நெய்தல் அகத்திணைக்குரிய பொருள்கள்

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான பொருள் இலக்கணத்தை நம் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகம், புறம் என வகுத்தார்கள்.அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும்.வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே! 

அகப்பொருள் வாழ்வியல் ஆகும். இதை ஐவகை நிலங்களாகப் பிரித்து ஐவகை நிலத்திற்குத் தெய்வம் இருக்கும், மக்கள் இருப்பர், உணவு இருக்கும். இதேபோல ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும்.

நெய்தல் நிலம் திணை விளக்கம் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைத் தமிழ் இலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் பொருள் இலக்கணம் அகப்பொருள்

பாடத்தலைப்புகள்(toc)

நெய்தல் நிலம் திணை விளக்கம்

அகத்திணைகள் எழுவகைப்படும்.அவற்றுள் குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ஆகியவை அன்பின் ஐந்திணை என்று வழங்கப்படும். நெய்தல் என்றால் என்ன அவற்றின் பொருள்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

அகப்பொருள் வகைகள் - ஏழு வகைப்படும்

1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை 6. கைக்கிளை 7. பெருந்திணை

அன்பின் ஐந்திணைகள் யாவை?

1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை

நெய்தல் அகத்திணைக்குரிய பொருள்கள்

1. நெய்தல் நிலத்தின் முதற்பொருள் என்பது எதைக் குறிக்கிறது ?

அகவொழுக்கம் நிகழ்தற்ககுக் காரணமான நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.

பொழுது - பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.

பெரும்பொழுதுகள் - ஓராண்டின் ஆறு கூறுகள்

சிறுபொழுதுகள்- ஒரு நாளின் ஆறு கூறுகள்

அகத்திணை ஐவகை நிலங்கள் சிறுபொழுதுகள் பெரும்பொழுதுகள்
நெய்தல் கடலும் கடல்சார்ந்த இடமும் ஏற்பாடு
ஆறு பெரும்பொழுதுகள்


நெய்தல்	கடலும் கடல்சார்ந்த இடமும்
நெய்தல் அகத்திணைக்குரிய முதற்பொருள்

2. நெய்தல் நிலத்தின் கருப்பொருள் என்றால் என்ன?

நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் இருக்கும், மக்கள் இருப்பர், உணவு இருக்கும். இதே போல ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும்.

நெய்தல் அகத்திணைக்குரிய கருப்பொருள்

கருப்பொருள் நெய்தல்
தெய்வம் வருணன்
மக்கள் சேர்ப்பன், பரதன், பரத்தியர்
உணவு மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
விலங்கு முதலை, சுறா
பூ தாழை, நெய்தல்
மரம் புன்னை, ஞாழல்
பறவை கடற்காகம்
ஊர் பட்டினம், பாக்கம்
நீர் மணற்கிணறு, உவர்க்கழி
பறை மீன் கோட்பறை
யாழ் விளரி யாழ்
பண் செவ்வழிப்பண்
தொழில் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்

3. நெய்தல் நிலத்தின் உரிப்பொருள் யாவை?

மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கமே உரிப்பொருள் ஆகிறது. இவ்வொழுக்கங்கள் ஐந்தும் அவற்றிற்கான நிமித்தங்கள் (காரணங்கள்) ஐந்துமாக உரிப்பொருள்கள் பத்து உள்ளன.

நெய்தல் அகத்திணைக்குரிய உரிப்பொருள்


அகத்திணை உரிப்பொருள்
பொருள்
நெய்தல் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் இரங்கல்- பிரிவு தாங்காது தலைவி வருந்துதல்

நினைவுகூர்க:  

நெய்தல் திணைக்குரிய பூ என்ன ?

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad