)எட்டிதிசை

இ) எட்டுதிசை

ஈ) எட்டிஇசை


14. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) நிலையென்று 

ஆ) நிலவென்று 

இ) நிலவன்று 

ஈ) நிலவுஎன்று


15. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தமிழங்கள் 

ஆ) தமிழெங்கள் 

இ) தமிழுங்கள் 

ஈ) தமிழ்எங்கள் 


16. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) நீலம்வான் 

ஆ) நீளம்வான்

 இ) நீலவான் 


17. இல்லாது+இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) இல்லாது இயங்கும்

இ) இல்லாதியங்கும்

ஆ) இல்லா இயங்கும்

ஈ) இல்லதியங்கும்


18. மருத்துவம்+துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) மருத்துவம்துறை 

ஆ) மருத்துவதுறை 

இ) மருந்துதுறை 

ஈ) மருத்துவத்துறை


19. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) செயலிழக்க 

ஆ) செயல்இழக்க 

இ) செயஇழக்க 

ஈ) செயலிலக்க 


20. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) மானம்இல்லா

ஆ) மானமில்லா

ஈ) மானம்மில்லா

இ) மானமல்லா


21. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) காட்டாறு 

ஆ) காடாறு 

இ) காட்டு ஆறு

ஈ) காடுஆறு 


22.  அறிவு+உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .

அ) அறிவுடைமை

ஆ) அறிவு உடைமை

இ) அறியுடைமை

ஈ) அறிஉடைமை 


23. இவை+எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்

அ) இவை எட்டும் 

ஆ) இவையெட்டும் 

இ) இவ்வெட்டும் 

ஈ) இவ்எட்டும் 


24. வாழை+இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) வாழையிலை

ஆ)வாழைஇலை 

ஈ)வாழிலை

இ) வாழைலை


25. கை+அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .

அ) கைமர்த்தி 

ஆ) கைஅமர்த்தி

இ) கையமர்த்தி

ஈ) கையைமர்த்தி


26. பொங்கல்+அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பொங்கலன்று

ஆ) பொங்கல் அன்று

இ) பொங்கலென்று

ஈ) பொங்கஅன்று


27. பயன்+இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பயனிலா 

ஆ) பயன்னில்லா 

இ) பயன்இலா 

ஈ) பயன்இல்லா


28. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.. 

அ) நாடென்ற 

ஆ) நாடன்ற 

இ) நாடுஎன்ற

 ஈ) நாடுஅன்ற


29. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

அ) கலம்ஏறி

ஆ) கலமறி

இ) கலன்ஏறி

ஈ) கலமேறி


30. எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) எதிரலிக்க 

ஆ) எதிர்ஒலிக்க 

இ) எதிரொலிக்க

 ஈ) எதிர்ரொலிக்க


31. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தம்முயிர் 

ஆ) தமதுயிர் 

இ) தம்உயிர் 

ஈ) தம்முஉயிர்


32. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) இன்புற்றிருக்க 

ஆ)இன்புறுறிருக்க 

இ) இன்புற்றுஇருக்க 

ஈ) இன்புறு இருக்க


33. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

ஆ) இனியஉயிர்

அ) இன்உயிர்

இ) இன்னுயிர்

ஈ) இனிமைஉயிர்


34. மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

அ) மலை எலாம்

ஆ)மலையெலாம்

இ) மலையெல்லாம்

ஈ) மலைஎல்லாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad