இப்பகுதியானது TNPSC குரூப் 4/VAO Exam/ குரூப் 2 2A எழுதுவோர் பயன்பெற வேண்டி 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பாடத்தலைப்புகள்(toc)
வரலாறு என்றால் என்ன?பயிற்சிகள் - 6ம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு TNPSC
கலைச் சொற்கள்
- ஆதாரங்கள் - Sources
- முன்னோர்கள் - Ancestors
- நினைவுச் சின்னம் - Monument
- வரலாற்றாசிரியர் - Historian
- தம்மா - Dharma
- கல்வெட்டு - Inscription
பயிற்சிகள்
சரியான விடையைக் கண்டுபிடி
1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
அ வணிகம்
ஆ. வேட்டையாடுதல்
இ. ஓவியம் வரைதல்
ஈ. விலங்குகளை வளர்த்தல்
கூற்றையும் காரணத்தையும் பொருத்துக. சரியான விடையைக் குறியிட்டுக் காட்டுக
1. கூற்று: பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்.
காரணம்: குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தின.
அ) கூற்று சரி, காரணம் தவறு.
ஆ) கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று தவறு, காரணமும் தவறு.
2. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் அகழாய்வுகள் மூலமாகத் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருள்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
அ) அருங்காட்சியகங்கள்
ஆ) புதைபொருள்படிமங்கள்
இ) கற்கருவிகள்
ஈ) எலும்புகள்
3. தவறான இணையைக் கண்டுபிடி
அ) பழைய கற்காலம் - கற்கருவிகள்
ஆ) பாறை ஓவியங்கள் - குகைச் சுவர்கள்
இ) செப்புத் தகடுகள் - ஒரு வரலாற்று ஆதாரம்
ஈ) பூனைகள் - முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு சரி - நாய்
4. மற்ற தொடர்களிலிருந்து வேறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி
அ) பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
ஆ) குறிப்பதாக வேட்டையாடுதலை ஓவியங்கள் இருந்தன.
இ) பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதலை எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்
ஈ) பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் குகை
2. வரலாற்றின் தந்தை ஹெரோடோடஸ்
3. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு நாய்
4, கல்வெட்டுகள் தொல்லியல் ஆதாரங்கள் ஆகும்.
5. அசோகச் சக்கரத்தில் 24 ஆரக்கால்கள் உள்ளன.
பொருத்துக - பொருத்தப்பட்டுள்ளது
அ) பாறை ஓவியங்கள் - வாழ்க்கை முறையைப்புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
ஆ) எழுதப்பட்டப் பதிவுகள் - செப்பேடுகள்
இ) அசோகர் - மிகவும் புகழ்பெற்ற அரசர்
ஈ) மதச்சார்புள்ள இலக்கியம் - தேவாரம்
சரியா? தவறா?
1. பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.
சரி
2. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
சரி
3. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது.
சரி
Please share your valuable comments