குறிஞ்சி அகத்திணைக்குரிய பொருள்கள்

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான பொருள் இலக்கணத்தை நம் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகம், புறம் என வகுத்தார்கள்.அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே! 

அகப்பொருள் வாழ்வியல் ஆகும். இதை ஐவகை நிலங்களாகப் பிரித்து ஐவகை நிலத்திற்குத் தெய்வம் இருக்கும், மக்கள் இருப்பர், உணவு இருக்கும். இதேபோல ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும்.

குறிஞ்சி திணை விளக்கம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் பொருள் இலக்கணம் அகப்பொருள்

பாடத்தலைப்புகள்(toc)

குறிஞ்சி திணை விளக்கம்

அகத்திணைகள் ஏழுவகைப்படும்.அவற்றுள் குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ஆகியவை அன்பின் ஐந்திணை என்று வழங்கப்படும். குறிஞ்சி என்பது என்ன அவற்றின் பொருள்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

அகப்பொருள் வகைகள் - ஏழு வகைப்படும்

1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை 6. கைக்கிளை 7. பெருந்திணை

அன்பின் ஐந்திணைகள் யாவை?

1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை

குறிஞ்சி அகத்திணைக்குரிய பொருள்கள்

1. குறிஞ்சி நிலத்தின் முதற்பொருள் என்பது எதைக் குறிக்கிறது ?

அகவொழுக்கம் நிகழ்தற்ககுக் காரணமான நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.

பொழுது - பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.

பெரும்பொழுதுகள் - ஓராண்டின் ஆறு கூறுகள்

சிறுபொழுதுகள்- ஒரு நாளின் ஆறு கூறுகள்

அகத்திணை ஐவகை நிலங்கள் சிறுபொழுதுகள் பெரும்பொழுதுகள்
குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடமும் யாமம் குளிர்காலம், முன்பனிக் காலம்

 

குறிஞ்சி	மலையும் மலைசார்ந்த இடமும்

குறிஞ்சி அகத்திணைக்குரிய முதற்பொருள்

2. குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள் என்றால் என்ன?

குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வம் இருக்கும், மக்கள் இருப்பர், உணவு இருக்கும். இதே போல ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும்.

குறிஞ்சி அகத்திணைக்குரிய கருப்பொருள்

கருப்பொருள் குறிஞ்சி
தெய்வம் முருகன்
மக்கள் வெற்பன், குறவர், குறத்தியர்
உணவு மலைநெல், தினை
விலங்கு புலி, கரடி சிங்கம்
பூ குறிஞ்சி, காந்தள்
மரம் அகில், வேங்கை
பறவை கிளி, மயில்
ஊர் சிறுகுடி
நீர் அருவி நீர், சுனைநீர்
பறை தொண்டகம்
யாழ் குறிஞ்சி யாழ்
பண் குறிஞ்சிப்பண்
தொழில் தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்

3. குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருள் யாவை?

மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கமே உரிப்பொருள் ஆகிறது. இவ்வொழுக்கங்கள் ஐந்தும் அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக உரிப்பொருள்கள் பத்து உள்ளன.

 

குறிஞ்சி அகத்திணைக்குரிய உரிப்பொருள்

அகத்திணை உரிப்பொருள்
பொருள்
குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும் புணர்தல் - ஒன்றுசேர்தல்

நினைவுகூர்க:  

குறிஞ்சி நில கடவுள் யார்?

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.