ராஜமார்த்தாண்டன் - அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

ManiMegala 0

நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள். அவை மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. மரங்களைப் பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன. கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம். அவற்றைப் பற்றிய நினைவுகள் மறையா என்பதை விளக்கும் ராஜமார்த்தாண்டன் அவர்களின் கவிதை ஒன்றை அறிவோம்.

📜பாடத்தலைப்புகள் (click here) (toc)

ராஜமார்த்தாண்டன் ஆசிரியர் குறிப்பு 

ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர். 

சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.

நடத்திய இதழ் 

கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர். 

விருதுகள்

ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர். 

ராஜமார்த்தாண்டன் - அப்படியே நிற்கட்டும் அந்த மரம்


அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

ஊரின் வடகோடியில் அந்த மரம் 

ஐந்து வயதில் பார்த்தபோதும்

இப்படியேதானிருந்தது 

ஐம்பதைத் தாண்டி இன்றும் அப்படியேதான்


தாத்தாவின் தாத்தா காலத்தில் 

நட்டு வளர்த்த மரமாம் 

அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்


பச்சைக்காய்கள் நிறம் மாறிச் 

செங்காய்த் தோற்றம் கொண்டதுமே 

சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும்


பளபளக்கும் பச்சை இலைகளூடே 

கருநீலக் கோலிக்குண்டுகளாய் 

நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும்

பார்க்கும்போதே நாவில் நீரூறும்


காக்கை குருவி மைனா கிளிகள் 

இன்னும் பெயரறியாப் பறவைகளுடன்

 அணில்களும் காற்றும் உதிர்த்திடும் 

சுட்ட பழங்கள் பொறுக்க 

சிறுவர் கூட்டம் அலைமோதும்


வயதுவந்த அக்காக்களுக்காய் 

கையில் பெட்டியுடன் ஓடிஓடிப் 

பழம் பொறுக்கும் தங்கச்சிகள்


இரவில் மெல்லிய நிலவொளியில் 

படையெடுத்து வரும் 

பழந்தின்னி வௌவால் கூட்டம்


தோப்பு முழுக்கப் பரவிக்கிடக்கும் 

மரத்தின் குளிர்ந்த நிழலிலே 

கிளியாந்தட்டின் சுவாரசியம் 

புளியமிளாறுடன் அப்பா வரும்வரை


நேற்று மதியம் நண்பர்களுடன் 

என் மகன் விளையாடியதும் 

அந்த மரத்தின் நிழலில்தானே


பெருவாழ்வு வாழ்ந்த மரம் 

நேற்றிரவுப் பேய்க்காற்றில் 

வேரோடு சாய்ந்துவிட்டதாமே 

விடிந்தும் விடியாததுமாய் 

துஷ்டி கேட்கும் பதற்றத்தில் 

விரைந்து செல்கிறார் ஊர்மக்கள் 

குஞ்சு குளுவான்களோடு


எனக்குப் போக மனமில்லை 

என்றும் என்மன வெளியில் 

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் 

குன்றுகளின் நடுவே மாமலைபோல


- ராஜமார்த்தாண்டன்(code-box)

ராஜமார்த்தாண்டன் - அப்படியே நிற்கட்டும் அந்த மரம்


சொல்லும் பொருளும்

பரவசம் - மகிழ்ச்சிப் பெருக்கு

துஷ்டி கேட்டல் - துக்கம் விசாரித்தல்

நூல் வெளி

இவரது அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலில் உள்ள கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

கலாப்ரியா எழுதிய புதுக்கவிதைகளைப் படித்துச் சுவைக்க.

கொப்புகள் விலக்கி
கொத்துக் கொத்தாய் 
கருவேலங்காய் 
பறித்துப் போடும் மேய்ப்பனை 
ஒருநாளும் 
சிராய்ப்பதில்லை 
கருவமுட்கள்.

குழந்தை 
வரைந்தது 
பறவைகளை மட்டுமே 
வானம் 
தானாக உருவானது.

-கலாப்ரியா(alert-success)

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது

அ) பச்சை இலை

ஆ) கோலிக்குண்டு

இ) பச்சைக்காய்

ஈ) செங்காய்

2. 'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை

அ) மண் ஒட்டிய பழங்கள்

ஆ) சூடான பழங்கள்

ஈ) சுடப்பட்ட பழங்கள்

இ) வேகவைத்த பழங்கள்

3. 'பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பெயர + றியா

ஆ) பெயர் + ரறியா

இ) பெயர் + அறியா

ஈ) பெயர + அறியா

4. 'மனமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மன + மில்லை

இ) மனம் + மில்லை

ஆ) மனமி + இல்லை 

ஈ) மனம் + இல்லை

5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் 

அ) நேற்று இரவு

ஆ) நேற்றிரவு

இ) நேற்றுரவு

ஈ) நேற்இரவு

குறுவினா

1. நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?

நாவல் மரம், தாத்தாவின் தாத்தா காலத்தில் இருந்து ஐந்து தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது.

2. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர்

காக்கை, குருவி, மைனா, கிளிகள், பெயரறியாப் பறவைகள், அணில்கள், காற்று.

சிறுவினா

நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன 
  • ஊரின் வடகோடியில் அந்த மரம் ஐந்து வயதில் பார்த்தபோதும் இப்படியேதானிருந்தது ஐம்பதைத் தாண்டி இன்றும் அப்படியேதான் இருக்கிறது.
  • தாத்தாவின் தாத்தா காலத்தில் நட்டு வளர்த்த மரமாம் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
  • பச்சைக்காய்கள் நிறம் மாறிச் செங்காய்த் தோற்றம் கொண்டதுமே சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும்.
  • பளபளக்கும் பச்சை இலைகளூடே கருநீலக் கோலிக்குண்டுகளாய் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும் பார்க்கும்போதே நாவில் நீரூறும்.
  • காக்கை, குருவி, மைனா, கிளிகள் இன்னும் பெயரறியாப் பறவைகளுடன் அணில்களும், காற்றும் உதிர்த்திடும் சுட்ட பழங்கள் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
  • வயதுவந்த அக்காக்களுக்காய் கையில் பெட்டியுடன் ஓடிஓடிப் பழம் பொறுக்கும் தங்கச்சிகள்.
  • இரவில் மெல்லிய நிலவொளியில் படையெடுத்து வரும் பழந்தின்னி வௌவால் கூட்டம்.
  • தோப்பு முழுக்கப் பரவிக்கிடக்கும் மரத்தின் குளிர்ந்த நிழலிலே கிளியாந்தட்டின் சுவாரசியம். 
  • புளியமிளாறுடன் அப்பா வரும்வரை நேற்று மதியம் நண்பர்களுடன் என் மகன் விளையாடியதும் அந்த மரத்தின் நிழலில்தானே
இவ்வாறு நினைவு கூறுகிறார் கவிஞர்.

சிந்தனை வினா

பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?

பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் பெருவாழ்வு வாழ்ந்த மரம். அவரின் தாத்தாவின் தாத்தா காலத்தில் நட்டு வளர்த்த மரமாம்.
  • தோப்பு முழுக்கப் பரவிக்கிடக்கும் மரத்தின் குளிர்ந்த நிழலிலே கிளியாந்தட்டின் சுவாரசியம். 
  • புளியமிளாறுடன் அப்பா வரும்வரை நேற்று மதியம் நண்பர்களுடன் என் மகன் விளையாடியதும் அந்த மரத்தின் நிழலில்தானே
  • நேற்றிரவுப் பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்டதாமே விடிந்தும் விடியாததுமாய் துஷ்டி கேட்கும் பதற்றத்தில் விரைந்து செல்கிறார் ஊர்மக்கள்.
  • பளபளக்கும் பச்சை இலைகளூடே கருநீலக் கோலிக்குண்டுகளாய் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும் பார்க்கும்போதே நாவில் நீரூறும்.
  • காக்கை, குருவி, மைனா, கிளிகள் இன்னும் பெயரறியாப் பறவைகளுடன் அணில்களும், காற்றும் உதிர்த்திடும் சுட்ட பழங்கள் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
  • வயதுவந்த அக்காக்களுக்காய் கையில் பெட்டியுடன் ஓடிஓடிப் பழம் பொறுக்கும் தங்கச்சிகள்.
  • இரவில் மெல்லிய நிலவொளியில் படையெடுத்து வரும் பழந்தின்னி வௌவால் கூட்டம்.
இவற்றை எல்லாம் நினைத்து அவருக்குப் போக மனமில்லை என்றும் அவர்மன வெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் குன்றுகளின் நடுவே மாமலைபோல என்று பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் பார்க்க விரும்பவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad