TNPSC Group 2, 2A, 4 (VAO), TET பொதுத்தமிழ் (General Tamil) பாடத்திட்டத்தில் இலக்கணப் பகுதி என்பது மிக முக்கியமான, அதே சமயம் முழு மதிப்பெண்களை எளிதாகப் பெறக்கூடிய ஒரு பகுதியாகும். குரூப் 2, 2A, மற்றும் குரூப் 4 (VAO) தேர்வுகளில் அலகு III: எழுதும் திறன் - (i) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் இலக்கணப் பகுதியில் இருந்து நேரடி வினாக்கள் அதிகளவில் கேட்கப்படுகின்றன.
இக்கட்டுரையில், 7-ஆம் வகுப்பு தமிழ் புதிய பாடப்புத்தகத்தின் (New School Book) கீழ் வரும் மிக முக்கியமான இலக்கணத் தலைப்பான எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் மற்றும் தொடர் வகைகள் பற்றி எளிமையான விளக்கங்கள் மற்றும் தேர்வு நோக்கில் அமைந்த எடுத்துக்காட்டுகளுடன் விரிவாகக் காண்போம்.
மேலும், மாணவர்கள் இப்பாடத்தின் தேர்வு முக்கியத்துவத்தை உடனடியாக உணரும் வகையில், சமீபத்திய 2024 TNPSC Group 2 தேர்வில் கேட்கப்பட்ட அசல் வினா-விடை (PYQ) விளக்கத்துடனும், தேர்வில் எதிர்பார்க்கப்படும் 100-க்கும் மேற்பட்ட முக்கியத் தமிழ் பழமொழிகள் மற்றும் மரபுத்தொடர்களின் பயிற்சிப் பட்டியலும் இதில் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் சுலபமான திருத்தத்திற்கு (Revision) உதவும் வகையில் இப்பதிவில் இலவச PDF வழிகாட்டி (Free PDF Notes) மற்றும் சுயவிவர ஆன்லைன் தேர்வு (Self-Test Quiz) செக்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பு உங்கள் இறுதிநேரத் தேர்வுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
சொற்றொடர் (Phrase) அல்லது தொடர் பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ளப் பதிவுகளை நினைவுகூர்க.
அடிப்படைத் தமிழ் இலக்கணம் சொல் இலக்கணம்
TNPSC முந்தைய ஆண்டு அசல் வினா-விடை (Previous Year Question Practice)
நடப்புத் தேர்வுகளில் (CCSE 2024) இதே தலைப்பில் இருந்து நேரடியாகக் கேட்கப்பட்ட அசல் வினா விளக்கத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பாடத்தின் தேர்வு முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்துகொள்ளலாம்:
1. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக. (TNPSC Group 2 - 2024 PYQ)
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: தமிழ் இலக்கண மரபின்படி சொற்கள் சரியான பொருளுடனும் இயல்பான வாக்கிய ஓட்டத்துடனும் அமைய வேண்டும். இத்தொடரில் 'தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு' என்பது எழுவாயாகவும், 'ஏறுதழுவுதல்' என்பது பயனிலையாகவும் முறைப்படி அமைந்து முழுமையான பொருளைத் தருகிறது.
பாடத்தலைப்புகள்(toc)
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் விளக்கங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள்
💡 மாணவர்களுக்கான முக்கிய குறிப்பு (Exam Tip):
"சொற்றொடர்" மற்றும் "தொடர்" இரண்டும் ஒன்றுதான்!
- சுருக்கப் பெயர்: 'சொல் + தொடர்' என்பதுதான் 'சொற்றொடர்' ஆகும். நாம் பேசும் போதும் எழுதும் போதும் எளிமைக்காகப் பல இடங்களில் 'சொற்றொடர்' என்பதைச் சுருக்கி 'தொடர்' (Sentence) என்று அழைக்கிறோம்.
- இலக்கண ஒற்றுமை: பாடப்பகுதியில் இவ்விரண்டு வார்த்தைகளில் எதைப் பயன்படுத்தினாலும், அது எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய பகுதிகளைக் கொண்ட ஒரு முழுமையான வாக்கியத்தையே குறிக்கும்.
- தேர்வு நோக்கில் (TNPSC / TET): பொதுத்தமிழ் தேர்வுகளில் வினாக்கள் கேட்கப்படும் போது சில இடங்களில் "பின்வரும் சொற்றொடரைப் படிக்கவும்" என்றும், சில இடங்களில் "தொடர் வகையைக் கண்டறிக" என்றும் மாற்றி மாற்றிக் கேட்பார்கள். எனவே, இரண்டுமே ஒரே பொருளை உடையது என்பதை மாணவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.
எடுத்துக்காட்டு
- நீர் பருகினான்
- வெண்சங்கு ஊதினான்
- கார்குழலி பாடம் படித்தாள்.
- வள்ளி பாடம் படித்தாள்
- வரிசை முறை கட்டாயமில்லை: ஒரு சொற்றொடரில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை ஆகிய மூன்றும் குறிப்பிட்ட இதே வரிசைக்கிரமத்தில்தான் வரவேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை; அவை இடம் மாறி மாறி வந்தாலும் பொருள் மாறாது. (எ.கா: பாடம் படித்தாள் வள்ளி).
- மறைந்து வரலாம்: ஒரு வாக்கியம் முழுமை பெற எழுவாயோ அல்லது செயப்படுபொருளோ வெளிப்படையாக அமையாமல், தொடரில் மறைந்து கூட வரலாம். (எ.கா: பாடம் படித்தாள்– இதில் எழுவாய் மறைந்துள்ளது).
- பயனிலையின் முக்கியத்துவம்: ஒரு தொடரில் எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் போனாலும், அந்தச் சொற்றொடரின் பொருள் முழுமையாக முடிவு பெற 'பயனிலை' என்பது மிக இன்றியமையாத முதன்மைப் பகுதியாகக் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
தொடரின் பகுதிகள்
ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும்.
அவை,
1. எழுவாய் (the subject)
2. பயனிலை (the predicate)
3. செயப்படுபொருள் (the object)
பயனிலை செயப்படுபொருள் மட்டும் இதில் எழுவாய் இல்லை
- பாடம் எழுதினார் - எழுவாய் இல்லை
- புல் சாப்பிட்டது - எழுவாய்
- மான் சாப்பிட்டது - செயப்படுபொருள் இல்லை
📌 TNPSC தேர்வர்கள் நினைவில் கொள்க::
எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமலும் சொற்றொடர்கள் அமையலாம் (எ.கா: பாடம் படித்தான் - இதில் எழுவாய் இல்லை). ஆனால், ஒரு தொடருக்கு பயனிலை கட்டாயம் இடம்பெற வேண்டும். தேர்வுகளில் இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொண்டால் எளிதில் முழு மதிப்பெண் பெறலாம்!
எழுவாய் விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகள் (Subject in Tamil)
ஒரு செயலைச் செய்கின்ற பொருள் எழுவாய் எனப்படும்.
- ஒரு சொற்றொடரில் யார்? எவன்? எது? எவள்? எவை? என்னும் வினாவிற்கு விடையாக தொடரில் வருபவை எழுவாய்.
- தொடரின் முதலில் வரும் பெயர்ச்சொல்.
எடுத்துக்காட்டு
- நீலன் பாடத்தைப் படித்தான்.
- பாரி யார்?
- புலி ஒரு விலங்கு.
இத்தொடர்களில் நீலன், பாரி, புலி ஆகியன எழுவாய்கள்.
பயனிலை விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகள் (Predicate in Tamil)
முதலில் வரும் ஒரு சொற்றொடரின் பொருளை முடித்து நிற்கும் சொல் பயனிலை எனப்படும்.
- தொடரின் இறுதியில் வரும் வினைச்சொல்.
எடுத்துக்காட்டு
ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.
- கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
- கரிகாலன் யார்?
- கரிகாலன் ஒரு மன்னன்.
இத்தொடர்களில் கட்டினான், யார், மன்னன் ஆகியன பயனிலைகள்.
பயனிலை எத்தனை வகைப்படும்? (Types of Predicate)
பயனிலை வகைக்கள் : 3 வகைப்படும்
- கரிகாலன் கல்லணையைக் கட்டினான்- வினை பயனிலை
- கரிகாலன் யார்? - வினா பயனிலை
- கரிகாலன் ஒரு மன்னன் - பெயர் பயனிலை
செயப்படுபொருள் விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகள் (Object in Tamil)
எழுவாயினால் செய்யப்படுகின்ற பொருளே செயப்படுபொருள் ஆகும்.
ஒரு தொடரில் எதை? அல்லது எவற்றை? என்னும் வினாவிற்கு விடையாக பொருள் அமைவது செயப்படுபொருள் ஆகும்.
- எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் வரும்.
எடுத்துக்காட்டு
யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள்.
- நான் கவிதையைப் படித்தேன்.
- என் புத்தகத்தை எடுத்தது யார்?
- நெல்லிக்கனியைத் தந்தவர் அதியமான்.
இத்தொடர்களில் கவிதை, புத்தகம், நெல்லிக்கனி ஆகியன செயப்படு பொருள்கள்.
செயப்படுபொருள் வேற்றுமை விளக்குக
எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் எடுத்துக்காட்டு
வள்ளி பாடம் படித்தாள்.
இதில்,
- வள்ளி - எழுவாய்
- படித்தாள் - பயனிலை
- பாடம் - செயப்படு பொருள்.
| இலக்கணப் பகுதி | எளிய விளக்கம் (Definition) | எப்படிக் கண்டுபிடிப்பது? (Question) | வாக்கிய சான்று (Example) | ஆங்கில நிகர் |
|---|---|---|---|---|
| எழுவாய் | ஒரு தொடரில் வினையை அல்லது செயலைச் செய்யும் முதன்மைப் பொருள் (பெயர்ச்சொல்). | யார் படித்தாள்? | வள்ளி பாடம் படித்தாள். (வள்ளி = எழுவாய்) | Subject |
| செயப்படுபொருள் | எழுவாயின் செயலால் பாதிக்கப்படும் அல்லது உருவாக்கப்படும் இலக்குப்பொருள். | எதைப் படித்தாள்? | வள்ளி பாடம் படித்தாள். (பாடம் = செயப்படுபொருள்) | Object |
| பயனிலை | ஒரு சொற்றொடரின் பொருளை முழுமையாக முடித்து நிற்கும் சொல் (வினைமுற்று). | வள்ளி என்ன செய்தாள்? | வள்ளி பாடம் படித்தாள். (படித்தாள் = பயனிலை) | Predicate |
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் - தேர்வுப் பயிற்சி (100+ பழமொழிகள் & மரபுத்தொடர்கள்)
டிஎன்பிஎஸ்சி மற்றும் பொதுத்தமிழ் தேர்வுகளில் பெரும்பாலும் தமிழ் உவமைகளும், பழமொழிகளுமே சொற்கள் கலைக்கப்பட்டு வினாவாகக் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு சொற்றொடரும் முறைப்படி எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற அமைப்புடன் இருக்க வேண்டும்.
🎯 தேர்வில் வினாக்கள் அமையும் மாதிரி (Exam Question Pattern)
தேர்வில் சொற்கள் எவ்வாறு கலைந்து வரும், அவற்றை எப்படிச் சீரமைக்க வேண்டும் என்பதற்கு கீழே உள்ள முதல் 3 சான்றுகளைப் பயிற்சி செய்து பாருங்கள்:
கேள்வி 1: படியாது மாடு அடியாத
கேள்வி 2: அளந்து போடு போட்டாலும் ஆற்றில்
கேள்வி 3: உள்ளளவும் நினை உப்பிட்டவரை
📚 தேர்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய தொடர்கள் பட்டியல் (Complete Practice List)
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் அனைத்தும் தேர்வுகளில் சொற்கள் கலைக்கப்பட்டு கேட்கப்பட அதிக வாய்ப்புள்ளவை. இவற்றின் முறையான வடிவத்தை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்:
- எரிகிற வீட்டில் பிடுங்கினது மிச்சம்.
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
- துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
- மந்திரம் கால் மதி முக்கால்.
- மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
- விதையொன்று போடச் சுரையொன்று முளைக்காது.
- நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும்.
- தன்கையே தனக்குதவி.
- கெடுவான் கேடு நினைப்பான்.
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
- சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.
- சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
- புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
- காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
- இளங்கன்று பயமறியாது.
- விளையும் பயிர் முளையிலே தெரியும்.
- குன்று முட்டிய குருவி போல.
- நீதிக்கு போராடாதவன் நடை பிணம்.
- உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
- தூய நெஞ்சினர் துன்பம் செய்யார்.
- வல்லவர் நல்லவராக இருக்க வேண்டும்.
- நுண்ணுதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
- ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்.
- உடுக்கை இழந்தவன் கை போல.
- குன்றின் மேல் எரியும் விளக்கு.
- தமிழர்கள் வாழ்வின் இலக்கணம் அறிந்தவர்கள்.
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
- நாடும் மொழியும் நமதிரு கண்கள்.
- பண்பட்ட பைந்தமிழ் பாழ்பட்டுக் கிடந்தது.
- கடை மடை திறந்தது போல.
50 பழமொழிகள் 200 உவமைத் தொடர்கள்
Quick Revision: Subject, Predicate & Object in Tamil Grammar (எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்)
For TNPSC aspirants from English mediums, here is a quick mapping and summary of sentence structures (தொடர் அமைப்பு) to help you solve questions easily:
1. What is எழுவாய் (The Subject)?
2. What is பயனிலை (The Predicate)?
3. What is செயப்படுபொருள் (The Object)?
7ம் வகுப்பு ஏழாம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th tamil ilakkanam book back answers solutions- வினா விடை மதிப்பீடு
பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.
1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீன்கொடி பறந்தது.
4. திருக்குறளை எழுதியவர் யார்?
5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.
| எழுவாய் | பயனிலை | செயப்படுபொருள் |
|---|---|---|
| வீரர்கள் | காத்தனர்(வினை) | நாடு |
| பொதுமக்கள் | எரித்தனர்(வினை) | அந்நியத்துணி |
| மீன்கொடி | பறந்தது(வினை) | - |
| எழுதியவர் | யார் | திருக்குறள் |
| கபிலர் | புலவர்(பெயர்) | குறிஞ்சிப்பாட்டு |
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.
- குமார் கவிதையைப் படித்தான்.
- புலி மானை சாப்பிட்டது.
- திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
- அவர் பாடம் எழுதினார்.
- கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
தொடர் வகைகள் சான்றுகள்- Types of sentences in Tamil grammar
தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.
- செய்தித் தொடர்
- வினாத்தொடர்
- விழைவுத் தொடர்
- உணர்ச்சித் தொடர்
தொகைநிலைத் தொடர்கள் , தொகாநிலைத் தொடர்கள்
📌 TNPSC தேர்வர்கள் நினைவில் கொள்க::
தொகைநிலைத் தொடர் 6 வகைப்படும்: வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழித்தொகை
தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும்: எழுவாய், விளி, வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், வேற்றுமை, இடைச்சொல், உரிச்சொல், அடுக்குத்தொடர்.
செய்தித் தொடர்
ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.
எடுத்துக்காட்டு
- (எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
வினாத்தொடர்
ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்.
எடுத்துக்காட்டு
- (எ.கா.) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
விழைவுத் தொடர்
ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத்தொடர் ஆகும்.
எடுத்துக்காட்டு
- இளமையில் கல் - (ஏவல்)
- உன் திருக்குறள் நூலைத் தருக - (வேண்டுதல்)
- உழவுத்தொழில் வாழ்க - (வாழ்த்துதல்)
- கல்லாமை ஒழிக - (வைதல்)
உணர்ச்சித் தொடர்
உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.
எடுத்துக்காட்டு
- அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்! - (உவகை)
- ஆ! புலி வருகிறது! - (அச்சம்)
- பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! - (அவலம்)
- ஆஹா! மலையின் உயரம்தான் என்னே! - (வியப்பு)
தொடர் வகைகள் & சான்றுகள் (Examples)
| தொடர் வகை | விளக்கம் | சான்று (Example) |
|---|---|---|
| செய்தித் தொடர் | ஒரு கருத்தைத் தெளிவாகத் தெரிவிப்பது. | கரிகாலன் கல்லணையைக் கட்டினான். |
| வினாத் தொடர் | ஒருவரிடம் வினா கேட்பது போன்ற தொடர். | சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? |
| விழைவுத் தொடர் | வாழ்த்துதல், வைதல், ஏவல், வேண்டுதல். | தமிழ் வாழ்க! (வாழ்த்துதல்) |
| உணர்ச்சித் தொடர் | உவகை, அவலம், அச்சம் போன்ற உணர்ச்சிகள். | ஆஹா! என்னே இமயமலையின் உயரம்! |
ஆன்லைன் தேர்வு (Self-Test Quiz)
கீழே உள்ள கேள்விகளுக்குப் பதிலை நீங்களே யோசித்து விட்டு, 'பதிலைக் காட்டு' என்பதை அழுத்திச் சரிபார்க்கவும்.
1. எழுவாய் எப்போதும் எந்தச் சொல்லாகவே இருக்கும்?
விடை: பெயர்ச்சொல்
2. 'யார்?' என்று வினா எழுப்பினால் வரும் பதில் எது?
விடை: எழுவாய்
3. ஒரு தொடர் முற்றுப்பெற எது மிக இன்றியமையாதது?
விடை: பயனிலை
4. 'படித்தான்' என்பது என்ன வகை பயனிலை?
விடை: வினைப் பயனிலை
5. சொற்களை ஒழுங்குபடுத்துக: பாடினாள் பாட்டு மீனா
விடை: மீனா பாட்டு பாடினாள்.
6. 'முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்' - இது என்ன வகைத்தொடர்?
விடை: செய்தித் தொடர்
7. 'கடமையைச் செய்' - இத்தொடரின் வகையைக் கண்டறிக.
விடை: விழைவுத் தொடர் (ஏவல்)
8. 'பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!' - இச்சொற்றொடர் எவ்வகையைச் சார்ந்தது?
விடை: உணர்ச்சித் தொடர்
9. 'நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?' - இத்தொடரின் வகையைக் குறிப்பிடுக.
விடை: வினாத் தொடர்
🎯 தொடர்களை மாற்றுக - பயிற்சி (Sentence Transformation)
தேர்வில் ஒரு வகை சொற்றொடரைக் கொடுத்துவிட்டு, அதனை வினா, உணர்ச்சி, செய்தி அல்லது விழைவுத் தொடராக மாற்றக் கூறுவார்கள். கீழே உள்ள சான்றுகளைப் பயிற்சி செய்து பாருங்கள்:
(எ.கா.) நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)
விடை: நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?
1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)
விடை: ஆ! காட்டின் அழகுதான் என்னே!
2. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக)
விடை: பூனையின் காலில் அடிபட்டு விட்டது.
3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
விடை: அதிகாலையில் துயில் எழு.
4. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)
விடை: முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.
5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக)
விடை: காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?
TNPSC Group 2, 2A, மற்றும் Group 4 (VAO) பொதுத்தமிழ் மாதிரி வினாவிடைகள் (எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்)
போட்டித் தேர்வுகளில் கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட மற்றும் வரவிருக்கும் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாதிரி வினாக்கள் விளக்கங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. 'பாடம் படித்தான்' - இத்தொடரில் இடம் பெறாத பகுதி எது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: 'பாடம்' என்பது செயப்படுபொருள், 'படித்தான்' என்பது வினைப் பயனிலை. இத்தொடரில் 'யார் படித்தான்' என்ற எழுவாய் வெளிப்படையாக வராமல் மறைந்து வந்துள்ளது (தோன்றா எழுவாய்).
2. 'திருக்குறளை எழுதியவர் யார்?' - இத்தொடரில் அமைந்துள்ள பயனிலை வகை என்ன?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: 'யார்' என்னும் வினாச்சொல் இத்தொடரில் பயனிலையாக வந்து முடிந்துள்ளதால் இது வினாப் பயனிலை எனப்படும்.
3. 'இளமையில் கல்' - இச்சொற்றொடர் எவ்வகைத் தொடரைச் சார்ந்தது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: கட்டளை, ஏவல், வேண்டுதல் அல்லது வாழ்த்துதல் பொருளில் வரும் தொடர்கள் விழைவுத் தொடரின் கீழ் வகைப்படுத்தப்படும்.
4. ஒரு சொற்றொடர் அமைப்பு முழுமை பெறுவதற்கு இன்றியமையாத முதன்மைப் பகுதி எது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: ஒரு தொடரில் எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் போகலாம் (மறையலாம்), ஆனால் பயனிலை இல்லாமல் வாக்கியம் முடிவு பெறாது.
5. 'கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீன்கொடி பறந்தது' - இத்தொடரின் எழுவாய் யாது?
விடையைக் காட்டு (Show Answer)
விளக்கம்: இத்தொடரில் 'எது பறந்தது?' என்ற வினாவிற்கு விடையாக அமையும் பெயர்ச்சொல்லான 'மீன்கொடி' என்பதே உண்மையான எழுவாய் ஆகும். (பாண்டியனுடைய என்பது அடைமொழி).
Internal Links
பாடக்குறிப்புகள் பதிவிறக்கம் PDF (Download Study Notes)
தேர்விற்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்திற்கு TNPSC Group 4 VAO, 2 2A, TET Tamil Study Material: இந்தப் பாடப்பகுதியின் சுருக்கத்தை PDF வடிவில் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

good
பதிலளிநீக்குHi Please, Do not Spam in Comments