பாடத்தலைப்புகள்(toc)
திருஞானசம்பந்தர் பற்றிய ஆசிரியர் குறிப்புகள் TNPSC தமிழ் வரலாறு
பிறப்பு
சீர்காழியிலே அந்தணர் மரபு.
பெற்றோர்
சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகவாய்த் தோன்றினார்.
சிறப்புப் பெயர்கள்
- ஆளுடையபிள்ளை
- காழிவள்ளல்
- ஆதிசங்கரர் இவரைத் 'திராவிட சிசு' என்பர்.
சிறப்புகள்
இளம் வயதிலேயே இறைவன் அருள் பெற்று, 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் திருஞானசம்பந்தர்' என்று திருநாவுகரசரால் அழைக்கப்படுகிறார்.
தமிழ் நாட்டின் பல தலங்களுக்கும் சென்ற இவர், இறுதியில் திருப்பெருமண நல்லூரில் தம் பதினாறாவது வயதில் மணக்கோலத்துடன் இறைவனோடு கலந்தார்.
தேவாரம்
திருஞானசம்பந்தர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் முதல் 3 திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன.
இதில் 384 பதிகங்கள் உள்ளன. இவர் இயற்றின பதிகங்களில் இயற்கை வருணனையும் தத்துவக் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.
பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
சைவ சமயம்
சைவ சமயம் இந்நாட்டில் மீண்டும் தழைக்கப்பாடு பட்டவர்.
பெரியபுராணம் "பிள்ளை பாதி: புராணம் பாதி" என்று இவருடைய வரலாற்றிற்கே சீரிய இடம் தருகிறது.
கூன் பாண்டியன் என்றழைக்கப்படும் நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டியனைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குக் கொணர்ந்தார். அப்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் சிறந்த சிவபக்தர்கள். இந்நிகழ்ச்சியால் அரசியல் செல்வாக்குச் சைவ சமயத்திற்குக் கிட்டிற்று; சமயமும் வளர்ந்தது.
தேவாரம் பற்றிய குறிப்புகள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.தே + ஆரம் இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும்,
தே + வாரம் இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும்
பொருள் கொள்ளப்படும்.
பதிகம்
பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
தொகுத்தவர்
இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
TNPSC previous year questions and answers
1. "ஆளுடையப்பிள்ளை" என்று அழைக்கப்பட்டவர்
A) திருநாவுக்கரசர்
B) திருஞானசம்பந்தர்
C) குலசேகர ஆழ்வார்
D) சீத்தலைச் சாத்தனார்
E) தெரியவில்லை
2. ஆதிசங்கரர் இவரைத் 'திராவிட சிசு' என்பர்.
A) திருநாவுக்கரசர்
B) திருஞானசம்பந்தர்
C) குலசேகர ஆழ்வார்
D) சீத்தலைச் சாத்தனார்
E) தெரியவில்லை
3. "காழிவள்ளல்" என்று அழைக்கப்பட்டவர்
A) திருநாவுக்கரசர்
B) திருஞானசம்பந்தர்
C) குலசேகர ஆழ்வார்
D) சீத்தலைச் சாத்தனார்
E) தெரியவில்லை
4. யாரால் திருஞானசம்பந்தர், "திராவிடச் சிசு'' என்று அழைக்கப்பட்டார்
A) ஆதிசங்கரர்
B) சுந்தரர்
C) திருநாவுக்கரசர்
D) உமறுப்புலவர்
5. கூன் பாண்டியன் என்று அழைக்கபடும் பாண்டிய மன்னன்
A) நின்றசீர் நெடுமாறன்
B) இளங்கோவடிகள்
C) அரிமர்த்தன பாண்டியன்
D) சேரன் செங்குட்டுவன்
6. நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை சமண சமயத்திலில் இருந்து சைவ சமயத்திற்க்கு மாற்றியவர்
A) திருநாவுக்கரசர்
B) திருஞானசம்பந்தர்
C) குலசேகர ஆழ்வார்
D) சீத்தலைச் சாத்தனார்
E) தெரியவில்லை
7. திருஞானசம்பந்தர், ' நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் திருஞானசம்பந்தர்' என்று யாரால் அழைக்கப்படுகிறார்.
A) அப்பர் ( திருநாவுக்கரசர்)
B) சுந்தரர்
C) மாணிக்கவாசகர்
D) திருஞானசம்பந்தர்
E) தெரியவில்லை
8. திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகங்கள் மொத்தம்
A) 384
B) 350
C) 375
D) 319
E) தெரியவில்லை
9. திருஞானசம்பந்தர் சிறப்பு பெயர்களில் பொருந்தாதது?
A) ஆளுடையபிள்ளை
B) காழிவள்ளல்
C) திராவிட சிசு
D) ஆளுடைய அரசர் ( திருநாவுக்கரசரின் சிறப்பு பெயர்)
10. தேவாரம் பாடிய மூவருள் பொருந்தாதவர்?
A) அப்பர் ( திருநாவுக்கரசர்)
B) சுந்தரர்
C) மாணிக்கவாசகர்
D) திருஞானசம்பந்தர்
E) தெரியவில்லை
11. எந்த நூல் "பிள்ளை பாதி: புராணம் பாதி" என்று திருஞானசம்பந்தர் பற்றி குறிப்பிடுகிறது.
A) பெரியபுராணம்
B) தேவாரம்
C) திருவாசகம்
D) திருக்கோவை
E) தெரியவில்லை

.png)
Please share your valuable comments