உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் 19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல், 21. பழமொழிகள் என்ற பகுதி வருகிறது.

இந்த பகுதியில் கீழ் கேட்கப்பட்ட சில TNPSC கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தலைப்புகள்(toc)

TNPSC previous year questions and answers 

1. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' (group 4 2022)

(A) வெளிப்படைத் தன்மை

(B) வெளிப்படையற்ற தன்மை

(C) மறைத்து வைத்தல்

(D) தன்னலமின்மை

(E) விடை தெரியவில்லை

2. விழலுக்கு இறைத்த நீர் போல இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?  (group 2 2022)

(A) பயனுள்ள செயல்

(B) பயனற்ற செயல்

(D) எதிர்பாராத செயல்

(D) எதிர்பார்த்த செயல்

3. ''மடை திறந்த வெள்ளம் போல்'' உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க. (group 2 2022)

(A) வெளிப்படைத் தன்மையாக

(B) தெள்ளத் தெளிவாக

(C) தடையின்றி மிகுதியாய்

(D) எளிதில் மனத்தில் பதிதல்

(E) விடை தெரியவில்லை

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

  • காற்றுள்ள போதே தூற்றிக் கொள் - நேரத்தை சரியாக பயன்படுத்துவது
  • கிணற்றுத் தவளை போல - அறியாமல் இருப்பது
  • குட்டி போட்ட பூனை போல - தவிப்பது
  • குன்றின் மேல் இட்ட விளக்குப் போல - எல்லார்க்கும் பயன்படுவது 
  • அன்றலர்ந்த மலர் போல - புத்துணர்ச்சியுடன் காணப்படுவது
  • அழலில் விழுந்த புழுப்போல - வேதனையுடன் இருப்பது
  • அலையில்லாக் கடல் போல - அமைதியாக இருப்பது
  • அகழ்வாரைத் தாங்கும் நிலம் - பொறுமையுடன் இருப்பது 
  • இருதலைக் கொல்லி எறும்பு போல - தவிப்பது
  • இலவு காத்த கிளி போல - ஏமாற்றம் அடைதல்
  • இஞ்சி தின்ற குரங்கு போல - விழித்தல்
  • இடிவிழுந்த மரம் போல  - வேதனை அடைதல்
  • அவலை நினைத்து உரலை இடித்தாற் போல -  கவனமின்மை 
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவுவாக தெரிவது
  • உடுக்கை இழந்தவன் கை போல - உதவி செய்தல்
  • உடும்புப் பிடிபோல - உறுதியான பிடிப்பு
  • ஊசியும், நூலும் போல - இணை பிரியாமை
  • உச்சந்தலையில் ஆணி - உறுதியுடன்

உவமையால் விளக்கப்பெறும் பொருள்

  • அத்தி பூத்தாற் போல - அறிய செயல்
  • அடியற்ற மரம் போல - விழுதல்
  • ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை
  • எலியும் பூனையும் போல - பகைமை
  • வேம்பும் அரசும் போல, அச்சில் வார்த்தார் போல  - ஒற்றுமை
  • ஞாயிறு கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
  • நீர்மேல் எழுத்துப் போல - நிலையற்றது
  • கயிரற்ற பட்டம் போல - தவித்தல்
  • கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது - பிறரை ஏமாற்றுதல்
  • சூரியனைக் கண்ட பனி போல் - விலகல்
  • செவிடன் காதில் சங்கு ஊதியது போல, மன்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல - பயனில்லை
  • சேற்றில் முளைத்த செந்தாமரை போல - மேன்மை 
  • திருடனைத் தேள் கொட்டியது போல - சொல்ல முடியாத வேதனை
  • தெரு நாய் போல - அலைச்சல்
  • தோன்றி மறையும் வானவில் போல - நிலையாமை
  • பசுந்தோல் போர்த்திய புலி, வேலியே பயிரை மேய்ந்தது போல - நயவஞ்சகம்
  • பசுவை பிரிந்த கன்று போல - பிரிவு
  • பள்ளத்தில் பாயும் வெள்ளம் போல - இயல்பு
  • புயலின் சீக்கிய கலம் போல -  தவிப்பு 
  • பகலவனைக் கண்ட பனிப்போல - விலகுதல் 
  • புற்றீசல் போல - பெருக்கம் அடைவது
  • பூவோடு சேர்ந்த நாரும் - மணக்கும் 
  • மழை காணாப் பயிர் போல - வாடுதல்
  • மதம் கொண்ட யானை போல - வீரம்
  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல - இயலாமை
  • வலையில் அகப்பட்ட மான் போல - துன்பம்
  • வாழைப் பழத்தில் ஊசி ஏறுவது போல - மென்மை
  • விளக்கு கண்ட விட்டில் பூச்சி போல - ஆபத்தை உணராமல்
  • விழலுக்கு இறைத்த நீர் போல - வீணாதல்
  • வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல - வருத்தம் 

சொலவடைகள்

சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை. 


பழமொழிகள்

நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகளைப் படித்தால், தமிழின் மிகப் பெரியதொரு சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம்.

TNPSC previous year questions and answers 

1. "இருதலைக் கொல்லி எறும்பு போல" - என்னும் உவமையால் விளக்கப் பெறும் பொருள்.

தவிப்பது

உதவி

பகை

இரண்டு 

2 'பாம்பும் கீரியும் போல' என்னும் உவமையால் விளக்கப் பெறும் பொருள்.

உதவி

பகை

தீங்கு

 தீது

3. "முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல" -  என்னும் உவமையால் விளக்கப் பெறும் பொருள்.

ஏமாற்றம்

முயற்சி

தோல்வி

இயலாமை

4. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' உவமையால் விளங்கப் பெறும் பொருளைத் தேர்க.

மறைத்தல் 

குழப்பம்

மறைபொருள்

வெளிப்படை

5. 'இலவுகாத்த கிளி போல' என்னும் உவமை மூலம் விளக்கும் பொருள் 

A) ஏமாற்றமின்மை

B) ஏமாற்றம்

C) முயற்சி

D) தோல்வி

6. 'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?

A) கோபம்

B) பொறுமை

C) மென்மை

D) வன்மை

7. " மலரும் மணமும் போல" இவ்வுவமை விளக்கும் பொருளைக் கண்டறிக.

A) பிரிந்திருத்தல்

B) சேராதிருத்தல்

C) இணைந்திருத்தல்

D) அறியாதிருத்தல்

8. 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' இவ்வுவமை விளக்கும் பொருள் என்ன?

A) கோபம்

B) தவிப்பு

C) ஆட்டம்

D) பாசம்

9. 'மின்னாமல் இடி இடித்தது போல' - இவ்வுவமை விளக்கும் பொருள் என்ன?

A) எதிர்பார்த்த செய்தி

B) எதிர்பாராத செய்தி

மகிழ்ச்சியான செய்தி

D) துக்கமான செய்தி

10. மடைதிறந்த வெள்ளம் போல - இவ்வுலமை விளக்கும் பொருள் யாது?

B) விரைவு

A) ஆரவாரம்

C) இரைச்சல்

D) நிதானம்

11. பிறைநுதல் - இவ்வுவமையால் விளங்கும் பொருள் யாது?

A) கண்

B) கூந்தல்

C) நெற்றி

D) புருவம்

12. 'உடுக்கை இழந்தவன் கைபோல' பொருத்தமான பொருளைத் தேர்க.

A) வெறுத்தல்

B) உதவுதல்

C) சிரித்தல்

D) வருந்துதல்

13. 'நகமும் சதையும் போல' - உவமைக்கேற்ற பொருளைத் தேர்க.

A) மகிழ்ச்சி

B) பெருநட்பு

C) பேரச்சம்

D) பெரும்பகை

14. நாய் பெற்ற தெங்கம் பழம் - இவ்வுவமையால் விளங்கப்பெறும் பொருள் யாது?

A) தான் மட்டும் அனுபவிக்கத் தெரியாதவன்

B) தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் வாழ்பவன் 

C) பிறருக்குக் கொடுப்பவன்

D) தானும் அனுபவித்து பிறருக்கும் கொடுப்பவன்

15. குன்றின் மேலிட்ட விளக்கென - பொருத்தமான பொருளைத் தேர்க

A) உயரமாகத் தெரிகிறது

B) பாதுகாப்பாக இருக்கிறது

C) வெளிச்சமாகத் தெரிகிறது

D) தெளிவாகத் தெரிகிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad