ஒளவையார் வரலாறு

சங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தனர். அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் பெண் புலவர் ஔவையார். 

பாடத்தலைப்புகள்(toc)

ஒளவையார் பற்றிய குறிப்பு

சிறப்புகள்

  • ஒளவையார் சங்கப் புலவர்; 
  • அதியமானின் நண்பர். அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர். 

ஒளவையார்கள் 

சங்கப்பாடல் பாடிய ஔவையாரும், ஆத்திசூடி பாடிய ஔவையாரும் ஒருவர் அல்லர்; வேறு வேறானவர்.

ஒளவையார் நூல்கள்

இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். 

புறநானூற்றில் சில பாடல்களைப் பாடியுள்ளார்.

  • விநாயகரகவல்
  • ஞானக்குறள்
  • அசதிக்கோவை

ஒளவையார் பாடல்கள் மேற்கோள்கள் 

இன்றைய அறிவியல், அணுவைப் பிளக்கவும் சேர்க்கவும் முடியும் என ஆய்ந்திருக்கிறது.

இதையே ஒளவையார் "கடுகு" என்ற சொல்லிற்கு பதிலாக "அணு" என்ற சொல்லை மாற்றி 

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

 குறுகத் தறித்த குறள் (code-box)

என்றார்.

திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால் நாழி(code-box)

என ஒளவையார் பாடலில் கூறப்பட்டுள்ளது.

உங்களின் இயக்கத்தையும் உலக உயிர்களின் இயக்கத்தையும் தீர்மானிப்பது காற்றின் இயக்கம்தானே! 

பிற்கால ஒளவையார் தம் குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில்,

'வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்

ஆயுள் பெருக்கம்உண் டாம்' (code-box)

என்று என்னைச் சிறப்பித்துள்ளார்.

பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் (code-box)

என்பது ஒளவையாரின் அறிவுரை. 

பணத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது மடமை ஆகும். பணத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். பிறருக்கு உதவியாக வாழ வேண்டும். அதுவே பணத்தின் பயன்.

இயலாதோர்க்கு இரங்குவதும் உதவுவதும் பரிவு ஆகும்.

இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்

- ஔவையார்(code-box)


ஒளவையார் எழுதிய புறநானூறு பாடல் 

சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. ஒளவையார் எழுதிய புறநானூறு பாடல் ஒன்று இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ; 
அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ; 
எவ்வழி நல்லவர் ஆடவர் 
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

ஒளவையார்(code-box)

பொருள்

நிலமே! நீ நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? 

பள்ளமாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன? 

எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ 

அங்கு நீயும் நல்லதாக இருக்கிறாய், நிலமே, நீ வாழ்க!

சொல்பொருள்

  • ஒன்றோ - தொடரும் சொல். 
  • நாடாகு ஒன்றோ - நாடாக இருந்தால் என்ன அல்லது... எனத் தொடரும். 
  • அவல் - பள்ளம்; 
  • மிசை - மேடு; 
  • ஆடவர் - ஆண்கள்; இங்கு மனிதர்களைப் பொதுவாசகக் குறித்தது. 
  • நல்லை - நல்லதாக இருக்கிறாய்.

புறநானூறு நூல் குறிப்பு

புறநானூறு = புறம் + நான்கு + நூறு.

சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் ஆகும்.

  • சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது.
  • தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise 

ஓரிரு சொற்களில் விடை எழுதுக.

அ. ஒளவையார் பாடலில் 'அவல்` என்பதன் பொருள் என்ன?

ஒளவையார் பாடலில் 'அவல்` என்பதன் பொருள் பள்ளம் 

ஆ. "நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ" ஒளவையார் பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் என்ன?

"நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ" ஒளவையார் பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் புறநானூறு 


மூதுரை பாடல் விளக்கம்

பாடல் 1

கல்விக்கு எல்லை இல்லை. மனிதன் பிறந்தது முதல் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்கிறான். கல்வி மனிதனை உயர்த்துகிறது. கல்வியும் செல்வமாகக் கருதத் தக்கது. அது பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும். கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது. அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான். எனவே. நாமும் கற்போம்; வளம்பெறுவோம்.


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

-ஒளவையார்(code-box)

சொல்லும் பொருளும்

  • மாசற - குற்றம் இல்லாமல்
  • சீர்தூக்கின்- ஒப்பிட்டு ஆராய்ந்தால்
  • தேசம் - நாடு
  • மன்னற்கு -  மன்னனுக்கு

பாடலின் பொருள்

மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

பாடல் 2

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 

வாடி இருக்குமாம் கொக்கு

- ஒளவையார் (code-box)

 சொல்பொருள்

அடக்கம்- பணிவு

கடக்க- வெல்ல

அறிவிலர்- அறிவு இல்லாதவர்

கருதவும்- நினைக்கவும்

உறுமீன்- பெரிய மீன்

மடைத்தலை - நீர் பாயும் வழி

பாடல் பொருள்

மடையில் பாய்கின்ற நீரில் ஓடுகின்ற சிறுமீன்கள் ஓடிக் கொண்டிருக்க, கொக்கானது தனக்கு இரையாகக் கூடிய பெரிய மீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கும். அதுபோலத் தமக்குரிய காலம் வரும்வரை சிலர் அடங்கியிருப்பார்கள். அவர்களை அறிவில்லாதவர் என எண்ணி வெல்ல நினைக்க வேண்டா.

மூதுரை நூல் குறிப்பு 

மூதுரை ஆசிரியர் ஒளவையார். 

சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.

இந்நூலை இயற்றியவர் ஔவையார். இவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலிய பிற நீதிநூல்களையும் இயற்றியுள்ளார். முதுமையான அறிவுரைகளைக் கொண்டது, மூதுரை. இந்நூலில் நீதிக்கருத்துகள் எளிமையான நடையில் கூறப்பட்டுள்ளன.

இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.

மூதுரை வேறு பெயர்கள்

மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். இந்நூலுக்கு வாக்குண்டாம் என மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது.  (alert-passed)


இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம்   கீழ் 2. ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்  பகுதிக்காகப் புதிய 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு தமிழ் வினா விடை - 6th standard tamil book back exercise மூதுரை மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர்கள் நூல்களை............கற்க வேண்டும்.

அ) மேலோட்டமாக

ஆ) மாசுற

இ) மாசற 

ஈ) மயக்கமுற


2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இடம் + மெல்லாம்

ஆ) இடம் + எல்லாம்

இ) இட + எல்லாம்

ஈ) இட + மெல்லாம்


3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ) மாச + அற

ஆ) மாசு + அற

இ) மாச + உற

ஈ) மாசு + உற


4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) குற்றமில்லாதவர்

இ) குற்றமல்லாதவர்

ஆ) குற்றம்இல்லாதவர் 

ஈ) குற்றம் அல்லாதவர்


5. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) சிறப்புஉடையார் 

இ) சிறப்படையார்

ஆ) சிறப்புடையார்

ஈ) சிறப்பிடையார்


குறுவினா

1. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன

  • மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர்.
  • மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. 
  • கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

கல்விக்கு எல்லை இல்லை


கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)

உற்ற கலைமடந்தை ஒதுகிறாள் - மெத்த

வெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர்

எறும்புந்தன் கையால்எண் சாண்.

- ஔவையார்

பொருள் : 

புலவர்களே! இதுவரை நாம் படித்தது கைம்மண்ணளவே. இன்னும் படிக்க வேண்டியவை உலகளவு என நினைத்து கலைமகளே இன்றளவும் படித்துக்கொண்டே இருக்கிறாள். ஆதலால், மிகுதியாகப் படித்துவிட்டோம் என்னும் செருக்குடன் வீண் வல்லமை பேசுதல் வேண்டா. சிறு எறும்பும் அதன் கையினால் எண் சாண் உடையதே. 

சொற்பொருள் : 

  • கைம்மண்ணளவு -  ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்; 
  • மெத்த - மிகுதியாக; 
  • பந்தயம் - போட்டி 
  • புலவீர் - புலவர்களே; 
  • கலைமடந்தை - கலைமகள். 

ஆசிரியர் குறிப்பு : 

இங்குக் குறிக்கப்படும் ஒளவையார், சங்க கால ஔவையாருக்கு மிகவும் பிற்பட்டவர். 

கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.

நூல் குறிப்பு : 

புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு. 

இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.

நூல் பயன் : 

தனிப்பாடல்களைக் கற்பதனால், தமிழ்மொழியின் பெருமையையும் புலவர்களின் புலமையையும் சொல்லின்பம் பொருளின்பம் கற்பனைஇன்பம் முதலியவற்றையும் பெறலாம்.

7ம் வகுப்பு தமிழ் வினா விடை - 7th standard tamil book back exercise - கல்விக்கு எல்லை இல்லை மாதிரி வினாக்கள்

குறுவினாக்கள்

1. ஔவையார் - குறிப்பு எழுதுக.

2. கலைமகள் என்ன செய்துகொண்டிருக்கிறாள்?

இன்னும் படிக்க வேண்டியவை உலகளவு என நினைத்து கலைமகளே இன்றளவும் படித்துக்கொண்டே இருக்கிறாள். 

சிறுவினா

கற்றார் செருக்குக் கொள்ளக்கூடாது என ஔவையார் கூறுவது ஏன் ?

நினைவு கூர்க

இப்பகுதியானது TNPSC Study Notes - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி  TNPSC பொதுத்தமிழ் Part - 2 பகுதி 'ஆ' இலக்கியம்   கீழ் 2. ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்  பகுதிக்காகப் பழைய 6ம் வகுப்பு தமிழ்7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

TNPSC previous year question 

1. இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, தனிப்பாடல்களை தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தவர்?

சந்திரசேகர கவிராசப் பண்டிதர்

2. "கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)" கூறியவர் யார்?

ஒளவையார்

3. மூதுரை என்பதன் பொருள்

 மூத்தோர் கூறும் அறிவுரை

4. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 

முப்பத்தொரு பாடல்கள்

5. மிசை என்பதன் பொருள்

மேடு

6. "நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ;"  என்பது யாருடைய கூற்று

ஒளவையார்

7. அதியமானின் நண்பர்

ஒளவையார்

8. "எறும்புந்தன் கையால்எண் சாண்" எனக் கூறியவர் யார்?

ஒளவையார்

9. அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர்

ஒளவையார்

10. இந்நூலுக்கு வாக்குண்டாம் என மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது

மூதுரை

11. மாசற என்பதன் பொருள்

குற்றம் இல்லாமல்

12. "கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்றவர்

ஒளவையார்

13. "கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" எனக் கூறும் நூல்

மூதுரை

14. "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே" என்றவர்

ஒளவையார்

15. "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்" என்றவர்

ஒளவையார்

16. பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்பது யாருடைய அறிவுரை?

ஒளவையார்

17. "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே" என்ற ஒளவையார் பாடல் இடம்பெற்ற நூல்

புறநானூறு

18. ஒளவையார் நூல்களில் பொருந்தாதது

அறிவியல் ஆத்திசூடி

கொன்றை வேந்தன்

நல்வழி

மூதுரை

19. விநாயகரகவல், ஞானக்குறள், அசதிக்கோவை போன்ற நூல்களை எழுதியவர்

ஒளவையார்

20. அவல் என்பதன் பொருள்

பள்ளம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad