TNPSC Group 2, 2A, 4 (VAO), TET General Tamil: உவமைத் தொடர்கள் (Uvamai Thodar) - Full Study Notes PDF- வாசித்தல், புரிந்து கொள்ளும் திறன்

ManiMegala 0

TNPSC Group 2, 2A, 4 (VAO), TET போன்ற போட்டித்  தேர்வுகளில் பொதுத்தமிழ் பகுதி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இலக்கணப் பிரிவின் கீழ் கேட்கப்படும் வாசித்தல், புரிந்து கொள்ளும் திறன் -"உவமைத் தொடரின் பொருளறிதல் " மற்றும் "பழமொழிகள் பொருளறிதல்" ஆகிய தலைப்புகள் எளிதாக மதிப்பெண்களைப் பெற்றுத் தரக்கூடியவை. 

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சொலவடைகளும், சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை கையாளப்படும் உவமைகளும் தேர்வுகளில் வினாக்களாகக் கேட்கப்படுகின்றன. இக்கட்டுரையில், தேர்வுக்குத் தேவையான முக்கியமான உவமைத் தொடர்கள், அவற்றின் விளக்கங்கள்,TNPSC Tamil Study Material PDF மற்றும் முந்தைய ஆண்டு வினா விடைத் தொகுப்புகளைத் தெளிவாகக் காண்போம்.

பழமொழிகள் தமிழ் விளக்கம் இங்கே உவமை அணி விளக்கம் இங்கே சொலவடைகளுடன் கூடிய நாட்டுப்புறக் கதை

இந்த பகுதியில் கீழ் கேட்கப்பட்ட சில TNPSC கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC previous year questions and answers 

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இவை பெரும்பாலும் 'பொருத்துக' அல்லது 'பொருத்தமான பொருளைத் தேர்க' போன்ற வினாக்களாகக் கேட்கப்படும்.
1. உவமைத் தொடர்களுக்கு ஏற்ற சரியான பொருளைப் பொருத்துக: CCSE2-2AT/2025
  • (a) ஆண்டிகள் மடம் கட்டியது போல
  • (b) ஆற்றில் கரைத்த புளி போல
  • (c) கரடி பிறை கண்டது போல
  • (d) உள்ளீடற்ற புதர் போல
  • 1. போலி
  • 2. மிக அரிது
  • 3. பயனற்ற செயல்
  • 4. உருவாகாத் திட்டம்
(a)(b)(c)(d)
(A)4321
(B)4132
(C)3142
(D)3421
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (A) 4 3 2 1
ஆண்டிகள் மடம் கட்டியது போல (4) - உருவாகாத் திட்டம் (ஒருங்கிணைப்பு இல்லாததால் நிறைவேறாத செயல்)
ஆற்றில் கரைத்த புளி போல (3) - பயனற்ற செயல்
கரடி பிறை கண்டது போல (2) - மிக அரிது (அதிசயம்)
உள்ளீடற்ற புதர் போல (1) - போலி (வெளிப்பகட்டு மட்டும் இருப்பது)

2. "நீர்மேல் எழுத்துப்போல" என்ற உவமைத்தொடரின் சரியான பொருளைத் தேர்க CCSE2-2AT/2025

A) இயலாமை
B) நிலைத்தன்மை
C) உறுதித்தன்மை
D) நிலையற்ற தன்மை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: D) நிலையற்ற தன்மை
விளக்கம்: தண்ணீரின் மேல் எழுதப்படும் எழுத்துக்கள் உடனே மறைந்துவிடுவது போல, வாழ்வில் நிலைத்து நிற்காமல் அழியக்கூடிய காரியங்களைக் குறிக்க இவ்வுவமை பயன்படுகிறது.

3. 'இடியோசை கேட்ட நாகம்போல' - என்ற உவமைத்தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்க :CCSE2-2AT/2025

A) வன்மம்
B) ஏக்கம்
C) மிரட்சி
D) திரட்சி
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) மிரட்சி
விளக்கம்: பயங்கரமான இடி சத்தத்தைக் கேட்கும் போது பாம்பு நடுங்கி மிரட்சியடைவது போல, மிகுந்த அச்சத்திற்கும் நடுக்கத்திற்கும் உள்ளாவதைக் குறிக்கும்.

4. "நீறு பூத்த நெருப்புப்போல" - இதில் 'நீறு' என்பதன் பொருள் என்ன?CCSE2-2AT/2025

A) சாம்பல்
B) மண்
C) தணல்
D) கலவை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) சாம்பல்
விளக்கம்: 'நீறு' என்றால் சாம்பல் என்று பொருள். வெளியில் சாம்பல் மூடியிருந்தாலும் உள்ளே நெருப்பு தணல் கனன்றுகொண்டிருப்பது போல, வெளியில் தெரியாமல் மறைந்திருக்கும் ஆற்றலையோ அல்லது உணர்வையோ குறிக்கும்.

5. 'ஆப்பசைத்தக் குரங்கதனைப் போல' என்ற உவமைத்தொடர் உணர்த்தும் சரியான பொருளைக் கண்டறிக.CCSE-IV-GT/2025

A) இன்பம்
B) ஏக்கம்
C) வேகம்
D) வேதனை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: D) வேதனை
விளக்கம்: மரப் பிளவுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த ஆப்பைத் தேவையில்லாமல் அசைத்து, அதில் தன் உடலைச் சிக்க வைத்துக் கொண்டு குரங்கு பட்ட துன்பத்தைப் போல, வீணான ஆபத்தில் சிக்கி 'வேதனை' அடைவதைக் குறிக்கும்.

6. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' (Group 4 2022)

A) வெளிப்படைத் தன்மை
B) வெளிப்படையற்ற தன்மை
C) மறைத்து வைத்தல்
D) தன்னலமின்மை
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) வெளிப்படைத் தன்மை

7. 'விழலுக்கு இறைத்த நீர் போல' - இவ்வுவமை விளக்கும் பொருள் யாது? (Group 2 2022)

A) பயனுள்ள செயல்
B) பயனற்ற செயல்
C) எதிர்பாராத செயல்
D) எதிர்பார்த்த செயல்
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) பயனற்ற செயல்

8. 'மடை திறந்த வெள்ளம் போல்' - உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க. (Group 2 2022)

A) வெளிப்படைத் தன்மையாக
B) தெள்ளத் தெளிவாக
C) தடையின்றி மிகுதியாய்
D) எளிதில் மனத்தில் பதிதல்
E) விடை தெரியவில்லை
விடையைக் காட்டு (Show Answer)
C) தடையின்றி மிகுதியாய்
9. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிந்து பொருத்துக: CCSEIVGT-2025 Group 4
  • (a) அலை ஓய்ந்த கடல் போல்
  • (b) அடியற்ற மரம் போல்
  • (c) மத்தில் அகப்பட்ட தயிர் போல்
  • (d) புயலில் சிக்கிய பூங்கொடி போல்
  • 1. நடுங்குதல்
  • 2. மனம் உடைதல்
  • 3. அமைதி
  • 4. வீழ்தல்
(a)(b)(c)(d)
(A)3421
(B)3142
(C)4321
(D)4132
(E) விடை தெரியவில்லை
விடையைக் காண இங்கே அழுத்தவும் / Show Answer
சரியான விடை: (A) 3 4 2 1
அலை ஓய்ந்த கடல் போல் (3) - அமைதி
அடியற்ற மரம் போல் (4) - வீழ்தல்
மத்தில் அகப்பட்ட தயிர் போல் (2) - மனம் உடைதல் (தவிப்பு)
புயலில் சிக்கிய பூங்கொடி போல் (1) - நடுங்குதல்

உவமைத் தொடர்கள் (Idioms) - 8ம் வகுப்பு 

உவமைத் தொடர்கள் (Idioms) மற்றும் பழமொழிகள் (Proverbs) தமிழ் மொழியின் செழுமையை வெளிப்படுத்துவதோடு, ஒரு கருத்தை ஆழமாகவும் சுருக்கமாகவும் கூற உதவுகின்றன.

இரண்டு முதலாக சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது "சொற்றொடர்" அல்லது "தொடர்" எனப்படும்.

நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும். 

  • ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.
  • இவை ஒரு பொருளை மற்றொன்றுடன் ஒப்பிட்டு விளக்கப் பயன்படுபவை.
இத்தொடர்களைப் படியுங்கள். 
  • மயில் போல ஆடினாள். 
  • மீன் போன்ற கண். 

இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். 

மயில், மீன்உவமை அல்லது உவமானம்
ஆடுதல், கண்உவமேயம்
போல, போன்றஉவம உருபுகள்
  • இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், மீன்) உவமை அல்லது உவமானம் என்பர். 
  • உவமையால் விளக்கப்படும் பொருளை (ஆடுதல், கண்உவமேயம் என்பர். 
  • இத்தொடர்களில் வந்துள்ள 'போல', 'போன்ற' என்பவை உவம உருபுகளாகும். 

இத்தொடரைப் படியுங்கள். 

  • மலர்ப்பாதம் - மலர் போன்ற பாதம் 

இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது. 

மலர்உவமை (உவமானம்)
பாதம்பொருள் (உவமேயம்)
போன்றஉவம உருபு
TNPSC Group 2, 2A, 4 (VAO), TET General Tamil: உவமைத் தொடர்கள் (Uvamai Thodar) - Full Study Notes PDF- வாசித்தல், புரிந்து கொள்ளும் திறன்

எடுத்துக்காட்டு (Tamil Idioms & Phrases)

வரிசை எண் உவமைத் தொடர் விளக்கம் / பொருள் எடுத்துக்காட்டுத் தொடர்
1 மடை திறந்த வெள்ளம் போல் தடையின்றி மிகுதியாக திருவிழாவைக் காண மடைதிறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.
2 உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிப்படைத் தன்மை பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்- Tamil Idioms & Phrases with Meaning

டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் (TNPSC General Tamil) மற்றும் தகுதித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, பாடப்புத்தகங்களில் உள்ள மிக முக்கியமான விலங்குகள் மற்றும் மரங்கள் தொடர்பான உவமைத் தொடர்கள் (Uvamai Thodar), அவற்றின் பொருள் மற்றும் விளக்கங்களுடன் (Proverbs with Meanings) இங்கே அகரவரிசைப்படி (Alphabetical Order) முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் வீடியோ உங்கள் தேர்வுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.



தேடல் பெட்டி (Search Bar): உங்களுக்குத் தேவையான தலைப்பை (எடுத்துக்காட்டாக: பழமொழிகள், பொருள் , விளக்கம் ) உள்ளிட்டுத் தேடினால், அதற்குரிய எல்லா உவமைத் தொடர்களும் உங்களுக்காக நொடிப்பொழுதில் திரையில் தோன்றும். இதன் மூலம் உங்கள் நேரத்தைச் சேமித்து, தேவையான குறிப்புகளை விரைவாகப் படித்துப் பயனடையலாம்!

வ.எண் உவமைத் தொடர் (Uvamai Thodar) பொருள் / விளக்கம் (Meaning)
1அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலபொறுமை / பொறுமையுடன் இருப்பது
2அச்சில் வார்த்தார் போலஒற்றுமை
3அடியற்ற மரம் போலவிழுதல்
4அடுத்தது காட்டும் பளிங்கு போலவெளிப்படுத்தல்
5அணி வகுத்தாற் போலஒழுங்கு
6அத்தி பூத்தாற் போலஅரிய செயல், அருமை
7அனலில் பட்ட புழுப்போல (அழலில் விழுந்த புழுப்போல)துன்பம், வேதனை, துடிப்பு
8அன்றலர்ந்த மலர் போலபுத்துணர்ச்சி / புத்துணர்ச்சியுடன் காணப்படுவது
9அவலையை நினைத்து உரலை இடித்தாற் போலகவனமின்மை
10அலையில் சிக்கிய துரும்பு போலதுன்பம்
11அலையில்லாக் கடல் போலஅமைதி / அமைதியாக இருப்பது
12அரைக் கிணறு தாண்டியவன் போலஆபத்து
13அரண்மனை மாதிரி வீடுபெரியது
14அழுத பிள்ளைக்கு வாழைப் பழம் கொடுத்தது போலஏமாற்றுதல்
15ஆப்பசைத்த குரங்கு போலவேதனை, சிக்குதல்
16ஆழம் தெரியாமல் காலை விட்டாற்போலஅறியாமை
17ஆற்றில் கரைத்த புளிப்போலபயனின்மை
18ஆண்டிகள் மடம் கட்டியது போலஉருவாகாத் திட்டம்
19ஆலையில் அகப்பட்ட துரும்பு போல்துன்பம்
20இஞ்சி தின்ற குரங்கு போலவிழித்தல், வேதனை
21இடியோசை கேட்ட நாகம்போலமருட்சி, நடுக்கம், அச்சம்
22இடிவிழுந்த மரம் போலவேதனை அடைதல்
23இரும்பைக் கண்ட காந்தம் போலகவர்ச்சி
24இருதலைக் கொல்லி எறும்பு போலதவிப்பு / தவிப்பது
25இலவு காத்த கிளி போலஏமாற்றம் அடைதல்
26இலைமறைகாய் போலமறைந்திருத்தல்
27உச்சந்தலையில் ஆணி அறைந்தது போலஉறுதி / உறுதியுடன்
28உடுக்கை இழந்தவன் கை போலஆதரவு, நம்பு, உதவி செய்தல்
29உடும்புப் பிடிபோலஉறுதியான பிடிப்பு, உறுதியின்மை (சூழல் சார்ந்து)
30உமிகுற்றிக் கை வருந்தினால் போலவேதனை, வருத்தம்
31உயிரும் உடம்பும் போல (உடலும் உயிரும் போல)ஒற்றுமை, நெருக்கம்
32உமையும், சிவனும் போலநட்பு, நெருக்கம்
33உள்ளங்கை நெல்லிக்கனி போலதெளிவு, வெளிப்படைத் தன்மை / தெளிவாகத் தெரிவது
34ஊசியும், நூலும் போலஇணை பிரியாமை
35ஊமை கண்ட கனவு போலதவிப்பு, கூற இயலாமை
36ஊருணி நீர் நிறைந்திருத்தல் போலஉதவுதல்
37எட்டாத பழம் புளிக்கும் என்பது போலஏமாற்றம்
38எலியும் பூனையும் போலவிரோதம், பகைமை
39எள்ளில் எண்ணெய் போலஒளிந்திருத்தல்
40ஏழை பெற்ற செல்வம் போலமகிழ்ச்சி
41ஏரி முன்னர் வைத்தූறு போலஅழிவு உறுதி
42ஒருநாள் கூத்துக்கு மீசை எடுத்தாற் போலவீண் செயல்
43ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஒட்டினாற் போலவிரட்டுதல்
44ஒற்கத்தின் ஊற்றாம் துணை போலஊன்று கோல்
45கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போலகால தாமதம்
46கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலதுன்பம்
47கண்ணிலாதான் கண் பெற்று இழந்தது போலதவிப்பு
48கண் கட்டு வித்தை போலமாயத்தேரை
49கயிரற்ற பட்டம் போலதவித்தல்
50கரடி பிறை கண்டது போலமிக அரிது, அதிசயம்
51கரையான் புற்றில் கருநாகம் புகுந்தது போலஅத்துமீறல்
52காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தது போலஆர்வம், வேகம்
53காண மயிலாட அதுகண்டு ஆடும் வான்கோழி போலதாழ்வு உயர்வின்மை
54காற்றின் சீக்கிய கலம் போல (புயலில் சிக்கிய கலம் போல)நடுக்கம், கலக்கம்
55காற்றுள்ள போதே தூற்றிக் கொள்நேரத்தை சரியாக பயன்படுத்துதல்
56காட்டுத் தீ போல பரவியது (செய்தி காட்டுத் தீ போல பரவியது)வேகமாக பரவுதல், விரைவு
57காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போலதற்செயல் நிகழ்வு
58கடன்பட்டார் நெஞ்சம் போலகலக்கம்
59கடலில் கரைத்த காயம் போல (கடலில் கரைத்த பெருங்காயம் போல)பயனற்றது
60கடல்மடை திறந்தாற்போல (கரவொலி கடல்மடை திறந்தாற்போல)பெருக்கம்
61கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போலபிறரை ஏமாற்றுதல்
62கடுகு போல் உள்ளம் கொண்டோன்சிறுமை
63கனியிருக்க காய் கவர்ந்தாற் போலதேவையற்ற செயல்
64கவரிமான் போலமானம்
65கல் பிள்ளையார் போலஉறுதி
66கல் மேல் எழுத்துப் போலஉறுதியாக
67கைப் புண்ணிற்கு கண்ணாடி வேண்டாதது போலதெளிவாகத் தெரிதல்
68கிணற்றுத் தவளை போலஅறியாமை / அறியாமல் இருப்பது
69கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போலஎதிர்பாரா நிகழ்வு
70கிளியை வளர்த்து பூனைக் கையில் கொடுத்தது போலவேதனை, கொடுமை
71கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போலஎதிர்பாராத நல்வரவு
72குடத்தில் இட்ட விளக்குப் போலஇகழ்ச்சி (மறைத்தல்)
73குருடன் கண் பெற்றது போலமகிழ்ச்சி
74குன்றை முட்டிய குருவி போலவேதனை
75குட்டி போட்ட பூனை போலதவிப்பு, அலைதல் / தவிப்பது
76குரங்கு கை பூமாலை போலநாசம்
77குருடும் செவிடும் கூத்துப் பார்த்தது போலபயனின்மை
78குன்றின் மேல் இட்ட விளக்குப் போல (குன்றின் மேலிட்ட விளக்கைப் போல)பயனுடைமை, எல்லார்க்கும் பயன்படுவது
79கூழில் விழுந்த ஈப்போலதவிப்பு
80கொல்லன் தெருவில் ஊசி விற்பது போலஅறியாமை
81கோலெடுத்தால் குரங்கு ஆடுவது போலபயம்
82குளிக்கப் போய் சேற்றை பூசிக் கொண்டு வருவது போலகுறும்புகளில் ஈடுபடுவது / வீண் வினை
83குந்தித் தின்றால் குன்றும் மாளும்சோம்பல்
84சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போலஅதிக இன்பம்
85சாயம் போன சேலை போலஅழகின்மை, மதிப்பின்மை
86சித்திரை பதுமைப் போலஅழகு
87சிதறிய முத்துப் போலவீண்
88சிவ பூஜையில் கரடி போலதேவையற்ற வரவு
89சிறகு இழந்த பறவை போலகொடுமை, இயலாமை
90சீறிய நாகம் போலகோபம்
91சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போலவேண்டாத வேலை
92சூரியனைக் கண்ட பனி போல் (சூர்யனைக் கண்ட பனி போல்)விலகல், நீங்குதல்
93செவிடன் காதில் சங்கு ஊதியது போலபயனின்மை
94செல்லரித்த ஓலை போலவீண்
95சேற்றில் முளைத்த செந்தாமரை போல (சேற்றில் மலர்ந்த செந்தாமரை)உயர்வு, மேன்மை, குடிப்பிறப்பின் சிறப்பு
96செந்தமிழும் சுவையும் போலஒற்றுமை
97செம்புலப் பெயல் நீர் போலசேர்ந்ததன் தன்மையாதல்
98சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போலஅறிவின்மை
99சூல் கொண்ட மேகம்எதிர்பார்ப்பு
100ஞாயிறு கண்ட தாமரை போலமகிழ்ச்சி
101தயிர்கடையும் பொழுது தாழி உடைந்தது போலவேதனை
102தாயைக் கண்ட சேயைப் போலஅதிக மகிழ்ச்சி
103தாமரை இலைத் தண்ணீர் போலபற்றின்மை
104திருடனைத் தேள் கொட்டியது போலசொல்ல முடியாத வேதனை
105தெரு நாய் போலஅலைச்சல்
106தோன்றி மறையும் வானவில் போலநிலையாமை
107தோண்டத் தோண்ட நீர் சுரத்தல் போலபெருக்கம்
108தானே ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்பாசம் / ரத்த உறவு
109நகமும், சதையும் போலஇணை பிரியாமை, பெருநட்பு
110நத்தைக்குள் முத்துப் போலமேன்மை
111நாண் அறுத்த வில் போலபயனற்றது
112நாய் பெற்ற தெங்கம்பழம் போலபயனின்மை, தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இருப்பது
113நீருக்குள் பாசி போலநட்பு
114நாயும், பூனையும் போலபகைமை
115நீரும், நெருப்பும் போலவிலகுதல் / பகை
116நீர் மேல் எழுத்துப் போலநிலையற்றது, வெளித் தெரியாமை
117நெருப்பாறும், மயிர் பாலமும் போலஇல்லாத ஒன்று / இயலாத செயல்
118நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போலஒற்றுமையின்மை
119நீறு பூத்த நெருப்புப்போலமறைந்திருக்கும் ஆற்றல் / சாம்பல் மூடிய தணல்
120நுணலும் தன் வாயால் கெடும்அறியாமை / தன் வாயால் அழிதல்
121பகலவனைக் கண்ட பனிப்போலவிலகுதல், நீங்குதல், ஓட்டம்
122பத்தரை மாற்றுத் தங்கம் போலபெருமை
123பசுமரத்து ஆணிபோலஎளிதாக பதிதல், எளிதில் மனத்தில் பதிதல்
124பஞ்சத்து ஆண்டிபோலவறுமை
125பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போலஇயலாத செயல்
126பழம் நழுவி பாலில் விழுந்தது போலஇன்ப மிகுதி
127பசுந்தோல் போர்த்திய புலிநயவஞ்சகம்
128பசுவை பிரிந்த கன்று போலபிரிவு
129பள்ளத்தில் பாயும் வெள்ளம் போலஇயல்பு
130பாம்பின் வாய் அகப்பட்ட தேரை போலமீளாமை துன்பம்
131பாம்பும் கீரியும் போலபகை
132பாரமேற்றிய வண்டி போல்சுமை
133பற்று மரமில்லா கொடிபோலஆதரவின்மை
134பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை போலவெகுளித் தன்மை
135பாம்புக்கு பால் வார்த்தது போலதீமையான செயல்
136புளியம் பழமும் ஓடும் போலஒட்டாமை
137புற்றிலிருக்கும் பாம்பெனசீற்றம், கோபம்
138புற்றீசல் போலஅதிகம் பெருகல், மிகுதி
139புனையா ஓவியம் போலஅழகு
140பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போலஉயர்வு
141பூவும் மணமும் போலநட்பு
142பெட்டிப் பாம்பெனஅடக்கம்
143பேடிகை வாளாண்மை போலக்கெடும்முயற்சியின்மை
144பொருபுலி புலியோடு சிலைத்த போல்எதிரெதிரே நின்று போரிடல்
145பொன்மலர் மணம் பெற்றது போலபொருட்செல்வர் அறிவுச் செல்வத்தால் தேடிக்கொள்வது
146புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதுசான்றாண்மை
147மடை திறந்த வெள்ளம் போல் (மடைதிறந்த வெள்ளம் போல)தடையின்றி மிகுதியாக, விரைவு
148மலரும் மணமும் போலஒற்றுமை, இணைந்திருத்தல்
149மணியும் ஒளியும் போலசிதைவு / இணைபிரியாமை
150மழை காணாப் பயிர் போலவாடுதல்
151மழை கண்ட பயிர் போலமகிழ்ச்சி
152மது உண்ட குரங்கு போலமயக்கம்
153மலையைக் கில்லி எலி பிடிப்பது போலவேண்டாத செயல் / வீண் முயற்சி
154மேகம் கண்ட மயில் போலமகிழ்ச்சி
155மதம் கொண்ட யானை போலவீரம்
156மலடி பெற்ற மகன் போலபெருமிதம்
157மலையிட்ட விளக்குப் போலபயனுடைமை, உயர்வு
158மன்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போலபயனில்லை, பயனின்மை
159மான் கூட்டத்தில் புகுந்த புலி போலபெரும் வேட்டை
160மாலுமி இல்லா மரக்கலம் போலதுன்பம்
161முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலஇயலாமை
162முக்காலம் உணர்ந்த முனிவர் போல்தெளிவு / அறிவு
163மரம் போல்வர்மக்கள் பண்பு இல்லாதவர்
164மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போலமயங்குதல்
165மின்னாமல் இடி இடித்தது போலஎதிர்பாராத செய்தி / அதிர்ச்சி
166யானையால் யானைத்தற்று (யானையைக் கொண்டு யானையைப் பிடித்தல்)ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தல்
167யானை வாய்க்கரும்பு போலநடுக்கம் / பேராபத்து
168யானை பசிக்கு சோளப்பொரி போலஇயலாமை / பற்றாக்குறை
169வலையில் அகப்பட்ட மான் போலதுன்பம்
170வள்ளியும் முருகனும் போலஒற்றுமை, அன்பு
171வளர்த்த கடா மார்பில் பாய்வது போலதுன்பம் / துரோகம்
172வாழைப் பழத்தில் ஊசி ஏறுவது போலமென்மை
173விளக்கு கண்ட விட்டில் பூச்சி போலஆபத்து, அறியாமை
174விழலுக்கு இறைத்த நீர் போலவீண், பயனற்ற செயல்
175வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலவருத்தம் / வேதனை அதிகரித்தல்
176விரலுக்கு ஏத்த வீக்கம் போலமன நிறைவு / தகுதிக்கு ஏற்ப
177வெண்கலக் கடையில் யானை புகுந்தது போலநடுக்கம் / பெரும் சேதம்
178வெயிலில் அகப்பட்ட புழுப்போலவேதனை
179வேம்பும் அரசும் போலஒற்றுமை
180வேலியே பயிரை மேய்ந்தது போல்நயவஞ்சகம் / துரோகம்

விலங்குகள் தொடர்பான உவமைத் தொடர்கள்களைத் திரட்டி வருக. 

வ.எண் விலங்குகள் தொடர்பான உவமைத் தொடர் / பழமொழி விளக்கம் / பொருள் (குழுக்கள்)
1ஆப்பசைத்த குரங்கு போலவேதனை (சிக்குதல்)
2இருதலைக் கொல்லி எறும்பு போலதவிப்பு
3கிளியை வளர்த்து பூனைக் கையில் கொடுத்தது போலவேதனை
4குன்றை முட்டிய குருவி போலவேதனை
5கூழில் விழுந்த ஈப்போலதவிப்பு
6திருடனைத் தேள் கொட்டியது போலசொல்ல முடியாத வேதனை
7பாம்பின் வாய் அகப்பட்ட தேரை போலதுன்பம், மீளாமைத் துன்பம்
8அனலில் விழுந்த புழுப்போலதுன்பம்
9பசுவை பிரிந்த கன்று போலபிரிவுத் துன்பம்
10வலையில் அகப்பட்ட மான் போலதுன்பம் / சிக்கிக்கொள்ளுதல்
11வெயிலில் அகப்பட்ட புழுப்போல (விழுந்த மரம் போல)வேதனை
12இடிகேட்ட நாகம் போல (இடி ஓசை கேட்ட நாகம் போல)மருட்சி, நடுக்கம், அச்சம்
13கோலெடுத்தால் குரங்கு ஆடுவது போலபயம்
14சீறிய நாகம் போலகோபம்
15புற்றிலிருக்கும் பாம்பெனசீற்றம், கோபம்
16வெண்கலக் கடையில் யானை புகுந்தது போலநடுக்கம் / பேரழிவு
17யானை வாய்க்கரும்பு போலநடுக்கம் / பேராபத்து
18காண மயிலாட அதுகண்டு ஆடும் வான்கோழி போலதாழ்வு உயர்வின்மை (போலித்தனம்)
19கிணற்றுத் தவளை போலஅறியாமை
20சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போலஅறிவின்மை
21நுணலும் தன்வாயால் கெடும்அறியாமை / தன் வாயால் அழிதல்
22இஞ்சி தின்ற குரங்கு போலவிழித்தல் / மிரட்சி
23இலவு காத்த கிளி போலஏமாந்து போதல் / ஏமாற்றம்
24யானை பசிக்கு சோளப்பொரி போல (முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல)பற்றாக்குறை / இயலாமை
25விளக்கு கண்ட விட்டில் பூச்சி போலஆபத்து, அறியாமை
26எலியும், பூனையும் போலவிரோதம், பகை
27கரையான் புற்றில் கருநாகம் புகுந்தது போலஅத்துமீறல்
28நாயும், பூனையும் போலபகைமை
29பாம்பும் கீரியும் போலதீராத பகை
30பாம்புக்கு பால் வார்த்தது போலதீமையான செயல் / வீண் உதவி
31பசுந்தோல் போர்த்திய புலிநயவஞ்சகம்
32வளர்த்த கடா மார்பில் பாய்வது போலநம்பிக்கைத் துரோகம் / துன்பம்
33குரங்கு கை பூமாலை போலநாசம் / மதிப்பிழப்பு
34நாய் பெற்ற தெங்கம்பழம் போலபயனின்மை (தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் தராமல்)
35மலையைக் கில்லி எலி பிடிப்பது போலவேண்டாத செயல் / வீண் முயற்சி
36மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போலபயனின்மை / நம்பகத்தன்மையற்றது
37உடும்புப் பிடிபோலஉறுதியான பிடிப்பு
38மதில் மேல் பூனை போலஉறுதியின்மை / நிலையற்ற நிலை
39கவரிமான் போலமானம் / சுயமரியாதை
40காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தது போலஆர்வம், வேகம்
41குட்டி போட்ட பூனை போலதவிப்பு, அலைச்சல்
42சிவ பூஜையில் கரடி போலதேவையற்ற வரவு (இடையூறு)
43தெரு நாய் போலவீண் அலைச்சல்
44நத்தைக்குள் முத்துப் போலமேன்மை
45மது உண்ட குரங்கு போலமயக்கம்
46மதம் கொண்ட யானை போலவீரம் / கட்டுக்கடங்கா வேகம்
47மான் கூட்டத்தில் புகுந்த புலி போலபெரும் வேட்டை / அச்சமூட்டல்
48புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதுசான்றாண்மை / கொள்கை உறுதி
49புற்றீசல் போலஅதிகம், பெருக்கம், மிகுதி
50பெட்டிப் பாம்பெனஅடக்கம்
51மேகம் கண்ட மயில் போலமகிழ்ச்சி / பேரானந்தம்

மரங்கள் தொடர்பான சில உவமைத் தொடர்கள் 

வரிசை எண் மரங்கள் தொடர்பான உவமைத் தொடர் விளக்கம் / பொருள்
1அத்தி பூத்தாற் போலஅரிய செயல் - அருமை
2அன்றலர்ந்த மலர் போலபுத்துணர்ச்சி
3அடியற்ற மரம் போலவிழுதல்
4அழுத பிள்ளைக்கு வாழைப் போலஏமாற்றுதல்
5ஆற்றில் கரைத்த புளிப்போலபயனின்மை
6இடிவிழுந்த மரம் போலவேதனை
7உள்ளங்கை நெல்லிக்கனி போலதெளிவு
8எள்ளில் எண்ணெய் போலஒளிந்திருத்தல்
9எட்டாத பழம் புளிக்கும் என்பது போலஏமாற்றம்
10கடுகு போல் உள்ளம் கொண்டோன்சிறுமை
11கனியிருக்க காய் கவர்ந்தாற் போலதேவையற்ற செயல்
12கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போலபிறரை ஏமாற்றுதல்
13ஞாயிறு கண்ட தாமரை போலமகிழ்ச்சி
14சேற்றில் முளைத்த செந்தாமரை போலஉயர்வு, மேன்மை
15சேற்றில் மலர்ந்த செந்தாமரைகுடிப்பிறப்பின் சிறப்பு
16தாமரை இலைத் தண்ணீர் போலபற்றின்மை
17நீருக்குள் பாசி போலநட்பு
18பசுமரத்து ஆணிபோலஎளிதாக பதிதல்
19பழம் நழுவி பாலில் விழுந்தது போலஇன்ப மிகுதி
20பற்று மரமில்லா கொடிபோலஆதரவின்மை
21புளியம் பழமும் ஓடும் போலஒட்டாமை
22பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போலஇயலாத செயல்
23பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போலஉயர்வு
24பூவும் மணமும்நட்பு
25மலரும் மணமும்ஒற்றுமை
26மழை காணாப் பயிர் போலவாடுதல்
27மழை கண்ட பயிர் போலமகிழ்ச்சி
28மரம் போல்வர்மக்கள் பண்பு இல்லாதவர்
29மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போலமயங்குதல்
30வாழைப் பழத்தில் ஊசி ஏறுவது போலமென்மை
31வேம்பும் அரசும் போலஒற்றுமை
32வேலியே பயிரை மேய்ந்தது போலநயவஞ்சகம்

மனவேதனை தொடர்பான சில உவமைத் தொடர்கள்

வ.எண் உவமைத் தொடர் பொருள் / விளக்கம்
1 இருதலைக் கொள்ளி எறும்பு போல எந்தப் பக்கமும் செல்ல முடியாமல் இரண்டு பக்கமும் வேதனையில் தவிப்பது.
2 ஆப்பசைத்த குரங்கு போல தேவையில்லாத காரியத்தில் தலையிட்டு வீணான ஆபத்தில் சிக்கி வேதனைப்படுதல்.
3 இஞ்சி தின்ற குரங்கு போல என்ன செய்வதென்று தெரியாமல் முகத்தை சுளித்துக்கொண்டு வேதனைப்படுதல்.
4 இடிவிழுந்த மரம் போல எதிர்பாராத பெரிய இழப்பால் நிலைகுலைந்து வேதனை அடைதல்.
5 உமிகுற்றிக் கை வருந்தியது போல பயனில்லாத ஒரு செயலைச் செய்துவிட்டு வீணாகக் கையும், மனமும் வருந்துதல்.
6 திருடனைத் தேள் கொட்டியது போல தனக்கு வந்த துன்பத்தை வெளியில் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிப்பது.
7 வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஏற்கனவே வேதனையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் வகையில் பேசுவது அல்லது நடப்பது.

துன்பம் தொடர்பான சில உவமைத் தொடர்கள்

வ.எண் உவமைத் தொடர் பொருள் / விளக்கம்
1 அனலில் பட்ட புழுப்போல (அழலில் விழுந்த புழுப்போல) நெருப்பில் விழுந்த புழு துடிப்பது போன்ற தாங்க முடியாத துன்பம்.
2 அலையில் சிக்கிய துரும்பு போல / ஆலையில் அகப்பட்ட துரும்பு போல் சொந்தமாக எந்த முடிவும் எடுக்க முடியாமல், சூழ்நிலைகளின் கட்டாயத்தால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்புறுதல்.
3 கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல எந்த ஒரு துணையும், வழியும் தெரியாத நடுக்காட்டில் தவிப்பது போன்ற ஆதரவற்ற, நம்பிக்கையற்ற துன்ப நிலை.
4 பாம்பின் வாய் அகப்பட்ட தேரை போல மரணம் அல்லது பெரிய ஆபத்து நிச்சயம் என்று தெரிந்தும், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் துன்பம்.
5 வலையில் அகப்பட்ட மான் போல சுதந்திரமாக இருக்க முடியாமல் ஆபத்தான வலையில் சிக்கிக்கொண்டு படும் அவதி.
6 மழை காணாப் பயிர் போல தண்ணீரின்றி வாடும் பயிரைப் போல, ஆதரவின்றி வறுமையிலோ அல்லது கவலையிலோ வாடுதல்.
7 பற்று மரமில்லாக் கொடி போல வாழ்க்கையில் எந்தவொரு ஆதரவும் இல்லாமல் தவிக்கும் துன்ப நிலை.

அச்சமும் நெஞ்ச நடுக்கமும் தொடர்பான சில உவமைத் தொடர்கள்

வ.எண் உவமைத் தொடர் பொருள் / விளக்கம்
1 இடிகேட்ட நாகம் போல (இடியோசை கேட்ட நாகம்போல) பயங்கரமான இடி சத்தத்தைக் கேட்டுப் பாம்பு நடுங்குவது போல, மிகுந்த அச்சத்திற்கும் மிரட்சிக்கும் உள்ளாவது.
2 கோலெடுத்தால் குரங்கு ஆடுவது போல தண்டிக்கும் அதிகாரத்தைக் கண்டு பயந்து, சொன்னபடி அடங்கி நடப்பது.
3 யானை வாய்க்கரும்பு போல யானையின் வாயில் சிக்கிய கரும்பு தப்ப முடியாது என்பது போல, பேராபத்தில் சிக்கி நடுங்குவது.
4 காற்றின் சிக்கிய கலம் போல (புயலில் சிக்கிய கப்பல்) எந்த நொடியும் மூழ்கலாம் என்ற கடுமையான அச்சத்திலும் கலக்கத்திலும் இருப்பது.
5 விளக்கு கண்ட விட்டில் பூச்சி போல தனக்கு வரப்போகும் ஆபத்தை (அழிவை) அறியாமல், கவர்ச்சியில் மயங்கிப் பயமின்றிச் சென்று சிக்கிக்கொள்ளுதல் (மூர்க்கத்தனமான அறியாமைப் பயம்).
6 பெட்டிப் பாம்பைப் போல அதிகாரத்திற்கோ அல்லது ஆபத்திற்கோ பயந்து அடங்கி நடுங்கிப் போய் இருப்பது.

சொலவடைகள்

சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை. 

உவமை அணி விளக்கம்

அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.

பழமொழிகள்(Tamil Proverbs)

நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள் (Proverbs), விடுகதைகளைப் படித்தால், தமிழின் மிகப் பெரியதொரு சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம்.

🎯இந்தத் தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

பொருத்துக: (பொருத்தப்பட்டுள்ளது) உவமைத் தொடர்கள்

உவமைத் தொடர் பொருள் / விளக்கம்
காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல தற்செயல் நிகழ்வு
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல எதிர்பாரா நிகழ்வு
பசு மரத்து ஆணி போல எளிதில் மனத்தில் பதிதல்
விழலுக்கு இறைத்த நீர் போல பயனற்ற செயல்
நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல ஒற்றுமையின்மை

உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

வ.எண் உவமைத் தொடர் பொருள் / விளக்கம் எடுத்துக்காட்டுத் தொடர்
1 குன்றின் மேலிட்ட விளக்கைப் போல எல்லார்க்கும் பயன்படுவது முத்துராமலிங்க தேவர் அவர்களின் அறிவுரைகள் அனைத்தும் குன்றின் மேலிட்ட விளக்கை போல பயன்படுகிறது.
2 வேலியே பயிரை மேய்ந்தது போல நயவஞ்சகம் / துரோகம் வேலியே பயிரை மேய்ந்தது போல சில அரசு அதிகாரிகள் மக்களுக்குச் சேவை செய்யாமல் தனக்காகப் பயன்படுத்துகின்றனர்.
3 பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இன்ப மிகுதி தீபாவளி பண்டிகைக்குக் குடும்பத்தினர் அனைவரும் வந்ததுடன் பரிசுகள் தந்தது, பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இருந்தது.
4 உடலும் உயிரும் போல ஒற்றுமை, நெருக்கம் கணவன் மனைவியும் உடலும் உயிரும் போல ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
5 கிணற்றுத் தவளை போல அறியாமை மற்றவர் எனக்குச் செய்த தீமைகளை அறியாமல் கிணற்றுத் தவளை போல இருந்து விட்டேன்.

TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO), TET Tamil Model Questions and Answers

1. "இருதலைக் கொல்லி எறும்பு போல" - என்னும் உவமையால் விளக்கப் பெறும் பொருள் யாது?

A) தவிப்பது
B) உதவி
C) பகை
D) இரண்டு
விடையைக் காட்டு (Show Answer)
விடை: A) தவிப்பது
விளக்கம்: எரியும் கொள்ளிக்கட்டையின் இரு பக்கமும் நெருப்பு இருக்கும் போது இடையில் உள்ள எறும்பானது எங்குச் செல்வது என்று தெரியாமல் தவிப்பது போல, ஒரு நபர் இருபக்கமும் துன்பத்தை எதிர்கொண்டு தவிப்பதைக் குறிக்கும்.

2. "பாம்பும் கீரியும் போல" என்னும் உவமையால் விளக்கப் பெறும் பொருள் யாது?

A) உதவி
B) பகை
C) தீங்கு
D) தீது
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) பகை
விளக்கம்: பாம்பும் கீரியும் எப்போதும் ஒன்றுக்கொன்று தீராத எதிர்ப்பைக் கொண்டிருப்பது போல, இரு தரப்பினருக்கு இடையே நிலவும் மாறாத பகைமையை உணர்த்த இவ்வுவமை பயன்படுகிறது.

3. "முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல" - என்னும் உவமையால் விளக்கப் பெறும் பொருள் யாது?

A) ஏமாற்றம்
B) முயற்சி
C) தோல்வி
D) இயலாமை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: D) இயலாமை
விளக்கம்: மரத்தின் உச்சிக் கொம்பில் இருக்கும் தேனை எடுக்க நடக்க முடியாத ஒரு முடவன் ஆசைப்பட்டாலும் அவனால் அதைச் செய்ய முடியாது. இது ஒருவரால் செய்ய முடியாத 'இயலாமை' நிலையைக் குறிக்கும்.

4. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' உவமையால் விளங்கப் பெறும் பொருளைத் தேர்க.

A) மறைத்தல்
B) குழப்பம்
C) மறைபொருள்
D) வெளிப்படை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: D) வெளிப்படை
விளக்கம்: உள்ளங்கையில் நெல்லிக்கனியை வைத்தால் அது எவ்வித மறைவும் இன்றித் தெளிவாகத் தெரியும். அதுபோல, ஒரு விஷயம் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் விளங்குவதைக் குறிக்க இவ்வுவமை பயன்படுகிறது.

5. 'இலவுகாத்த கிளி போல' என்னும் உவமை மூலம் விளக்கும் பொருள் யாது?

A) ஏமாற்றமின்மை
B) ஏமாற்றம்
C) முயற்சி
D) தோல்வி
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) ஏமாற்றம்
விளக்கம்: இலவம்பஞ்சின் காய் பழுத்தால் பழம் கிடைக்கும் என கிளி காத்திருக்கும், ஆனால் அது பஞ்சாக வெடித்து ஏமாற்றமளிக்கும். வீணான எதிர்பார்ப்பால் ஏற்படும் 'ஏமாற்றம்' அல்லது ஏமாந்து போதலை உணர்த்தும்.

6. 'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?

A) கோபம்
B) பொறுமை
C) மென்மை
D) வன்மை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) பொறுமை
விளக்கம்: தன்னைத் தோண்டுபவர்களையும் விழாமல் தாங்கி நிற்கும் பூமியைப் போல, தமக்குத் தீமை செய்பவர்களையும் பொறுத்துக் கொள்ளும் 'பொறுமை' என்னும் நற்பண்பைக் குறிக்கும்.

7. "மலரும் மணமும் போல" இவ்வுவமை விளக்கும் பொருளைக் கண்டறிக.

A) பிரிந்திருத்தல்
B) சேராதிருத்தல்
C) இணைந்திருத்தல்
D) அறியாதிருத்தல்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) இணைந்திருத்தல்
விளக்கம்: மலரையும் அதன் நறுமணத்தையும் எப்படித் தனியாகப் பிரிக்க முடியாதோ, அதுபோல இரு மனிதர்கள் அல்லது கருத்துக்கள் எப்போதும் பிரியாமல் 'இணைந்திருத்தல்' அல்லது ஒற்றுமையாக இருப்பதைக் குறிக்கும்.

8. 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' இவ்வுவமை விளக்கும் பொருள் என்ன?

A) கோபம்
B) தவிப்பு
C) ஆட்டம்
D) பாசம்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: D) பாசம்
விளக்கம்: ஒருவருக்குத் துன்பம் வரும்போது அவரோடு உள்ளவர்கள் விலகி நின்றாலும், ரத்த பந்தம் உடைய உறவினர்களின் உள்ளம் துடித்துத் தன்னிச்சையாக உதவிக்கு வரும். இது குடும்ப 'பாசம்' மற்றும் ரத்த உறவின் வலிமையைக் குறிக்கும்.

9. 'மின்னாமல் இடி இடித்தது போல' - இவ்வுவமை விளக்கும் பொருள் என்ன?

A) எதிர்பார்த்த செய்தி
B) எதிர்பாராத செய்தி
C) மகிழ்ச்சியான செய்தி
D) துக்கமான செய்தி
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) எதிர்பாராத செய்தி
விளக்கம்: பொதுவாக மின்னல் தோன்றிய பிறகே இடி சத்தம் கேட்கும். ஆனால் மின்னல் இல்லாமலேயே திடீரென இடி இடித்தால் அது எவ்வளவு ஆச்சரியமோ, அதுபோல வாழ்வில் நிகழும் 'எதிர்பாராத' அதிர்ச்சியான செய்தியைக் குறிக்கும்.

10. 'மடைதிறந்த வெள்ளம் போல' - இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?

A) ஆரவாரம்
B) விரைவு
C) இரைச்சல்
D) நிதானம்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) விரைவு (அல்லது தடையின்றி மிகுதியாய்)
விளக்கம்: அணையின் மதகை அல்லது மடையைத் திறந்தவுடன் நீர் எவ்விதத் தடையுமின்றி அதிவேகமாகப் பாய்ந்து செல்லும். அதுபோல, ஒரு காரியம் எவ்விதத் தடையுமின்றி 'விரைவாகவோ' அல்லது மிக அதிகமாகவோ நடப்பதைக் குறிக்கும்.

11. 'பிறைநுதல்' -  என்ற உவமையில் நுதல்  என்பதன் பொருள் யாது?

A) கண்
B) கூந்தல்
C) நெற்றி
D) புருவம்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: C) நெற்றி
விளக்கம்: 'நுதல்' என்றால் தமிழ் இலக்கியத்தில் நெற்றி என்று பொருள். மூன்றாம் பிறை நிலவைப் போன்ற வடிவத்தைக் கொண்ட அழகான 'நெற்றிக்கு' இப்பெயர் உவமையாகக் கூறப்படுகிறது.

12. 'உடுக்கை இழந்தவன் கைபோல' பொருத்தமான பொருளைத் தேர்க.

A) வெறுத்தல்
B) உதவுதல்
C) சிரித்தல்
D) வருந்துதல்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) உதவுதல்
விளக்கம்: ஒருவனுடைய ஆடை (உடுக்கை) நழுவும் போது, அவனது கை எப்படித் தானாகவே சென்று ஆடையைக் காக்கிறதோ, அதுபோல நண்பனுக்குத் துன்பம் வரும்போது உடனடியாகச் சென்று 'உதவுதல்' வேண்டும் என்ற நட்பின் இலக்கணத்தைக் குறிக்கும்.

13. 'நகமும் சதையும் போல' - உவமைக்கேற்ற பொருளைத் தேர்க.

A) மகிழ்ச்சி
B) பெருநட்பு
C) பேரச்சம்
D) பெரும்பகை
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) பெருநட்பு (இணைந்திருத்தல்)
விளக்கம்: விரல் நகமும் அதோடு ஒட்டியிருக்கும் சதையும் எப்போதும் பிரிக்க முடியாதபடி ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும். அதுபோல நெருங்கிய நண்பர்கள் பிரியாமல் இணைந்திருக்கும் 'பெருநட்பைக்' குறிக்கும்.

14. 'நாய் பெற்ற தெங்கம் பழம்' - இவ்வுவமையால் விளங்கப்பெறும் பொருள் யாது?

A) தான் மட்டும் அனுபவிக்கத் தெரியாதவன்
B) தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் வாழ்பவன்
C) பிறருக்குக் கொடுப்பவன்
D) தானும் அனுபவித்து பிறருக்கும் கொடுப்பவன்
விடையைக் காட்டு (Show Answer)
விடை: B) தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் வாழ்பவன்
விளக்கம்: நாய் ஒரு முழுத் தேங்காயைப் பெற்றால், அதன் கடினமான ஓட்டினால் அதை உடைத்துத் தானும் திண்ண முடியாது, பிற விலங்குகளுக்கும் கொடுக்காது. அதுபோலப் பயனுள்ள ஒரு பொருளை வைத்துக்கொண்டு தானும் பயன்படுத்தாமல் பிறருக்கும் தராமல் இருப்போரைக் குறிக்கும்.

15. 'குன்றின் மேலிட்ட விளக்கென' - பொருத்தமான பொருளைத் தேர்க.

A) உயரமாகத் தெரிகிறது
B) பாதுகாப்பாக இருக்கிறது
C) வெளிச்சமாகத் தெரிகிறது
D) தெளிவாகத் தெரிகிறது
விடையைக் காட்டு (Show Answer)
விடை: D) தெளிவாகத் தெரிகிறது (அல்லது உலகறியத் தெரிதல்)
விளக்கம்: மலையின் உச்சியில் வைக்கப்பட்ட விளக்கின் வெளிச்சம் சுற்றியுள்ள எல்லா இடங்களுக்கும் எவ்விதத் தடையுமின்றித் தெளிவாகத் தெரியும். அதுபோல ஒருவருடைய புகழோ அல்லது ஒரு நற்காரியமோ உலகத்தார் அனைவருக்கும் 'தெளிவாகத் தெரிவதை' உணர்த்தும்.

வெளி இணைப்புகள் (Reference Links / External Links)

உள் இணைப்புகள் (Internal Links)

பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)

தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு TNPSC Group 4 VAO, 2 2A, TET Tamil Study Material: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.