TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 அலகு I : இலக்கணம் - எழுத்து : ரகர, றகர வேறுபாடு என்ற பகுதி வருகிறது.
ரகர, றகர வேறுபாடு பகுதியில் பெரும்பாலும் வினாக்கள் நேரடி வினாவாக அமையும். மாதிரி வினா ஒன்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
இப்பகுதியானது 6ம் வகுப்பு தமிழ், 7ம் வகுப்பு தமிழ், 8ம் வகுப்பு தமிழ், 9ம் வகுப்பு தமிழ், 10ம் வகுப்பு தமிழ் சமச்சீர் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
TNPSC previous year question
1. தவறான இணையை கூறுக
i) ஏரி - குளம்
ii) ஏறி - மேலே ஏரி
iii) கூரை - வீட்டின் கூரை
iv) கூறை- புடவை
A) i மட்டும்
B) i & ii
C) iv & iii
D) அனைத்தும் சரி
E) விடை தெரியவில்லை
தமிழ் மயங்கொலி எழுத்துகள் என்றால் என்ன?
ஏரி ; ஏறி
மேலே உள்ள இரண்டு சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு.
இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
- உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.
- ஆனால் இடையே பொருள் வேறுபாடு உண்டு.
மயங்கொலி எழுத்துகள் எத்தனை?
(ண, ன, ந),(ல, ழ, ள),(ர, ற) ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
எல்லா இடங்களிலும் பேச்சுத் தமிழை எழுத முடியாது. பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் எனலாம். குறில், நெடில் வேறுபாடு அறியாதிருப்பதும் எழுத்துகள் வரும்முறையில் தெளிவற்றிருப்பதும் பிழைகள் மலியக் காரணமாய் அமைகின்றன.
எழுத்துகளின் ஒலிப்புமுறை, அவற்றுக்கான வரிவடிவ வேறுபாடு, அவை சொல்லில் வரும் இடங்களையும் (முதல், இடை, கடை) தெள்ளத் தெளிவாய் மனத்து பதித்துக்கொள்வதைக் கடமையாகக்கொள்ள வேண்டும்.
ந, ண, ன, ற, ர, ல, ள, ழ இவற்றின் வேறுபாடு அறிந்து வாய்விட்டு ஒலித்துப் பழகுவது சாலச் சிறந்தது. இவ்வெழுத்துகளுக்கான சில அடிப்படை இலக்கணத்தையும் கசடறக் கற்றல் இன்றியமையாத கற்றல் பணியாகும்.
மேலுள்ள,
- எட்டு எழுத்துகளில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும்.
- றகர மெய் சொல்லின் இறுதியில் வராது.
- மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்.
எடுத்துக்காட்டு
- முதல் - நண்டு, நாடகம்
- இடை- பந்து, கண்டு, கன்று, கற்று, பார்த்து, கால்கள், கொள்வது, புகழ்வது
- கடை - கண், அவன், பார், கால், கொள், புகழ்
ரகர, றகர வேறுபாடு
ரகரம்
ர - நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.
றகரம்
ற- நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.
ர, ற - வேறுபாடு சொற்கள்
ர | ற |
---|---|
நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டுவருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம். | நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இஃது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம். |
ஏரி - குளம் | ஏறி - மேலே ஏறி |
கூரை - வீட்டின் கூரை | கூறை - புடவை |
அரம் - கருவி | அறம் - தர்மம் |
அரி - நறுக்கு | அறி - தெரிந்து கொள் |
அரை- பாதி | அறை - வீட்டின் பகுதி |
ஆர- நிரம்ப | ஆற - சூடு தணிய |
இரத்தல் - யாசித்தல் | இறத்தல்-சாதல் |
இரை- உணவு | இறை - இறைவன் |
உரல்- இடிக்கும் உரல் | உறல்- பொருந்துதல் |
உரை - பேச்சு | உறை- மூடி |
எரி - தீ | எறி - வீசு |
கரி - அடுப்புக் கரி, யானை | கறி - காய்கறி |
கரை- ஏரிக்கரை | கறை - அழுக்கு |
குரைத்தல் - நாய் குரைத்தல் | குறைத்தல் - சுருக்குதல் |
செரித்தல் - சீரணமாதல் | செறித்தல் - திணித்தல் |
தரி - அணிந்து கொள் | தறி-வெட்டு |
திரை- அலை | திறை - கப்பம் |
நிரை - வரிசை | நிறை - நிறைத்து வைத்தல் |
பரந்த- பரவிய | பறந்த - பறவை பறந்த |
பரி - குதிரை | பறி -பறித்துக்கொள்ளுதல் |
மரம் - தரு | மறம்- வீரம் |
மரி-இற | மறி - மான்குட்டி |
மரு - மணம் | மறு - தடு |
வருத்தல் - துன்புறுத்தல் | வறுத்தல் - காய்கறிகளை வருத்தல் |
விரல் - கைவிரல் | விறல் - வெற்றி |
குரை - நாய் குரைதல் | குறை - பிறரைக் குறை கூறுதல் |
கரை - பனி கரைதல் | கறை - துணி கறை |
இரை - உணவு | இறை - இறைவன் |
உரை - பேசுதல் | உறை - உறைதல் |
அரை - பாதி | அறை - வீட்டின் அற |
மயங்கொலி தொடர்கள்
- பறவை வானில் பறந்தது. (பரவை / பறவை)
- கதவை மெல்லத் திறந்தான். (திறந்தான் / திரந்தான்)
Please share your valuable comments