சொலவடைகள் பயன்படுத்துவது தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய தனிச்சிறப்பாகும். இவை பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும். பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை நாட்டுப்புற மக்களும் தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர்.
TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல், 21. பழமொழிகள் என்ற பகுதி வருகிறது.
இந்த பகுதியில் கீழ் கேட்கப்பட்ட சில TNPSC கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதி புதிய 7ம் வகுப்பு வரை புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டுள்ளது.
TNPSC previous year questions and answers
1. கார்த்திகை மாசம் ......... கண்ட மாதிரி மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க. Group 2 2022
(A) செடியை
(B) பிறை
(C) கொடியை
(D) கடலை
(E) விடை தெரியவில்லை
சொலவடைகள்
சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை.
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
பழமொழிகள்
நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகளைப் படித்தால், தமிழின் மிகப் பெரியதொரு சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம்.
சொலவடைகள் எடுத்துக்காட்டு
1. குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா - என்பது போல் என் நண்பன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தான்.
2. புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா - ஒருவருடைய புடிவாதத்தை யாராலும் மாத்த முடியல.
3. அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது - இப்ப சரியா படிக்கலன்னா வாழ்க்கையில முன்னேற முடியாது.
4. வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகைங்கிற மாதிரி - எந்த ஒரு காரியம் ஆனாலும் போராடித்தான் செய்ய வைக்கணும்.
5. எறும்பு ஊரக் கல்லும் தேயுங்கிற - கொஞ்சம் கொஞ்சமா மாத்தணும்னு நினைப்பது
6. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும் - நாம் படிக்கலன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டாங்க.
7. அடை மழை விட்டாலும் செடி மழை விடாதுங்கிற - அப்பா திட்டுறத விட்டாலும் அம்மா விடமாட்டாங்க போல
8. நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டமுங்கிற - படிக்க பிடிக்காமல் பள்ளிக்கூடத்தை விட்டு ஓட்டம் பிடிப்பது .
9. குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம் - தேவை உள்ளதை விட்டுட்டு தேவை இல்லாத ஒன்று தேடுவது
10. சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா? - கனவில் வருவது நினைவில் நடப்பது இல்லை.
மேலும் சில சொலவடைகள்
11. நல்ல பாம்பு படம் எடுக்கலாம்: நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா? - தன்னால் முடியாத வேலை செய்வது.
12. ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும் - சோம்பேறி ஒரு ஆளு இருந்தா ஒரு கூட்டமே கெட்டுப் போயிடும்.
13. காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும் - பாரம் சுமக்குறவனுக்கு தான் தெரியும் அதன் வலி
14. இருப்பவனுக்குப் புளியேப்பம்: இல்லாதவனுக்குப் பசியேப்பம் - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை
14. நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம் - ஒரு வேலையையும் சரியாக செய்யாமல் அங்கே இங்கே என்று அலைவது
15. அவப்பொழுது போக்குவதிலும் (வீணாகப் பொழுதுபோக்குதல்) தவப்பொழுது நல்லதும்பாங்க - கொஞ்ச நேரம் கூட வீணாக்காமல் வேலையை செய்தல்.
16. பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா? - செய்ய முடியாத வேலையை செய்தல்
17. அதிர அடிச்சா உதிர விளையும் - முயற்சி செஞ்சா எல்லாம் முடியும்.
18. அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்னு - சிறிய வெற்றிக்கு பின் மேன்மேலும் வெற்றியடைய முயற்சி செய்யாமை
19. கார்த்திகை மாசம் பிறைய கண்ட - நடக்காது என்று நினைத்தது நடப்பது.
20. அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான் - வழியில் இருக்குற மேடு பார்க்காமல் ஓட்டம் பிடிப்பது
சொலவடைகளுடன் கூடிய நாட்டுப்புறக் கதை
சொலவடைகளுடன் கூடிய நாட்டுப்புறக் கதை ஒன்றைப் பொம்மலாட்டமாகப் பார்ப்போம்.
Please share your valuable comments