பொருளைத் தேர்வு செய்தல்

TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 பகுதி 'அ' இலக்கணம் கீழ் பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் என்ற பகுதி வருகிறது.

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் பகுதியில் பெரும்பாலும் பொருத்துக வடிவிலும், சில வினாக்கள் நேரடி வினாவாகவும் அமையும்.

பாடத்தலைப்புகள்(toc)

சொல்லும் பொருளும் - 10 வகுப்பு தமிழ் சமச்சீர்க் கல்வி 

  • துய்ப்பது - கற்பது, தருதல் 
  • மேவலால் - பொருந்துதல், பெறுதல்
  • அருகுற - அருகில்
  • முகமன் - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
  • மயலுறுத்து - மயங்கச்செய்
  • ப்ராண ரஸம் - உயிர்வளி
  • லயத்துடன் - சீராக
  • நனந்தலை உலகம் - அகன்ற உலகம்
  • நேமி - சக்கரம்
  • கோடு - மலை
  • கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்
  • நறுவீ - நறுமணம் கொண்ட அரும்புகள்
  • தூஉய் - தூவி
  • விரிச்சி - நற்சொல்
  • சுவல் - தோள்
  • கப்பித்தான் - தலைமை மாலுமி (கேப்டன்)
  • பறவை மீன், அவுலியா மீன் - மீன் வகை 
  • பிலவான் - இந்தோனேசியாவிலுள்ள இடம்
  • தொங்கான் - கப்பல்
  •  அசைஇ - இளைப்பாறி
  • அல்கி - தங்கி
  • கடும்பு - சுற்றம்
  • நரலும் - ஒலிக்கும்
  • ஆரி - அருமை
  • படுகர் - பள்ளம்
  • வயிரியம் - கூத்தர்
  • வேவை - வெந்தது
  • இறடி - தினை
  • பொம்மல் - சோறு
  • கடிச்சு குடித்தல் - வாய்வைத்துக்குடித்தல்
  • சடைத்து புளித்து - சலிப்பு
  • அலுக்கம் - அழுத்தம் (அணுக்கம்)
  • பதனம் - கவனமாக
  • மகுளி - சோற்றுக் கஞ்சி
  • பாச்சல் - பாத்தி
  • நீத்துப்பாகம் - மேல்கஞ்சி
  • வரத்துக்காரன் - புதியவன்
  • தொலவட்டையில் - தொலைவில்
  • விசும்பு - வானம்
  • ஊழி - யுகம்
  • ஊழ் - முறை
  • தண்பெயல் - குளிர்ந்த மழை
  • ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
  • பீடு - சிறப்பு
  • ஈண்டி - செறிந்து திரண்டு
  • கேள்வியினான் - நூல் வல்லான்
  • கேண்மையினான் - நட்பினன்
  • தார்- மாலை 
  • முடி- தலை 
  • முடிவு  - சினம்

சொற்பொருள்

  • புயல் - மேகம்; 
  • பணை – மூங்கில்; 
  • பகரா - கொடுத்து; 
  • பொருது - மோதி
  • நிதி - செல்வம்; 
  • புனல் - நீர்; 
  • கவிகை - குடை; 
  • வானகம் - தேவருலகம்.
  • கிளை - சுற்றம்; 
  • நோன்றல் - பொறுத்தல்.

6ம் வகுப்பு தமிழ் சொல்பொருள் 

  • ஆர்வலர் - அன்புடையவர்; 
  • புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்;
  • பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்
  • என்பு - எலும்பு - இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது
  • வழக்கு - வாழ்க்கைநெறி; 
  • ஆருயிர் - அருமையான உயிர்; 
  • என்பு - எலும்பு
  • ஈனும் - தரும்; 
  • ஆர்வம் - விருப்பம்; வெறுப்பை நீக்கி விருப்பத்தை உண்டாக்கும் பொருள். 
  • நண்பு - நட்பு 
  • வையகம் - உலகம்;
  •  என்ப - என்பார்கள்
  • மறம் - வீரம்; கருணை, வீரம் இரண்டிற்குமே அன்புதான் அடிப்படை என்பது பொருள்
  • என்பிலது - எலும்பு இல்லாதது (புழு) 
  • அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
  • அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத; 
  • வன்பாற்கண் - வன்பால் + கண் - பாலை நிலத்தில். ஃிராங்கண்ஸ்டைன்
  • தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல; 
  • வற்றல்மரம் - வாடிய மரம்
  • புறத்துறுப்பு -உடல் உறுப்புகள்; 
  • எவன் செய்யும் - என்ன பயன் ?; 
  • அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு
  • நாய்க்கால் - நாயின் கால்; 
  • ஈக்கால் - ஈயின் கால்; 
  • அணியர் - நெருங்கி இருப்பவர்; 
  • என்னாம் - என்ன பயன் ?; 
  • சேய்(மை) - தொலைவு;
  • செய் - வயல்; 
  • அனையார் - போன்றோர்.
  • தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்;
  •  வண்மை - கொடை; 
  • உழுபடை வேளாண்மை செய்யப் பயன்படும் கருவிகள்; 
  • கோணி - சாக்கு; 
  • நடை - சாலையில் செல்லும் வண்டிகள்; 
  • பறப்பு - பறக்கும் வானூர்தி முதலியன; 
  • ஞாலம் - உலகம்: 
  • உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்; 
  • தமிழ்மகள் - ஒளவையார்
  • மேலவர் - மேலோர்; 
  • கீழவர் - கீழோர்;
  • மற்றோர் - பிறர்க்கு உதவும் நேர்மை அற்றோர்; 
  • நெறியினின்று - அறநெறியில் நின்று.
  • மடவார் - பெண்கள்
  • தகைசால் - பண்பில் சிறந்த
  • மனக்கினிய - மனத்துக்கு இனிய
  • காதல் புதல்வர் - அன்பு மக்கள்
  • ஓதின் - எதுவென்று சொல்லும்போது
  • புகழ்சால் - புகழைத் தரும்
  • உணர்வு - நல்லெண்ணம்
  • வெய்யவினை - துன்பம் தரும் செயல்
  • வேம்பு - கசப்பான சொற்கள்
  • விறாப்பு - இறுமாப்பு
  • பலரில் - பலர் + இல், பலருடைய வீடுகள்
  • புகலல் ஒண்ணாதே - செல்லாதே
  • சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
  • கடம் - உடம்பு
  • ஒன்றோ - தொடரும் சொல். 
  • நாடாகு ஒன்றோ - நாடாக இருந்தால் என்ன அல்லது... எனத் தொடரும். 
  • அவல் - பள்ளம்; 
  • மிசை - மேடு; 
  • ஆடவர் - ஆண்கள்; இங்கு மனிதர்களைப் பொதுவாசகக் குறித்தது. 
  • நல்லை - நல்லதாக இருக்கிறாய்.
  • ஈரம் - அன்பு;
  • அளைஇ - கலந்து; 
  • படிறு - வஞ்சம்; 
  • செம்பொருள் - மெய்ப்பொருள்.
  • அகன் - அகம், உள்ளம்; 
  • அமர்- விருப்பம்; 
  • அமர்ந்து - விரும்பி
  • முகன் - முகம்; 
  • இன்சொல் - இனியசொல்
  • இன்சொலன்- இனிய சொற்களைப் பேசுபவன்.
  • அமர்ந்து - விரும்பி; 
  • அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து;
  • இன்சொலினிதே - இனிய சொற்களைப் பேசுதலே.
  • துன்புறூஉம் - துன்பம் தரும்; 
  • துவ்வாமை - வறுமை; 
  • யார் மாட்டும் - எல்லாரிடமும்;
  • இன்புறூஉம் - இன்பம் தரும்.
  • ஒருவற்கு - ஒருவனுக்கு; 
  • அணி - அழகுக்காக அணியும் நகைகள்.
  • அல்லவை - பாவம்;
  • நாடி - விரும்பி.
  • நயன்ஈன்று - நல்ல பயன்களைத் தந்து; 
  • நன்றி - நன்மை; 
  • பயக்கும் - கொடுக்கும்; 
  • தலைப்பிரியாச் சொல் - நீங்காத சொற்கள்.
  • சிறுமை - துன்பம்; 
  • மறுமை - மறுபிறவி; 
  • இம்மை - இப்பிறவி.
  • இனிதீன்றல் - இனிது + ஈன்றல்; 
  • ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்
  • வன்சொல் - கடுஞ்சொல்
  • எவன்கொலோ - ஏனோ?
  • கவர்தல் - நுகர்தல்; 
  • அற்று - அதுபோன்றது. 
  • இரட்சித்தானா? - காப்பாற்றினானா?
  • அல்லைத்தான்  - அதுவும் அல்லாமல்
  • ஆரைத்தான் - யாரைத்தான்
  • பதுமத்தான் -  தாமரையில் உள்ள பிரமன்
  • புவி -  உலகம்
  • குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்புநோய்
  • இணக்கவரும்படி - அவர்கள் மனம் கனியும்படி,
  • குணக்கடலே! அருட்கடலே! - முருகனை இவ்வாறு அழைக்கிறார்
  • குரைகடல் - ஒலிக்கும் கடல்; அசுரர்கள் கடல் வடிவில் வந்தார்கள் என்பது கதை
  • பரங்குன்றுளான் - திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன்
  • வானரங்கள் - இச்சொல், பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும். இங்கு ஆண் குரங்குகளைக் குறித்தது; 
  • மந்தி - பெண் குரங்கு;
  • வான்கவிகள் - தேவர்கள்; 
  • கமனசித்தர் - வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்; 
  • காயசித்தி - மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை; 
  • பரிக்கால் - குதிரைக்கால்; 
  • கூனல் - வளைந்த; 
  • வேணி - சடை.
  • மின்னார் - பெண்கள்; 
  • மருங்கு - இடை; 
  • சூல்உளை - கருவைத் தாங்கும் துன்பம்
  • கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம்; 
  • பீற்றல் குடை - பிய்ந்த குடை. 
  • நிருமித்த - உருவாக்கிய
  • சமூகம் - மக்கள் குழு
  • விளைவு - வளர்ச்சி 
  • அசதி - சோர்வு
  • ஆழிப் பெருக்கு - கடல் கோள்
  • ஊழி- நீண்டதொருகாலப்பகுதி 
  • உள்ளப்பூட்டு- உள்ளத்தின் அறியாமை
  • மேதினி - உலகம்
  • திங்கள்- நிலவு
  • பொற்கோட்டு- பொன்மயமான சிகரத்தில்
  • கொங்கு - மகரந்தம்
  • மேரு - இமயமலை
  • அலர்- மலர்தல்
  • நாமநீர்- அச்சம் தரும் கடல்
  • அளி- கருணை
  • திகிரி - ஆணைச்சக்கரம்
  • காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
  • மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
  • சித்தம்- உள்ளம்
  • இயன்றவரை - முடிந்தவரை
  • ஒளடதம் - மருந்து 
  • ஒன்றுபட்டு- ஒருமித்து
  • மாசற - குற்றம் இல்லாமல்
  • சீர்தூக்கின்- ஒப்பிட்டு ஆராய்ந்தால்
  • தேசம் - நாடு
  • மன்னற்கு -  மன்னனுக்கு
  • தூற்றும்படி - இகழும்படி
  • மாற்றார்- மற்றவர்
  • நெறி- வழி
  • வற்றாமல் - குறையாமல்
  • மேதைகள்- அறிஞர்கள்
  • மூத்தோர் - பெரியோர்
  • நன்றியறிதல்- பிறர் செய்த உதவியை மறவாமை
  • ஒப்புரவு - எல்லோரையும் சமமாகப் பேணுதல்
  • நட்டல்- நட்புக் கொள்ளுதல்
  • நந்தவனம் - பூஞ்சோலை
  • பண்- இசை
  • பார் - உலகம்
  • இழைத்து - பதித்து
  • மல்லெடுத்த-  வலிமைபெற்ற
  • சமர்- போர்
  • மறம்- வீரம்
  • எக்களிப்பு -பெருமகிழ்ச்சி
  • கலம்- கப்பல்
  • நல்கும்- தரும்
  • கழவி- வயல்
  • ஆழி- கடல்
  • கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
  • மின்னல்வரி- மின்னல் கோடு
  • அரிச்சுவடி- அகரவரிசை எழுத்துகள்
  • மெய் - உண்மை
  • தேசம் - நாடு
  • தண்டருள் - குளிர்ந்த கருணை 
  • கூர் - மிகுதி
  • செம்மையருக்கு - சான்றோருக்கு 
  • பராபரமே- மேலான பொருளே
  • ஏவல்- தொண்டு 
  • எய்தும்- கிடைக்கும்
  • பணி- தொண்டு
  • எல்லாரும்- எல்லா மக்களும்
  • அல்லாமல் - அதைத்தவிர
  • அஞ்சினர்- பயந்தனர்
  • கருணை- இரக்கம்
  • வீழும்- விழும்
  • ஆகாது- முடியாது
  • நீள்நிலம்- பரந்த உலகம்
  • முற்றும்- முழுவதும்
  • மாரி- மழை
  • கும்பி- வயிறு
  • பூதலம்- பூமி
  • பார்- உலகம்
  • ஆர்கலி -  நிறைந்த ஓசையுடைய கடல்; 
  • காதல் -  அன்பு, விருப்பம்; 
  • மேதை -  அறிவு நுட்பம்; 

  • வண்மை -  ஈகை, கொடை; 
  • பிணி - நோய்; 
  • மெய் - உடம்பு; 
  • நாணம்  - செய்யக் கூடாததனைச் செய்ய அச்சப்படுதல்; 
  • சிறந்தன்று - சிறந்தது; 
  • வழிபடுதல் - போற்றி வணங்குதல்.

7ம் வகுப்பு தமிழ் சொல்பொருள் 

  • சுழி - உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி: 
  • துன்னலர் - பகைவர், அழகிய மலர்: 
  • பரிவாய் - அன்பாய்; 
  • சாடும் - தாக்கும், இழுக்கும்; 
  • ஆடுபரி - ஆடுகின்ற குதிரை.
  • கைம்மண்ணளவு -  ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்; 
  • மெத்த - மிகுதியாக; 
  • பந்தயம் - போட்டி 
  • புலவீர் - புலவர்களே; 
  • கலைமடந்தை - கலைமகள். 
  • ஈயும் - அளிக்கும்; 
  • நில்லாமை - நிலையாமை; 
  • நெறி - வழி; 
  • தூய்மை -தூய தன்மை;
  • மாந்தர் - மக்கள்
  • உண்பொழுது - உண்ணும்பொழுது 
  • பெறினும் - பெற்றாலும்;
  • பால்பற்றி - ஒருபக்கச் சார்பு (நடுவுநிலைமையில்
  • இருந்து மாறுதல்); 
  • தோல்வற்றி - தோல்சுருங்கி;
  • சாயினும் - அழியினும்;
  • சான்றாண்மை - அறிவு ஒழுக்கங்களில் நிலைத்து நிற்றல்;
  • குன்றாமை - குறையாது இருத்தல்; 
  • தூஉயம் - தூய்மை உடையோர்
  • நிறை ஒழுக்கம் - மேலான ஒழுக்கம்; 
  • தேற்றாதான் - கடைப்பிடிக்காதவன்;
  • வனப்பு - அழகு; 
  • தூறு - புதர்; 
  • வித்து - விதை.
  • மாரி - மழை; 
  • சேமம் - நலம்;
  • தேசம் - நாடு; 
  • முட்டு - குவியல்; 
  • நெத்தி - நெற்றி


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad