TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : பிரித்து எழுதுதல் என்ற பகுதி வருகிறது.
பிரித்து எழுதுதல் பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC previous year question
1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் +நா
இ) எம் + தமிழ் + நா
ஈ) எந்தம் + தமிழ் +நா
அலகு I : இலக்கணம்
எழுத்து: பிரித்து எழுதுதல்
பழந்தமிழ் இலக்கியம் நம் செல்வம். பொருள் உணர்வுக்கு ஏற்பப் பிரித்துப் படிக்கத் தெரியாமல் பழந்தமிழ் இலக்கியத்தின் அருமையை நாம் அறிந்துகொள்ள முடியாது.
பிரித்துப் படிக்கும் திறமையை நாம் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
- தமக்குரியர் = தமக்கு + உரியர்
- அன்பீனும் = அன்பு + ஈனும்
- நிழலருமை = நிழல் + அருமை
பிரித்தபோது வெளிப்பட்ட எழுத்துகளைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? உ, ஈ, அ ஆகிய மூன்றும் உயிர் எழுத்துகள் அல்லவா ?
பிரிக்கும்போது நடக்கும் மாற்றம் என்ன?
- தமிழழகு = தமிழ் + அழகு
- மலரடி = மலர் + அடி
- தேனருவி = தேன் + அருவி
மாற்றம்: உயிர் எழுத்துத் தனியே பிரிந்தது.
இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ், 9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தமிழ்
- அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத;
- வன்பாற்கண் - வன்பால் + கண் - பாலை நிலத்தில்.
- தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல;
- நாய்க்கால் = நாய் + கால்
- நன்கணியர் = நன்கு + அணியர்
- நட்பென்னாம் = நட்பு + என்னாம்
- வேறில்லை = வேறு + இல்லை
- தொழிலனைத்தும் = தொழில் + அனைத்தும்
- இரண்டொழிய = இரண்டு + ஒழிய
6ம் வகுப்பு தமிழ்
1 . 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கண் + அறி
ஆ) கண்டு + அறி
இ) கண்ட + அறி
ஈ) கண் + டறி
2. 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஓய்வு + அற
ஆ) ஓய் + அற
இ) ஓய் + வற
ஈ) ஓய்வு + வற
3. 'வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வெண் குடை
ஆ) வெண்மை + குடை
இ) வெம் + குடை
ஈ) வெம்மை + குடை
4. 'பொற்கோட்டு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பொன் + கோட்டு
ஆ) பொற்+கோட்டு
இ) பொண்+கோட்டு
ஈ) பொற்கோ + இட்டு
5. 'தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) தட்பம் + வெப்பம்
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்
6. 'வேதியுரங்கள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்
7. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பொருளு+டைமை
ஆ) பொரு+ளுடைமை
இ)பொருள் +உடைமை
ஈ) பொருள்+ளுடைமை
10. 'இடப்புறம்' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
அ) இடன் + புறம்
ஆ) இடது + புறம்
இ) இட + புறம்
ஈ) இடப் + புறம்
11. 'சீரிளமை' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
அ) சீர் + இளமை
ஆ) சீர்மை + இளமை
இ) சீரி + இளமை
ஈ) சீற் + இளமை
12. 'செந்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) சென்மை + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்
13. 'பொய்யகற்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) பொய் + அகற்றும்
ஆ) பொய்+கற்றும்
இ) பொய்ய + கற்றும்
ஈ) பொய் + யகற்றும்
14. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அமுது + தென்று
ஆ) அமுது + என்று
இ) அமுது + ஒன்று
ஈ) அமு + தென்று
15. 'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செம்மை + பயிர்
ஆ) செம் + பயிர்
இ) செமை + பயிர்
ஈ) செம்பு + பயிர்
16. 'நின்றிருந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) நின் + றிருந்த
ஆ) நின்று + இருந்த
இ) நின்றி + இருந்த
ஈ) நின்றி + ருந்த
17. 'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அவ்வு + ருவம்
ஆ) அ +உருவம்
இ) அவ் + வுருவம்
ஈ) அ +வுருவம்
18. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நன்றி+யறிதல்
ஆ) நன்றி+அறிதல்
இ) நன்று+அறிதல்
ஈ) நன்று+யறிதல்
19. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -
ஆ) பொறை+யுடைமை
அ) பொறுமை+உடைமை
இ) பொறு+யுடைமை
ஈ) பொறை + உடைமை
22. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) போகி+பண்டிகை
ஆ) போ+பண்டிகை
இ) போகு +பண்டிகை
ஈ) போகிப்+பண்டிகை
24. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல்+ஆடை
ஆ) நூலா+டை
இ) நூல்+ லாடை
ஈ) நூலா+ஆடை
25. 'தானென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .
அ) தானெ + என்று
ஆ) தான்+ என்று
இ) தா + னென்று
ஈ) தான் + னென்று
26. 'எளிதாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) எளிது + தாகும்
ஆ) எளி + தாகும்
இ) எளிது + ஆகும்
ஈ) எளிதா + ஆகும்
27. 'பாலையெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பாலை+யெல்லாம்
ஆ) பாலை+எல்லாம்
இ) பாலை+எலாம்
ஈ) பா+எல்லாம்
Please share your valuable comments