TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : குறில், நெடில் வேறுபாடு என்ற பகுதி வருகிறது.
வல்லினம் மிகும் இடங்களும், மிகா இடங்களும் (open)புணர்ச்சி (open)பகுபத உறுப்புகள் விளக்கம்(open)
பாடத்தலைப்புகள்(toc)
இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ், 9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
குறில்
உயிர் எழுத்துகளுள் அ,இ,உ,எ,ஒ என்னும் ஐந்து எழுத்துகளும் குறில் எனப்பெயர் பெறும்.
குறில் எழுத்துகள்- அ,இ,உ,எ, ஒ, - ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன.
குறிலில், உயிர்க்குறிலும் உயிர்மெய்க்குறிலும் அடங்கும்.
நெடில்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்ற ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் எனப்பெயர் பெறும்.
நெடில் எழுத்துகள் - ஆ,ஈ, ஊ, ஏ, ஐ, ஓ,ஔ ஆகிய எழும் நீண்டு ஒலிக்கின்றன.
நெடிலில் உயிர்நெடிலும், உயிர்மெய் நெடிலும் அடங்கும்.
குறில், நெடில் வேறுபாடு அறிதல்
- ஓடோடி வந்தான்.
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை(open)
இத்தொடரில்,
- ஓ, டோ, தா இவை மூன்றும் நெடில் எழுத்துகள்.
- டி, வ இவை இரண்டும் குறில் எழுத்துகள்.
- ந் மற்றும் ன் இரண்டும் மெய் எழுத்துகள்.
நல்ல தமிழில் எழுத குறில், நெடில் வேறுபாடு அறிவது அடிப்படை அறிவாகும்.
குறில் நெடில் உண்டாவது எப்படி ?
- அ, இ, உ, எ, ஒ - ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
இவை மெய் எழுத்துகளோடு சேரும்போது, உயிர்மெய்க்குறில் எழுத்துகள்(கடல், கிளி, குரங்கு, சென்னை, சொல்) உண்டாகின்றன.
- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - ஏழும் நெடில் எழுத்துகள்.
இவை மெய் எழுத்துகளோடு சேரும்போது, உயிர்மெய்நெடில் எழுத்துகள்(காளை,கீற்று,கூடல், கேள்வி, கை, கோவில், கௌதாரி) உண்டாகின்றன.
குறில் நெடில் பிழைகள்
அ. சாப்படு தாயார்
சாப்பாடு தாயார்
ஆ. பள்ளிக்குடம் அருகில் உள்ளது.
பள்ளிக்ககூடம் அருகில் உள்ளது.
இ. ஒன்று வங்கினால் ஒன்று இலவாசம்.
ஒன்று வங்கினால் ஒன்று இலவசம்.
பாடலில் உள்ள குறில்நெடில் பிழைகளை நீக்கி எழுதுக.
தமிழ்நாடு தமிழ்நாடு- இது
தரணி புகழ் தங்கத் தமிழ்நாடு
செர சொழ பாண்டியார் - இனிமை
பெங்க ஆண்டிட்ட இன்பத்தமிழ் நாடு
இமயமுதல் குமரீவரை - ஈடு
இணையற்ற வீரமீக்க நடு.
தமிழ்நாடு தமிழ்நாடு- இது
தரணி புகழ் தங்கத் தமிழ்நாடு
சேர சோழ பாண்டியார் - இனிமை
பொங்க ஆண்டிட்ட இன்பத்தமிழ் நாடு
இமயமுதல் குமரிவரை - ஈடு
இணையற்ற வீரமிக்க நாடு.
ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு
செய், சேய் என்னும் இரண்டு சொற்களைப் பாருங்கள்.
- செ இஃது ஒற்றைக்கொம்பு.
- சே இஃது இரட்டைக்கொம்பு.
ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பால் பொருள் எப்படி மாறுகிறது பாருங்கள்.
- இதனைச் செய் - செய் (ச் என்பது மெய்யெழுத்து, எ என்பது உயிரெழுத்து, இரண்டும் சேரும்போது செ) - இது குறில்
- தாய்சேய் நலவிடுதி - சேய் (ச் என்ற மெய்யெழுத்து உடன் ஏ சேரும்போது சே) - இது நெடில்
ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்புகளோடு துணை எழுத்துச் சேரும்போது பொருள் எப்படி மாறுகிறது பாருங்கள்.
- கொடி பறக்கும் - (க் + ஒ = கொ) - குறில்
- கோடிப்பணம் கிடைக்கும் - (க் + ஓ = கோ) - நெடில்
ஒற்றைக்கொம்பு | குறில் | செடி (ச்+எ=செ) |
இரட்டைக்கொம்பு | நெடில் | வேல் (வ்+ஏ=வே) |
ஒற்றைக்கொம்பு + துணை எழுத்து | குறில் | பொருள் (ப்+ஒ =பொ) |
இரட்டைக்கொம்பு + துணை எழுத்து | நெடில் | தோடு (த்+ஒ=தோ) |
Please share your valuable comments