பழமொழி நானூறு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. 

பாடத்தலைப்புகள்(toc)

பழமொழி நானூறு நூல் குறிப்பு

நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது. 

இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது. 

கீழ்காணும் இப்பாடலில் வரும் பழமொழி, 'ஆற்றுணா வேண்டுவது இல் என்பது. இதற்குக் 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' என்பது பொருள்.

பழமொழி நானூறு பாடல்கள் விளக்கம் 

பழமொழி நானூறு கூறும் கல்வியின் சிறப்பு

ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்

 நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு

 வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்

 ஆற்றுணா வேண்டுவது இல்.


- முன்றுறை அரையனார் (code-box)


பாடல்பொருள்

கற்க வேண்டிய நூல்களை நிறைவாகக் கற்றவர் அறிவுடையவர் ஆவார். அவருடைய புகழ் நான்கு திசைகளிலும் பரவும். அவருடைய புகழ் பரவாத நாடு இல்லை. அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை; தம்முடைய நாடுகளே. எனவே, அந்நாடுகளுக்குச் செல்லும்போது வழிநடை உணவை, அவர் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை.

எந்நாட்டிற்குச் சென்றாலும், அந்நாட்டில் கற்றோரை வரவேற்று உணவு அளிப்பர் என்பது பாடல் உணர்த்தும் கருத்து.

சொல்பொருள்

ஆற்றவும் - நிறைவாக; 

நாற்றிசை - நான்கு + திசை;

தமவேயாம் - தம்முடைய நாடுகளே; 

ஆற்றுணா -ஆறு + உணா; 

ஆறு - வழி; 

உணா - உணவு. 

வழிநடை உணவு. இதனைக் 'கட்டுச்சோறு' என இக்காலத்தில் கூறுவர். 


பழமொழி நானூறு ஆசிரியர் குறிப்பு


இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார். 

  • முன்றுறை என்பது ஊர்ப்பெயர்.
  • அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். 

இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.

நினைவு கூர்க 

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம் கீழ் 2. அறநூல்கள் பழமொழி நானூறு  பகுதிக்காகப்  பழைய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad