TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : நகர, னகர, ணகர வேறுபாடு என்ற பகுதி வருகிறது.
நகர, னகர, ணகர வேறுபாடு பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ், 9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
TNPSC previous year question
1. தவறான இணையை கூறுக
i) பணி - வேலை
ii) பனி - குளிர்ச்சி
iii) அந்நாள் - அந்த நாள்
iv) அன்னாள்- அப்பெண்
A) i மட்டும்
B) i & ii
C) iv & iii
D) அனைத்தும் சரி
E) விடை தெரியவில்லை
தமிழ் மயங்கொலி எழுத்துகள் என்றால் என்ன?
பணி ; பனி
மேலே உள்ள இரண்டு சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு.
இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
- உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.
- ஆனால் இடையே பொருள் வேறுபாடு உண்டு.
மயங்கொலி எழுத்துகள் எத்தனை?
(ண, ன, ந),(ல, ழ, ள),(ர, ற) ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
எல்லா இடங்களிலும் பேச்சுத் தமிழை எழுத முடியாது. பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் எனலாம். குறில், நெடில் வேறுபாடு அறியாதிருப்பதும் எழுத்துகள் வரும்முறையில் தெளிவற்றிருப்பதும் பிழைகள் மலியக் காரணமாய் அமைகின்றன.
எழுத்துகளின் ஒலிப்புமுறை, அவற்றுக்கான வரிவடிவ வேறுபாடு, அவை சொல்லில் வரும் இடங்களையும் (முதல், இடை, கடை) தெள்ளத் தெளிவாய் மனத்து பதித்துக்கொள்வதைக் கடமையாகக்கொள்ள வேண்டும்.
ந, ண, ன, ற, ர, ல, ள, ழ இவற்றின் வேறுபாடு அறிந்து வாய்விட்டு ஒலித்துப் பழகுவது சாலச் சிறந்தது. இவ்வெழுத்துகளுக்கான சில அடிப்படை இலக்கணத்தையும் கசடறக் கற்றல் இன்றியமையாத கற்றல் பணியாகும்.
மேலுள்ள,
- எட்டு எழுத்துகளில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும்.
- றகர மெய் சொல்லின் இறுதியில் வராது.
- மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்.
எடுத்துக்காட்டு
- முதல் - நண்டு, நாடகம்
- இடை- பந்து, கண்டு, கன்று, கற்று, பார்த்து, கால்கள், கொள்வது, புகழ்வது
- கடை - கண், அவன், பார், கால், கொள், புகழ்
நகர, னகர, ணகர வேறுபாடு
ணகரம்
ண - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.
னகரம்
ன - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.
நகரம்
ந -நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.
(ட்,ண்) (த்,ந்) (ற்,ன்) ஆகியவை இன எழுத்துகள்.
சொற்களில் ண, ன இடம்பெறும் வகை
ட என்னும் எழுத்துக்கு முன் ண் வரும்
- (எ.கா.) கண்டம், வண்டி, நண்டு
ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும்
- (எ.கா.) மன்றம், நன்றி, கன்று
இந்த இன எழுத்துகளைக் கொண்டு,
- டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,
- தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும்,
- றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம்
என்றும் அழைக்கப்படுகின்றன.
ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் என்பதை உணர்க.
எடுத்துக்காட்டு
வாணம் - வெடி ; வானம் - ஆகாயம்
பணி - வேலை ; பனி - குளிர்ச்சி
நகர, னகர, ணகர வேறுபாடு சொற்கள்
ண | ன | ந |
---|---|---|
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது. | நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது. | நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது. |
வாணம் - வெடி | வானம் - ஆகாயம் | |
பணி - வேலை | பனி - குளிர்ச்சி | |
அண்ணம் - மேல்வாய் | அன்னம் - பறவை | |
ஆணை -கட்டளை | ஆனை - யானை | |
ஊண் - சோறு | ஊன் - மாமிசம் | |
கணி - எண்ணுவாயாக | கனி - பழம் | |
கண்ணி - அரும்பு, பூமாலை | கன்னி - குமரி | |
தண்மை - குளிர்ச்சி | தன்மை - இயல்பு | |
திண்மை- வலிமை | தின்மை - தீமை | |
மணம் - வாசனை | மனம் - உள்ளம் | |
வண்மை - கொடை, ஈகை | வன்மை - உறுதி | |
அன்னாள்- அப்பெண் | அந்நாள் - அந்த நாள் | |
முன்னாள் - முந்திய நாள் | முந்தாநாள் - மூன்று நாள் | |
என்னாள் - என்னுடைய நாள் | எந்நாள் - எந்த நாள் | |
முன்நூல் - முதல் நூல் | முந்நூல் - மூன்று நூல் | |
தேனீர் - தேன் கலந்த நீர் | தேநீர் - குடிக்கும் நீர் |
தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.
1) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
Please share your valuable comments