பழமொழிகள்

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. 

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல், 21. பழமொழிகள் என்ற பகுதி வருகிறது.

இந்த பகுதியில் கீழ் கேட்கப்பட்ட சில TNPSC கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC previous year questions and answers 

1. சிலை மேல் எழுத்து போல இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.

(A) தெளிவாகத் தெரியாது

(B) தெளிவாகத் தெரியும்

(C) நிலைத்து நிற்கும்

(D) நிலைத்து நிற்காது

(E) விடை தெரியவில்லை

2. பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.  (group 2 2022)

தண்ணீர் ........ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

(B) அழுக்கு

(D) வெந்நீர்

(A) குறைவு

(C) உப்பு

(E) விடை தெரியவில்லை


பழமொழிகள்

நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகளைப் படித்தால், தமிழின் மிகப் பெரியதொரு சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம்.

சான்றாக, 

சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். 

சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.

 

பழமொழிகள் தமிழ் விளக்கம்

பழமொழிகள் கருத்துக்கள்

1. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் -  ஆறு இல்லாத ஊர் அழகு இல்லை அதேபோல் நூலகமில்லா ஊருக்கு அறிவு இல்லை.

2. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்ததைப் போன்று - உள்ளூரில் பழுத்த பழம் உள்ளூர் மக்களுக்கு மட்டும் பயன்படும். அதன் பயன் பிறருக்குக் கிடைக்காது. ஆனால், ஒரு நூல் பொதுநூலகத்தில் வைக்கப்பட்டால் அது பலர்க்கும் பயன்படும். 

3. வானம் பார்த்த பூமி  - இந்நிலத்தில் விளையும் பயிர்கள் பருவமழையை நம்பியே இருக்கும். இந்நிலத்தில் கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, துவரை, கொள்ளு, காராமணி முதலிய பயிர்கள் விளையும்.

4. அகல உழுவதனைவிட ஆழ உழுதல் நன்று - அப்பொழுதுதான் கீழிருக்கும் மண் மேலும், மேலிருக்கும் மண் கீழும் புரளும். மண்ணிலுள்ள களை விதைகள் முளைக்கும். மீண்டும் மீண்டும் உழவு செய்யும்போது களைகள் நீங்கி, மண் புழுதியாகும்.

5. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. 

6. கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ் - பயிர்களைப் பூச்சிகள் தாக்காத வகையிலும், ஆடுமாடுகள் மேயாத வகையிலும் தவிராமல் பாதுகாத்து வருதல் வேண்டும். 

7. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் - பிரேம் சந்த், இந்திமொழியில் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர். அவருடைய கதைகள் பெரும் புகழ்பெற்றவை. பிரேம் சந்த் ஒருமுறை உடல் நலமில்லாமல் இருந்தார். ஆனால், அந்த நிலையிலும் எழுத்துப் பணியினை விடாமல் செய்து கொண்டிருந்தார். அதனைக் கண்ட அவர் மனைவி, 'ஏன் இப்படி உங்களை வருத்திக் கொள்கிறீர்கள் ? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உங்கள் உடல்நலம் நன்றாக இருந்தால்தானே எழுத முடியும்; எழுதுவதனை நிறுத்தி உங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்” என்று வற்புறுத்திக் கூறினார்.

8. "பருவத்தே பயிர் செய், ஆடிப்பட்டம் தேடி விதை" என்னும் பழமொழிகளுக்கேற்பக் காலத்தே பயிர்செய்து பயன் கண்டனர் நம் முன்னோர்.

9. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

10. 'உணவே மருந்து; மருந்தே உணவு' என்னும் முதுமொழிக்கேற்ப, நம் முன்னோர்களின் உணவுமுறை இருந்து வந்தது. அதனை நாமும் கடைப்பிடிப்போம்.

10. ஆடையில்லா மனிதன் அரை மனிதன்

11. ஆள் பாதி ஆடை பாதி

12. சிட்டாய்ப் பறந்து விட்டான் - அதனால்தான் விரைவாகச் செல்பவனை இவ்வாறு கூறுகிறோம் 

உரிய எழுத்துகளை நிரப்பிப் பழமொழிகளை உருவாக்குக.

1. இ-க்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்கும் சி-கு. (று, ற)

விடைஇறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்கும் சிறகு

2. எ-ம்புக்குத் தெரியாத க-ம்பு இல்லை. (று, ௫)

விடைஎரும்புக்குத் தெரியாத கரும்பு இல்லை. 

3. அ-ண்மனை உறவைக்காட்டிலும் அடுக்களை உ-வு மேல். (ற, ர )

விடை: அரண்மனை உறவைக்காட்டிலும் அடுக்களை உறவு மேல். (ற, ர )

நாட்டுப்புறத் தமிழ்

  • இவற்றைச் சொலவடைகள் என மக்கள் சொல்வார்கள்.

சொலவடைகள்

சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை. 

பின்வரும் பழமொழிகளைப் படியுங்கள். 

  • கோழியக் கேட்டா ஆனம் காச்சுவாங்க.. ( ஆனம் - குழம்பு )
  • அளக்குற நாழிக்கு அகவிலை தெரியுமா? (நாழி - தானியங்களை அளக்கும் படி; அகவிலை - தானியவிலை)
  • திறந்த வீட்டுக்குத் திறவுகோல் எதுக்கு ? (திறவுகோல் - சாவி)

ஆனம், அகவிலை, திறவுகோல் முதலிய சொற்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்ச் சிற்றூர்களில் இயல்பாகப் பேசப்பட்டவை. அவை இன்று மறைந்து வருகின்றன.

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

விடுகதை

1. பாலைவனத்தில் பழுத்தபழம் இரும்புச்சத்து உள்ள பழம்.

அஃது என்ன?  பேரிச்சம் பழம் 

2. ஊர்ப்பேரைக் கொண்ட பழம் சிவப்பு நிறம் கொண்ட பழம்.

அஃது என்ன ? கோவை பழம்

3. ஆறையும் ஐந்தையும் விரைந்து சேர்த்துச் சொன்னால் பணம் வராது; ஆனால், பழம் வரும். 

அஃது என்ன? ஆரஞ்சு 

4. மஞ்சள் நிற அழகுப்பழம் புளிப்புச்சுவை உள்ள பழம்.

அஃது என்ன ? மாம் பழம் 

5. முள்ளுத்தோலு உடைய பழம் இனிப்புக்கட்டிகள் உள்ள பழம். 

அஃது என்ன? பலா பழம் 

பின்வரும் விடுகதைகளுக்கு விடை காண்க.

அ) அள்ளமுடியும் ஆனால், கிள்ள முடியாது. அது என்ன? 

தண்ணீர் 

ஆ) பச்சைவீடு, சிவப்பு வாசல். அது என்ன? 

கிளி 

இ) உச்சிக் குடுமிக்காரன், கொள்ளி வச்சா வெடிப்பான். அவன் யார் ?

 பட்டாசு 

ஈ) சூடுபட்டுச் சிவந்தவன், வீடுகட்ட உதவுவான்.

செங்கல்

உ) நூல் நூற்கும், இராட்டை அன்று; ஆடை நெய்யும், தறியும் அன்று.

சிலந்தி

ஊ) ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். 

கரும்பு

எ) மரம் ஏறினால் வழுக்கும்; காய் தின்றால் துவர்க்கும்;பழம் தின்றால் இனிக்கும்.

வாழை

ஏ) ஒல்லியான மனிதன், ஒரே காது மனிதன், அவன் காது போனால், ஏது பயன் ?

ஊசி

மொழியோடு விளையாடு

1) தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்; யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான். அவன் யார்?

தராசு

2) தண்ணீரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான்: காலில்லாத அவன் யார்?

கப்பல்

3) பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு. அவன் யார்?

குதிரை

4) இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோக்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி: பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி?

நெல்மணி

5) ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும் சேர்ந்து வரும். அவை என்ன?

ஏற்றுமதி இறக்குமதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad