பத்து வகை சார்பு எழுத்துக்கள் - Tamil Language Letters

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான எழுத்திலக்கணத்தின் கூறுகளாக நன்னூல்படி, எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகளில் ஒன்றான எண் இரண்டு உட்பிரிவுகளாகப் பிரித்து முதல் எழுத்து, சார்பு எழுத்து என இரண்டு வகைப்படும்.

சார்பெழுத்து பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.

அடிப்படைத் தமிழ் இலக்கணம் (link) எழுத்திலக்கணம் (link) எண் (link) முதலெழுத்து (link)

பாடத்தலைப்புகள்(toc)

சார்பு எழுத்துக்கள் 

தமிழில் எழுத்தானது இரண்டு வகைப்படும்.

அவை,

ஆகும்.

சார்பு எழுத்துக்கள் என்றால் முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் ஆகும்.

சார்பு எழுத்துக்கள், முப்பது முதலெழுத்துக்களும் சேர்ந்து வரும்போது பல்வேறு வகையாகத் திரிந்து ஒலிக்கின்றன.

சார்பெழுத்தின் வகைகளை, 

  • தொல்காப்பியர் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூவகை எழுத்துக்களை மட்டுமே சார்பெழுத்துக்கள் என்பார். 
  • நன்னூலார் 10 வகைகளைக் குறிப்பிடுகிறார்.(alert-success)


சார்பு எழுத்துக்கள் தோன்றும் முறை

  • மெய் எழுத்துக்கள் பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் சார்பு எழுத்துக்கள் (உயிர்மெய்) தோன்றும்.
  • செய்யுளில் ஓசை குறையும்போது, தமக்குரிய மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும் போது சார்பு எழுத்துக்கள்( உயிரளபெடை, ஒற்றளபெடை ) தோன்றும்.
  • தனக்குரிய ஓசையில் குறைந்து குறுகிய ஓசையுடைய ஒலிக்கும் போது சார்பு எழுத்துக்கள்( ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ) தோன்றும்.
  • சில எழுத்துக்கள் தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும் போது சார்பு எழுத்துக்கள்( குற்றியலிகரம், குற்றியலுகரம்) தோன்றும்.

சார்பு எழுத்துக்கள் வகைகள் மொத்தம் - பத்து

அவையாவன,

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்


நன்னூல்படி சார்பெழுத்து

உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும்
-(நன்னூல் 60) (code-box)

உயிர்மெய், முற்றாய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகளாகும்.

நன்னூல்படி சார்பெழுத்தின் விரி

"உயிர்மெய் இரட்டுநூற்று எட்டு, உயர் ஆய்தம்
எட்டு, உயிரளபு, எழு மூன்று,ஒற் றளபெடை
ஒளகான் ஒன்றே மஃகாள் மூன்றே
ஆறுஏழ் அஃகும் இம், முப் பான்ஏழ் உகரம் ஆறாறு ஐகான் மூன்றே
ஆய்தம் இரண்டொடு சார்பெழுத்து உறுவிரி
ஒன்றுஒழி முந்நூற்று எழுபான் என்ப" - (நன்னூல் 61) (code-box)

சார்பெழுத்துகள் எண்ணிக்கை மொத்தம்,

  •  உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு(216)
  • முற்றாய்தம் எட்டு(8)
  • உயிரளபெடை இருபத்தொன்று(21)
  • ஒற்றளபெடை நாற்பத்திரண்டு(42)
  • குற்றியலிகரம் முப்பத்தேழு(37), 
  • குற்றியலுகரம் முப்பத்தாறு(36)
  • ஐகாரக் குறுக்கம் மூன்று(3)
  • ஔகாரக் குறுக்கம் ஒன்று, 
  • மகரக் குறுக்கம் மூன்று, 
  • ஆய்தக் குறுக்கம் இரண்டு

ஆக மொத்தம் சார்பெழுத்துகள் முந்நூற்று அறுபத்து ஒன்பது ஆகும்.


TNPSC - General Tamil - Study Material

உயிர்மெய் - 216

மெய் எழுத்துக்கள் பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் உயிர்மெய் எழுத்துக்கள் 216 எழுத்துக்களும் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும்.

  • மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது.
  • மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது
  • ஆகவே உயிர்மெய் எழுத்துக்களையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம். 

உயிர் எழுத்துக்கள் மெய்யெழுத்துக்களுடன் கூடும்போது, மெய்யெழுத்துக்கள் தமக்குரிய புள்ளியை விட்டுவிடும். அவ்வாறு விட்ட வடிவமே தமக்குரிய வடிவமாக நிற்கும்.

மெய்யெழுத்துக்களுடன் உயிரெழுத்துக்கள் வரும்பொழுது உயிர் மெய்யின் மீது ஏறி உயிர்மெய்யாக மாறிவிடும். இதனை

“உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே" - நன்னூல் 204 (code-box)

என்னும் நன்னூல் நூற்பா தெளிவுபடுத்துகிறது.

12 உயிரும் 18 மெய்யின் மேல் தனித் தனியே ஏறி வருவதால், (18×12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன.

புள்ளி விட்டு அவ்வொடு முன்உருபு ஆகியும்
ஏனை உயிரோடு உருவு திரிந்தும்
உயிரளவு ஆய்அதன் வடிவுஒழித்து இருவயின்
பெயரொடும் ஒற்றுமுன் னாய்வரும் உயிர்மெய் (நன்னூல் : 89)(code-box)

என்னும் நன்னூல் நூற்பா உயிர்மெய்யின் ஒலிப்பு முறையினை விவரிக்கின்றது. 

  • புள்ளி நீங்கிய வடிவம் - க் + அ = க, ய் + அ = ய 
  • உருபு திரிந்த வடிவம் - க் + ஆ = கா, க் + உ = கு 

மெய்யின் அரை மாத்திரை ஒழிந்து உயிர்மெய்க் குறில் ஒரு மாத்திரையாகவும், உயிர்மெய் நெடில் இரு மாத்திரையாகவும் ஒலிக்கும். இதனையே நன்னூலார் உயிரளவு ஆய் எனக் குறிப்பிடுகிறார்.

உயிர்மெய் எழுத்துக்கள் பிரித்து எழுதும் முறை;


TNPSC - General Tamil - Study Material

உயிர்மெய் எழுத்துக்கள் அட்டவணை - Table of Tamil characters - Tamil Letters Chart 

உயிர்→
மெய்
க் கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

மெய்யெழுத்துகள் பதினெட்டையும் உயிரெழுத்துகள் பன்னிரண்டுடன் சேர்த்து எழுத இருநூற்றுப்பதினாறு உயிர்மெய்யெழுத்துகள் தோன்றும். உயிர்மெய் எழுத்து உயிரையும் மெய்யையும் சார்ந்திருப்பதால் இதனைச் சார்பெழுத்து என்கிறோம்.


ஆய்த எழுத்து ஃ (முற்றாய்தம் - 8)

தொல்காப்பியர் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூவகை எழுத்துக்களை மட்டுமே சார்பெழுத்துக்கள் என்பார்.

அஃகேனம் என்பதன் பொருள்

ஆய்த எழுத்தைக் குறிக்க 'கேனம்' (எ.கா) அஃகேனம்  (alert-passed)

தமிழ்மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.

ஆய்த எழுத்து பிறப்பிடம்

ஆய்தமாகிய சார்பெழுத்து, தலையை இடமாகக்கொண்டு பிறக்கிறது.அதன் முயற்சிப் பிறப்பு வாயைத் திறந்து ஒலித்தலே ஆகும். 

  • மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
  • நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
  • தனித்து இயங்காது. 
  • தமிழ் எழுத்துகளை ஆனா(அ), ஆவன்னா(ஆ) … எனப் படிக்கும் முறைமை ஒன்று இருந்துவந்தது. இந்த முறையில் படிப்போர் ஆய்த எழுத்தை அஃகன்னா எனப் படிப்பர்.

முற்றாய்தம் மொத்தம் 8

குற்றெழுத்தின் பின்னும், உயிர் ஏறிய க் ச் ட் த் ப் ற் என்னும் ஆறு வல்லின உயிர் மெய்களின் முன்னும் வரும்.

எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்னும் சொற்களில் ஆய்த எழுத்து அடுத்துள்ள வல்லின எழுத்தை மென்மையாக்கிக் காட்டுவதை இவற்றை ஒலித்துப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். இவற்றில் ஆய்த எழுத்துக்கு இயல்பான அரை மாத்திரை. எனவே இதனை முற்றாய்தம் எனக் குறிப்பிடலாயினர். ஆய்தம் தன் மாத்திரையில் குறுகும் ஆய்தக் குறுக்கம் இருப்பதை வேறுபடுத்திக் காட்ட முற்றாய்தம் என்னும் சொல் தோன்றியது. 

இதன்படி ஆய்தம் - மொத்தம் 8 இவற்றில், 

  • வல்லின வகையால் வருவன - 6 (எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி)
  • புணர்ச்சி விகாரத்தால் வருவது 1 (அவ் + கடிய = அஃகடிய) 
  • செய்யுள் விகாரத்தாள் வருவது - 1 (செய்வது - செய்வஃது ) - அது அஃது என விரிதல்

ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள்

முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.(alert-success)

தனிநிலை என்ற சொல்

  • உயிரோடும் மெய்யோடும் சேராமல் தனித்தே இருப்பதால் ஆய்த எழுத்தைக், தனிநிலை  எனவும் கூறுவர்.
  • ஆய்த எழுத்து ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும். அவ்வெழுத்தின் முன் குறிலும், அதன்பின் வல்லின உயிர்மெய்க் குறிலும் வரும்.

அளபெடை (உயிரளபெடை - 21, ஒற்றளபெடை - 42)

அளபெடை என்பது செய்யுளில் ஓசை குறையும்போது, ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும். அவ்வாறு நீண்டு ஒலிப்பதனை அளபெடை என்கிறோம். 

அளபெடை வகைகள் இருவகைப்படும்.

  1. உயிரளபெடை-21,
  2. ஒற்றளபெடை-42.

குற்றியலுகரம் 

குற்றியலுகரம்  (link)

தனிக்குறில் அல்லாது, சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

குற்றியலிகரம்

  • இகரம் என்றால் 'இ' என்னும் எழுத்து.
  • இகரம் மாத்திரை - ஒரு மாத்திரை
  • குற்றியலிகரம் மாத்திரை - அரை மாத்திரை

குற்றியலிகரம்  (link)

குற்றியலுகரத்தின் உகரம் தன் ஒருமாத்திரையில் குறைந்து ஒலிப்பது போலவே குற்றியலிகரத்தில் வரும் இகரமும், தன் ஒருமாத்திரையிலிருந்து அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும்.

குறுக்கம்

சொல்லின் முதலிலும் இடையிலும் ஈற்றிலும் வரும் சில எழுத்துக்கள் தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துக்கள் குறுக்கம் எனப்படும்.

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

நால்வகைக் குறுக்கங்கள்,

  1. ஐகாரக்குறுக்கம்
  2. ஔகாரக்குறுக்கம்
  3. மகரக்குறுக்கம்
  4. ஆய்தக்குறுக்கம்

நினைவுகூர்க

உயிர்மெய், முற்றாய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகளாகும்.மெய்யெழுத்துகள் பதினெட்டையும் உயிரெழுத்துகள் பன்னிரண்டுடன் சேர்த்து எழுத இருநூற்றுப்பதினாறு உயிர்மெய்யெழுத்துகள் தோன்றும்.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise - 

கோடிட்ட இடத்தில் உரிய விடையை எடுத்து எழுதுக

 1. ஆய்தம் ...........எழுத்துவகையைச் சார்ந்தது.

அ) முதல் எழுத்து

ஆ) சார்பெழுத்து

இ) மெய்யெழுத்து

2. சார்பெழுத்துகள்...........வகைப்படும்

அ) 10

ஆ) 12

இ) 18

3. முதலெழுத்துகளின் எண்ணிக்கை

அ) 216

ஆ) 30

இ)247

4. தனித்து இயங்கும் எழுத்துகள்

அ) சார்பெழுத்து

ஆ)ஆய்த எழுத்து

முதலெழுத்து

5. உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை .

அ) 30

ஆ) 216

இ) 247

6. உயிர்மெய் எழுத்துகள்.............வகையில் அடங்கும்.

அ) சார்பெழுத்து

ஆ) சுட்டெழுத்து

இ) முதல் எழுத்து

குறுவினாக்கள்

1. முதலெழுத்து என்றால் என்ன ?

தமிழ்மொழியிலும் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துகள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மைபெற்று விளங்குவதால், அவற்றை முதலெழுத்துகள் என்கிறோம்.

2. முதலெழுத்துகள் யாவை? 

  • அ முதல் ஔ வரை உள்ள உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்,
  • க் முதல் ன் வரை உள்ள மெய்யெழுத்துகள் பதினெட்டும்

ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகளாகும். 

3. சார்பெழுத்து என்றால் என்ன ?

முதலெழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகளைச் சார்பெழுத்துகள் என்கிறோம்.

4. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?

சார்பு எழுத்துக்கள் பத்து வகைப்படும்.

அவையாவன,

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

5. இரண்டு - இச்சொல்லில் இடம்பெற்றுள்ள சார்பெழுத்துகளை எழுதுக. 

இரண்டு - இச்சொல்லில் இடம்பெற்றுள்ள சார்பெழுத்துகள் - ர, டு 

6. சார்பெழுத்துகள் இடம்பெறாத நான்கு சொற்களை எழுதுக.

எண், ஊர், ஏன், ஏர் 

7. அஃகேனத்தின் வேறுபெயர்களை எழுதுக.

முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, ஆய்தம்

8. அஃகேனம் சொல்லில் எவ்வாறு இடம் பெறும்?

எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்று சொற்களில் ஆய்த எழுத்து இடம்பெறும்.

சிறுவினா 

1. சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?

சார்பு எழுத்துக்கள் மொத்தம் - பத்து

அவையாவன,

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

2. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?

எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்று சொற்களில் ஆய்த எழுத்து இடம்பெறும்.

TNPSC-ல் கேட்கப்பட்ட கேள்விகள்

  1. ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் என்ன?
  2. தனிநிலை என்று எதை கூறுவர்?
  3. ஆய்த எழுத்தின் வேறு பெயர் - தனிநிலை

தொடர்புடையவை - சார்பு எழுத்துக்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad